சென்னையில், கடலில் பிளாஸ்டிக் போடுவதை தவிர்ப்பது குறித்து பொதுமக்களுக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மூன்று சிறுவர்கள் சுமார் 18 கிலோ மீட்டர் தூரம் கடலில் நீந்தி கவனத்தை ஈர்த்தனர்.
யானை ஒன்று பிளாஸ்டிக் நெகிழிப் பையை சாப்பிட்டும் வீடியோ வைரலாகியிருக்கும் நிலையில், வனப்பகுதிகளில் அறிவிக்கப்பட்டுள்ள 100 விழுக்காடு நெகிழி தடையை தமிழக அரசு முறையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என மக்கள் நீதிமய்யம் வலியுறுத்தியுள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் சுற்றுச்சூழல் மாசுபாட்டை கட்டுப்படுத்த அபுதாபி முழுவதும் ஒரு முறை மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பைகளுக்கு இன்று முதல் தடை விதிக்கப்படுகிறது.
பிளாஸ்டிக் மாசுபாடு உலகில் பெரும் அச்சுறுத்தலாக மாறி வரும் நிலையில், உலகளவில் செயல்படும் 'Break Free From Plastic' இயக்கம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
இன்று உலகம் முழுவதும் பிளாஸ்டிக் பல்வேறு தேவைகளுக்காக பயன்படுத்தப்படுகிறது. ஆனால் உங்கள் உணவு பொருட்களை அடைக்கும் பிளாஸ்டிக் ஆரோக்கியத்திற்கு மிகவும் ஆபத்தானது. இதனால் மாசு ஏற்படுவது மட்டுமின்றி, தற்போது நம் உடலுக்குள்ளும் செல்ல ஆரம்பித்துள்ளது. இது கேட்பதற்கு சற்று வினோதமாகத் தோன்றலாம். ஆனால் இது முற்றிலும் உண்மை. நாம் நாள் முழுவதும் நிறைய பிளாஸ்டிக் சாப்பிடுகிறோம் என்பது பல ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது.
நொய்டாவில் செயல்பட்டு வரும் ஸ்டார்ட் அப் நிறுவனம் , பிளாஸ்டிக் மற்றும் கண்ணாடி பாட்டில்களுக்கு மாற்றாக காகிதத்தை கொண்டு பாட்டில்களை கண்டுபிடித்து அசத்தியுள்ளனர்.
இலங்கையைச் சேர்ந்த யானைகளின் சில படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. இந்த படங்களில், யானைகள் ஒரு பிளாஸ்டிக் குவியலில் உணவு பொருளை தேடுகின்றன. இந்த யானைகளின் அவல நிலை கண்ணீரை வரவழைக்கிறது
நம்மில் பலருக்கு டிஸ்போஸபிள் பேப்பர் கப் பயன்படுத்தும் பழக்கம் இருக்கிறது. நிறைய விருந்தினர்கள் இருக்கும் போது, காப்பி டீ குடிக்க பேப்பர் கப் தான் நிறைய யூஸ் பண்ணுகிறோம். கப்பை சுத்தம் செய்யும் வேலை மிச்சம் என நினைத்து செய்கிறோம்.
Google, தனது அனைத்துவிதமான பேக்கேஜிங்களில் இருந்து பிளாஸ்டிக்கை அகற்றுவதாக உறுதியளிக்கிறது. தனது அனைத்துவிதமான தயாரிப்புகளிலும் மறுசுழற்சி செய்யக்கூடிய Recyclable Materialகளை பயன்படுத்தப்போகிறது Google.
நாட்டின் 50-க்கும் மேற்பட்ட மையங்களில் இருந்து உருவாகும் பேக்கேஜிங்கில்(packaging) உள்ள அனைத்து ஒற்றை பயன்பாட்டு பிளாஸ்டிக்கையும் நீக்கியுள்ளதாக அமேசான் இந்தியா தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் மட்டுமின்றி ஒட்டுமொத்த உலகிலும் பிளாஸ்டிக் பொருட்களை விட மனிதகுலத்திற்கு மிக மோசமான எதிரி இருக்க முடியாது. ஏற்கனவே இருக்கும் பிளாஸ்டிக் மீதான தடையை மேலும் தீவிரப்படுத்த வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தமிழக அரசிடம் கோரிக்கை வைத்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.