மேற்கத்திய நாடுகளின் எரிச்சலை கிளப்பும் இரான்! இஸ்பஹான் நகரில் அணுஉலை கட்டுமானம்

Nuclear research reactor Construction: அணுஉலையின் அடித்தளத்திற்கான கான்கிரீட் ஊற்றும் செயல்முறை இஸ்பஹான் தளத்தில் தொடங்கியது, என்று ஈரானின் அணுசக்தி அமைப்பு தெரிவித்துள்ளது

Written by - Malathi Tamilselvan | Last Updated : Feb 6, 2024, 10:26 AM IST
  • இரானுடனான அணுசக்தி ஒப்பந்தம்
  • புதிய அணு உலையை கட்டமைக்கும் இரான்
  • மேற்கத்திய நாடுகளின் கண்டனம்
மேற்கத்திய நாடுகளின் எரிச்சலை கிளப்பும் இரான்! இஸ்பஹான் நகரில் அணுஉலை கட்டுமானம் title=

இரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தை உருவாக்குவதற்கான முயற்சிகள் இதுவரை வெற்றியளிக்காத நிலையில், புதிய அணு உலை கட்டுமானத்தைத் இரான் தொடங்குகியுள்ளது. இதனால் மேற்கத்திய நாடுகளின் எதிர்ப்பு இரானுக்கு மேலும் வலுக்கிறது. அணுமின் நிலைய வளாகத்தை கட்டுவதாக தெஹ்ரான் அறிவித்த சில நாட்களுக்குப் பிறகு இந்த அறிவிப்பு வந்துள்ளது.
 
நேற்று (2024 பிப்ரவரி 5, திங்கள்கிழமை) இஸ்பஹானில் ஒரு புதிய அணு ஆராய்ச்சி உலையின் கட்டுமானத்தைத் தொடங்கியதை இரான் உறுதிப்படுத்தியுள்ளது. 10 மெகாவாட் வசதி ஒரு சக்திவாய்ந்த நியூட்ரான் மூலத்தை உருவாக்க புதிய அணு உலை கட்டமைக்கப்படுகிறது என்று இரான் அரசு ஊடகமான IRNA தெரிவித்துள்ளது.

அணுஉலையின் அடித்தளத்திற்கான கான்கிரீட் ஊற்றும் செயல்முறை இஸ்பஹான் தளத்தில் தொடங்கியது, என்று ஈரானின் அணுசக்தி அமைப்பின் தலைவர் முகமது எஸ்லாமி தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. அமெரிக்கத் தடைகளை மீறி, இந்த அணு உலை கட்டப்படுகிறது என்பது மேற்கத்திய நாடுகளுக்கு எரிச்சலூட்டுவதாகவே இருக்கிறது.

புதிய எரிபொருள் மற்றும் அணுசக்திப் பொருள் சோதனைகள் மற்றும் தொழில்துறை கதிரியக்க ஐசோடோப்புகள், கதிரியக்க மருந்துகளின் உற்பத்திக்கு இந்த அணுஉலை உதவும் என்று கூறப்படுகிறது. இந்த அணுமின் நிலைய வளாகத்தின் கட்டுமானமானது 5,000 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட நான்கு தனித்தனி ஆலைகளை உள்ளடக்கியதாக இருக்கும்.  

மேலும் படிக்க | இஸ்லாமிய நாடான அபுதாபியில் பிரம்மாண்ட இந்து கோயில்... பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்!

2041ஆம் ஆண்டிற்குள் நாட்டில் 20,000 மெகாவாட் அணுசக்தி உற்பத்தித் திறனை நாடு எட்ட வேண்டும் என்று இரான் விரும்புகிறது. அமெரிக்கா, பிரான்ஸ், சீனா, ரஷ்யா மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகளில் மட்டுமே 20,000 மெகாவாட் அணுசக்தி திறன் நிறுவப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அணுசக்தி நிலையங்களை விரைவாக கட்டுவது என்பது ஈரான் தனது அணு ஆயுதத் திட்டத்தை மேம்படுத்த விரும்புவதாகக் கூறுகிறது - இது மேற்கத்திய முகாமுடன் நன்றாகப் போகாமல் போகலாம்.

இரானின் அணுசக்தி லட்சியங்கள்
தெஹ்ரான் அணு ஆயுதங்களை உருவாக்குவதாக மேற்கத்திய நாடுகள் நீண்ட காலமாக குற்றம் சாட்டி வருகின்றன என்றாலும், இதை இரான் தொடர்ந்து மறுத்து வருகிறது. கூட்டு விரிவான செயல் திட்டம் (JCPOA) என்றும் அழைக்கப்படும் 2015 இரான் அணுசக்தி ஒப்பந்தத்தை மீண்டும் கொண்டு வர விரும்புகிறது.

மேலும் படிக்க | வடகொரியாவின் கொடூரமான தொழிலாளர் முகாம்கள்: தப்பி பிழைக்க வாய்ப்பே இல்லை

ஆனால்,எந்த உடன்பாடும் எட்டப்படுவதற்கு முன், அணுசக்தி கண்காணிப்பு அமைப்பான IAEA விசாரணையை முடிக்க வேண்டும் என்று ஈரான் கருதுகிறது. குறிப்பிடத்தக்க வகையில், 2018 ஆம் ஆண்டில், முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்த ஒப்பந்தத்தில் இருந்து விலகி இரான் மீது கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்தது.

கடந்த ஆண்டு ஜெர்மனி, பிரான்ஸ் மற்றும் பிரிட்டன் ஆகியவை இரான் மீதான பாலிஸ்டிக் ஏவுகணை மற்றும் அணு ஆயுத பரவல் தொடர்பான தடைகளை நீக்க மறுத்ததும் குறிப்பிடத்தக்கது.

E3 என அழைக்கப்படும் மூன்று ஐரோப்பிய நாடுகள், ஐரோப்பிய ஒன்றிய வெளிவிவகாரத் தலைவர் ஜோசப் பொரலுக்கு கடிதம் எழுதி, டெஹ்ரான் ஒப்பந்தத்தை கடுமையாக மீறுவதாகக் கூறியது, இதன் பொருள் இரான் மீதான பொருளாதாரத் தடைகளை நீக்க முடியாது.

மேலும் படிக்க | இந்தியாவுடன் நெருங்கும் அண்டை நாடு! சீனாவிற்கு கடுப்பேற்றும் இலங்கை அரசியல்வாதிகள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News