Lok Sabha ELections: அதிமுக கூட்டணிக்கு ஆதரவளிப்பது குறித்து இரண்டு நாட்களில் தெரிவிப்பதாக புரட்சி பாரதம் கட்சியின் தலைவரும், எம்எல்ஏவுமான ஜெகன் மூர்த்தி தெரிவித்திருந்தார். இது அதிமுக -வுக்கு ஒரு நெருடலாக இருந்து வந்தது.
குமரி மாவட்டத்தில் நான்காவது தலைமுறையாக மின்சாரம் கிடைக்காமல் தவிக்கும் வலியஏலா கிராமமக்கள், வாக்கு கேட்டு யாரும் வரவேண்டாம் என ஊர் எல்லையில் பேனர் வைத்துள்ளனர்.
Wife Protest infront of Husband House in Cuddalore: கணவரை தேடி பல இடங்களில் அலைந்த சரண்யா இன்று காலை அரிதாசின் வீட்டிற்கு முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இந்த சம்பவம் சாத்துக்கூடல் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. விருத்தாசலம் காவல்துறையினர் சரண்யாவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். நடந்தது என்ன? இந்த பதிவில் காணலாம்.
சென்னையில் நடுரோட்டில் ரஷ்யாவைச் சேர்ந்த இளைஞர் கடும் போதையில் ரகளை செய்த சம்பவத்தின் வீடியோ வெளியாகியுள்ளது. போதை நகரமாக மாறுகிறதா சென்னை? என்ன நடந்தது?
இந்த முறை மோடி பிரதமராக வரமாட்டார் என்றும், ஸ்டாலின் சொல்பவர்தான் பிரதமராக வருவார் என்றும் கூறி திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் பிரச்சாரம் மேற்கொண்டார்.
SP Velumani, AIADMK: தேசிய அளவில் வேண்டுமானால் பெரிய கட்சியாக பாஜக இருக்கலாம், தமிழ்நாட்டில் அதிமுக தான் பெரிய கட்சி என அதிமுக தலைமை நிலைய செயலாளர் எஸ்பி வேலுமணி தெரிவித்துள்ளார்.
நாகை அருகே அடிப்படை வசதிகளை செய்து தராத மாவட்ட நிர்வாகத்தைக் கண்டித்து, வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி தேர்தலைப் புறக்கணிக்கப் போவதாக கிராம மக்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
Hotel Ceiling Collapse Accident Latest Update : பிரபல ஓட்டலின் மதுபான கூடம் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் மூன்று பேர் உயிரிழந்த நிலையில் மேலாளரை போலீசார் கைது செய்து விசாரணை...
DMK MP Kanimozhi Election Campaign in Coimbatore: கோவை துடியலூர் பேருந்து நிலையம் அருகே திமுக கோவை பாராளுமன்ற வேட்பாளர் கணபதி ராஜகுமாரை ஆதரித்து கனிமொழி எம்பி பிரச்சாரம் மேற்கொண்டார்.
தென் தமிழகத்தின் விருதுநகர் தொகுதி நட்சத்திய தொகுதியாக தற்போது கவனம் பெற்றுள்ளது. அதற்கு முக்கிய காரணம், மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த்தின் மகன் விஜய பிரபாகரனும், ராதிகா சரத்குமாரும் களத்தில் நிற்பது தான்.
MGNREGA Wages Revised : இன்னும் சில வாரங்களில் இந்தியாவில் முதல் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில் மகாத்மாகாந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் கூலி உயர்த்தப்பட்டது சர்ச்சைகளை எழுப்பினாலும், மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
Tamil Nadu Lok Sabha Election 2024: தமிழக முழுவதும் பாஜக மற்றும் கூட்டணி கட்சியரின் மனுக்கள் ஏற்கப்பட்டபோதும் எதிர்க்கட்சிகளான திமுக மற்றும் அதிமுக கட்சிகளின் வேட்பாளர்களின் மனுக்கள் பெரும்பாலான இடங்களில் பரிசீலையில் உள்ளதாக தேர்தல் நடத்தக்கூடிய அதிகாரிகள் தெரிவித்துள்ளதால் கட்சியின் இடையே பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
Lok Sabha Elections: ஆட்சியர் அலுவலக நுழைவாயில் கதவுகள் மூடப்பட்டதால் அமமுகவினருக்கும் போலீசாருக்கும் கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போலீசார் தடையை மீறி ஆட்சியர் அலுவலகத்திற்குள் டிடிவி தினகரனின் பிரசார வேனில் சென்று வேட்புமனுத் தாக்கல் செய்தார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.