ஆணுறுப்பை அறுத்துக்கொண்ட பாதிரியார்... பொறுத்து பார்த்தும் முடியவில்லை - என்ன பிரச்னை?

Bizarre News: பாதிரியார் ஒருவர் தனது பிறப்புறுப்பை அறுத்துக்கொண்டு ரத்த வெள்ளத்தில் மிதந்த சம்பவம் செக் குடியரசு நாட்டில் நிகழ்ந்துள்ளது. 

Written by - Sudharsan G | Last Updated : Jan 8, 2024, 04:27 PM IST
  • பாதிரியார் அதன்பின் 10 நாள்களுக்கு கோமாவில் உள்ளார்.
  • அவருக்கு உண்ணி சார்ந்த நோய் ஒன்று இருந்துள்ளது.
  • இந்த நோயின் தாக்கத்தினால் கூட அவர் இந்த சம்பவத்தை செய்திருக்கலாம்.
ஆணுறுப்பை அறுத்துக்கொண்ட பாதிரியார்... பொறுத்து பார்த்தும் முடியவில்லை  - என்ன பிரச்னை? title=

Bizarre News: செக் குடியரசு நாட்டைச் சேர்ந்த பாதிரியார் ஒருவர், டிக் கடியால் மனநலம் பாதிக்கப்பட்டு, தனது சொந்த ஆணுறுப்பை கத்தியால் அறுத்துக் கொண்டுள்ளார். தெற்கு பொஹேமியாவில் உள்ள செஸ்கோபுடெஜோவிக் என்ற பகுதியில்தான் இந்த பயங்கர சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இந்த வினோத சம்பவம் குறித்து அந்நகரின் மேயர் உள்ளூர் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில்,"என்ன நடந்தது என்பது எங்களுக்கு சரியாகத் தெரியவில்லை, இது உடல்நலப் பிரச்சனையாக இருக்கலாம்" என்றார். ஆனால், இதுவரை வெளியான தகவல்களின் அடிப்படையில், முன் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டத்திற்கு பாதிரியார் வராதபோது ஏதோ தவறு இருப்பதாக மக்கள் முதலில் உணர்ந்தனர். துணை மருத்துவர்கள் அவரது வீட்டிற்கு விரைந்தனர், அங்கு அவரது ஆண்குறி துண்டிக்கப்பட்ட நிலையில், இரத்த வெள்ளத்தில் அவரைக் கண்டுள்ளனர் என மேயர் தெரிவித்தார். 

பாதிரியார் உடனடியாக அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டார், அங்கு அவரது பிறப்புறுப்பில் காயம் ஏற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. அவரது உடல் நிலை மோசமடைந்ததால், அந்த நபர் கோமா நிலைக்குத் தள்ளப்பட்டு 10 நாட்களுக்கு வென்டிலேட்டரில் வைக்கப்பட்டார் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது கோமா நிலை காரணமாக, அதற்கு முன்பு அவருக்கு என்ன நடந்தது என்பதைக் கண்டுபிடிப்பதில் மருத்துவர்களுக்கு சிரமம் ஏற்பட்டது. 

மேலும் படிக்க | ஜப்பானில் மோதிக்கொண்ட 2 விமானம்! தீப்பிடித்து எறிந்த பாகம்.. 379 பயணிகளின் நிலை என்ன?

"அவர் அவசர சிகிச்சை பிரிவில் மயக்கமடைந்து கிடக்கிறார். இந்த சூழ்நிலைகள் காரணமாக, உண்மையில் என்ன நடந்தது என்பதைக் கண்டுபிடிக்க இயலவில்லை" என அதிகாரி ஒருவர் தகவல் தெரிவித்திருந்தார். பாதிரியார் TBE என்றும் அழைக்கப்படும் உடல் முழுவதும் உண்ணி பரவும் என்செபாலிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டிருந்தார் என மருத்துவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்" என்றும் அந்த அதிகாரி கூறினார். 

இந்த நோய் அதன் மேம்பட்ட நிலைகளில், ஆளுமை மாற்றங்களையும் மனநோயையும் கூட தூண்டும் என கூறப்படுகிறது. இதற்கிடையில், சம்பவத்திற்கு முந்தைய நாள் பாதிரியார் உடல்நலக் கோளாறுகளை எதிர்கொண்டதாகவும் கூறப்படுகிறது. அவர் வசிக்கும் பகுதியில் அதிக TBE நோயாளிகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. 

பாதிரியாரின் தற்போதைய நிலை நரம்பு மண்டலத்திற்கு மைய சேதத்தை குறிக்கிறது, ஒருவேளை TBE காரணமாக இருக்கலாம். இந்த சம்பவம் கிழக்கு ஐரோப்பாவிற்கு அப்பால் விரிவடையும் உண்ணி தொடர்பான நோய்களுடன் தொடர்புடைய அபாயங்கள் குறித்தும் நினைவூட்டுகிறது.

உண்ணி தொடர்பான பிரச்சினைகள் உலகளாவிய கவலையாக மாறிய நிலையில், வல்லுநர்கள் தடுப்பு நடவடிக்கைகளை வலியுறுத்துகின்றனர். அமெரிக்காவில் உண்ணி மூலம் பரவும் நோய்களின் அதிகரிப்பு, குறிப்பாக லைம் நோய், பொருத்தமான ஆடைகளை அணிவது மற்றும் விரட்டிகளைப் பயன்படுத்துவது போன்ற பாதுகாப்பு நடவடிக்கைகளின் அவசியத்தை வலியுறுத்துகிறது. வெளிப்புற நடவடிக்கைகளுக்குப் பிறகு விழிப்புடன் இருக்கும் உடல் சோதனைகள் மற்றும் சரியான உண்ணி அகற்றும் நுட்பங்கள் உடல்நல அபாயங்களைக் குறைக்க முக்கியம்.

மேலும் படிக்க | Elections: இன்று வாக்குப்பதிவு, நாளை முடிவுகள்... ஆனால் பிரதமர் இவர் தான்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News