புதுமனை புகுவிழாவில் வீட்டிற்குள் பசுவை அழைத்துச் செல்வது ஏன்?

புதுமனை கட்டி குடிபுகும் போது முதலில் பசுமாட்டை உள்ளே அழைத்துச் செல்வது ஏன் தெரியுமா?. காரணம் உள்ளே!!

Last Updated : Apr 20, 2018, 05:36 PM IST
புதுமனை புகுவிழாவில் வீட்டிற்குள் பசுவை அழைத்துச் செல்வது ஏன்? title=

"வீட்டை கட்டிப்பார் கல்யாணம் பண்ணிப்பார்" என்ற பழமொழி அனைவருக்கும் தெரிந்த ஓன்று. இந்த பழமொழிக்கு அர்த்தம் வீடு கட்டுவதும் திருமணம் செய்வது அப்படி சுலபமான காரியம் இல்லை என்பதற்காக கூறியுள்ளனர். நாம் புதுமனை கட்டி குடிபுகும் போது முதலில் பசுமாட்டை உள்ளே அழைத்துச் செல்வது வழக்கம். அப்படி அழைத்து செல்வதால் என்ன பயன் என்று உங்களுக்கு தெரியுமா?. 

இதோ அதன் காரணம்...! 

பசுவின் உடலில் பதினான்கு உலகங்களும் அடக்கம் என்கிறது தர்மசாஸ்திரம். தேவதைகளும் பசுவில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். பசுவின் பாலில் சந்திரனும், நெய்யில் அக்னி தேவனும் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர் என்கிறது வேதம்.பஞ்சகவ்யம், (பால், தயிர், நெய், சாணம், கோமூத்திரம்) அபிஷேகத்துக்கும் உகந்தது, மருந்தாகவும் செயல்பட்டு பிணியை அகற்றும் என்கிறது ஆயுர்வேதம். குளம்படிபட்ட தூசி நமது உடலில் பற்றிக்கொண்டால், நீராடிய தூய்மை உண்டு. மேய்ந்து வீடு திரும்பும் பசுமாடுகளின் குளம்படி பட்டு தூசி மேலே கிளம்பும் வேளையை நல்ல வேளையாக முஹுர்த்த சாஸ்திரம் சொல்லும் (கோதூளி லக்னம்).

பசு மாட்டின் சாணி நெருப்புடன் இணைந்து திருநீறாக மாறுகிறது. நீராடியதும் தூய்மை பெற திருநீறை அணியச் சொல்லும் சாஸ்திரம், நெற்றியில் த்ரிபுண்ட்ரம் இருக்க வேண்டும் என்று வற்புறுத்தும். ஈசனின் உடல் முழுதும் திருநீறு மின்னும். குழந்தைகளின் பயத்தை அகற்ற மந்திரத்தை உச்சரித்து திருநீறு அணிவிப்பது உண்டு.நாம் செய்த பாபம் அறவே அகல பசுவை தானமாக அளிக்கச் சொல்கிறது தர்மசாஸ்திரம். 

ரஜஸ்வலா தோஷ நிவர்த்திக்கு பசுவை கொடையாக வழங்கச் சொல்லும் சாஸ்திரம். பசு வளர்ப்பதை அறமாக எண்ணினான் கண்ணன். கோபாலன் என்ற பெயர் அவனது பசு பணிவிடையை சுட்டிக்காட்டும். பசுவின் காலடி பட்ட இடம் பரிசுத்தமாகும். புதுமனை புகுவிழாவில் மனையின் தூய்மைக்குப் பசு வேண்டும். முதலில் பசுமாடு மனையில் புகுந்து தூய்மை பெற்ற பிறகு நாம் நுழைவது, நமது முன்னேற்றத்துக்கு அத்தாட்சி. வீடு விளங்க பசுமாடு வேண்டும். பசுவை நான்கு கால் பிராணியாகவும், விலங்கினமாகவும் மட்டுமே பார்க்கக் கூடாது. அதில் ஒட்டுமொத்த தேவதைகளும் அடங்கியுள்ளது. 

புதுமனையில் பசுவின் வருகையானது செல்வத்தில் வரவாக மட்டுமின்றி மகிழ்ச்சியின் வரவாகவும் அமையும். ஆகையால் புதுமனைப் புகுவிழாவில் முதலில் வீட்டுக்குள் நுழைவது பசுவாக இருக்க வேண்டும்.

Trending News