ஆத்தாடி... ஒரு பெண்ணுக்கு 1,41,078 ஆண்டுகள் சிறை தண்டனை - அப்படி என்ன தவறு செய்தார்?

Bizarre News: ஒரு பெண்களுக்கு சுமார் 1 லட்சத்து 41 ஆயிரத்து 78 ஆண்டுகள் சிறை தண்டனை முன்பு விதிக்கப்பட்டிருக்கிறது. இதுகுறித்த முழு விவரங்களையும் இங்கு காணலாம். 

Written by - Sudharsan G | Last Updated : Aug 2, 2023, 05:25 PM IST
  • இவர் 16 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களை ஏமாற்றியுள்ளார்.
  • சுமார் 16.5 பில்லியன் ரூபாயை அவர் மோசடி செய்துள்ளார்.
  • கேரளாவை சேர்ந்த சிலர் இவரின் மோசடி வலை சிக்கி பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.
ஆத்தாடி... ஒரு பெண்ணுக்கு 1,41,078 ஆண்டுகள் சிறை தண்டனை - அப்படி என்ன தவறு செய்தார்? title=

Bizarre News: மக்களை ஏமாற்றியதற்காக ஒருவருக்கு எவ்வளவு தண்டனை கிடைக்கும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள். இதற்குப் பதிலை தேடினால், வெவ்வேறு நாடுகளின் சட்டத்தின்படி, 6 மாதங்கள், ஒரு வருடம் அல்லது அதற்கு மேல் என்றும் சொல்லலாம். ஆனால் நிதி மோசடி குற்றச்சாட்டின் பேரில் ஒருவருக்கு 1 லட்சத்து 41 ஆயிரத்து 78 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதை நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?. நீங்கள் வாசித்தது சரிதான், அத்தனை ஆண்டுகள் ஒருவருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 

இவ்வளவு நீண்ட கால சிறைவாசமா என சந்தேகம் எழலாம். ஆனால் ஆச்சரியப்படத் தேவையில்லை, ஏனென்றால் அது 100% உண்மை. இதுகுறித்த முழு விவரங்களையும் இதில் காணலாம். 

வரலாற்றில் மிக நீண்ட தண்டனை!

சாமோய் திப்யாசோ என்ற பெண்ணுக்கு இந்த தண்டனை தாய்லாந்து நாட்டில் விதிக்கப்பட்டுள்ளது. இவர் 16 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களை ஏமாற்றியுள்ளார். இதற்காக அவருக்கு 1,41,078 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இவர்களிடம் இருந்து சுமார் 16.5 பில்லியன் ரூபாயை அவர் பறித்துள்ளார் என தெரிவிக்கப்படுகிறது. சேமிப்பு திட்டம் என்ற பெயரில் திப்யாசோ இந்த பண மோசடி சதித்திட்டத்தை தீட்டியுள்ளார். நிதி நிறுவனம் மற்றும் முதலீட்டு திட்டத்தை நடத்தி மக்களை ஏமாற்றினார். இந்தியாவில், இந்த சேமிப்புத் திட்டங்கள் 'சிட் ஃபண்டுகள்' என்று அழைக்கப்படுகின்றன. 

மேலும் படிக்க | சாகும் முன் இன்ஸ்டா பிரபலம் பாலோ செய்த டயட் என்ன? ஷாக்கான மருத்துவர்கள்!

இந்தியாவுடனான உறவுகள்

தாய்லாந்தைச் சேர்ந்த சாமோய் திப்யாசோவுக்கு 1989-இல் நீதிமன்றம் தண்டனை வழங்கியது குறிப்பிடத்தக்கது. அந்த 'சிட் ஃபண்ட்' நிறுவனம் மூலம், இந்தியாவின் கேரளாவைச் சேர்ந்த பலர் பலியாகினர். உயர்தரப் பொழுதுபோக்கைக் கொண்ட, உயரடுக்கு வகுப்பைச் சேர்ந்த இந்தப் பெண், தங்கள் முதலீட்டுக்குப் பதில் மக்களைக் கோடீஸ்வரர்களாக்குவது போன்ற ஏமாற்று வேலைகளை செய்துள்ளார். முதலீட்டிற்குப் பதிலாக, சில காலத்திற்குப் பிறகு அதிக வருமானம் கொடுக்கத் தொடங்கும் அத்தகைய பத்திரம் உங்களுக்கு வழங்கப்படும் என்று அவர் கூறியிருந்தார்.

மோசடி நடந்தது எப்படி?

திப்யாசோ அப்போது தாய்லாந்தின் அரசு எண்ணெய் நிறுவனமான தாய்லாந்தின் பெட்ரோலிய ஆணையத்தின் ஊழியராக இருந்தார். இந்த நிறுவனம் இப்போது PTT என்று அழைக்கப்படுகிறது. மோசடியை முறையானதாகக் காட்ட ராயல் தாய் விமானப்படையில் உள்ள தொடர்புகளைப் பயன்படுத்தினார் திப்யாசோ. 

ஆவணங்களில் அரசு நிறுவனத்தின் பெயர் இருந்ததால் ஆயிரக்கணக்கான மக்கள் அதன் மீது முதலீடு செய்ய வந்து தங்களின் பணத்தை அதில் பணயம் வைத்தனர். தாய்லாந்தின் பெரிய பிரமுகர்களின் பெயர்கள் முதலீடு என்ற பெயரில் கொள்ளையடிக்கப்பட்டன. இருப்பினும், 1980களில், இந்த மோசடி முறியடிக்கப்பட்டதும், சிட் ஃபண்ட் நிறுவனம் மூடப்பட்டது. 

இந்த குற்றம் சாட்டப்பட்ட பெண் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த குற்றச்சாட்டின் பேரில் அவருக்கு கடும் தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால் சில வருடங்களில் அவள் வெளியேறினாள். உண்மையில், இந்த வழக்கு வெளியான பிறகு, மோசடி வழக்கில் அதிகபட்சமாக இருபது ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும் ஒரு சட்டம் நிறைவேற்றப்பட்டது.

மேலும் படிக்க | இறக்கும் தருவாயில் இருப்பவரிடம் இந்தியில் பேசியதால் வேலையை இழந்த நபர்!
 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News