அஜித் தோவல் வாங் யீ சந்திப்பு... இணைந்து பணியாற்ற பரஸ்பர மரியாதை - புரிதல் அவசியம்!

சீன கார் நிறுவன BYD திட்டத்தை இந்தியா நிராகரித்த நிலையில், சீனாவைச் சேர்ந்த வாங் யீ, இந்தியாவின் NSA அஜித் தோவலை மாநாட்டின் போது சந்தித்தார்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jul 25, 2023, 10:00 AM IST
  • பிரிக்ஸ் நாடுகளின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் (NSA) மாநாடு தற்போது தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது.
  • தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் BRICS நாடுகளின் NSA உச்சி மாநாடு
  • சீனாவைச் சேர்ந்த வாங் யீ, இந்தியாவின் NSA தோவலை மாநாட்டின் போது சந்தித்தார்
அஜித் தோவல் வாங் யீ சந்திப்பு... இணைந்து பணியாற்ற பரஸ்பர மரியாதை - புரிதல் அவசியம்! title=

ஜோகன்னஸ்பர்க்: பிரிக்ஸ் நாடுகளின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் (என்எஸ்ஏ) மாநாடு தென் ஆப்ரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் நடந்தது. இந்த மாநாட்டின் போது, இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல்,  சீனாவின் வெளிநாட்டு விவகாரங்களுக்கான ஆணையத்தின் தலைவர் வாங் யீயை சந்தித்தார். வாங் யீ சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழுவின் மூத்த அதிகாரியும் ஆவார்.  மாநாட்டின் போது, ​​இந்தியா-சீனா தொடர்பான எல்லைப் பிரச்சனை குறித்தும் இரு தரப்புக்கும் இடையே ஆலோசிக்கப்பட்டுள்ளது. இரு நாடுகளுக்கிடையேயான உறவை ஸ்திரப்படுத்துமாறு தோவலிடம் வாங் கேட்டுக் கொண்டார். இதற்கு பதிலளித்த தோவல், இரு நாடுகளின் பரஸ்பர நலன்களையும் குறிப்பிட்டார். சீன கார் தயாரிப்பு நிறுவனமான BYD இன் பில்லியன் டாலர் திட்டத்தை இந்தியா நிராகரித்துள்ள நிலையில் இந்த சந்திப்பு நடந்துள்ளது.

பரஸ்பர நம்பிக்கைக் கொள்கைகளை உருவாக்குதல்

வாங் யியின் அறிக்கையை சீனாவின் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ளது. சந்திப்பின் போது, பரஸ்பர நம்பிக்கையை வளர்க்கும் கொள்கைகளை வகுக்குமாறு தோவலிடம் யி கேட்டுக் கொண்டார். இதனுடன், பரஸ்பர ஒத்துழைப்பையும் கவனித்துக் கொள்ள வேண்டும். இரு நாட்டுத் தலைவர்களும் எடுத்த மூலோபாய முடிவை இரு தரப்பினரும் பின்பற்ற வேண்டும் என்று வாங் கூறினார். இதன் கீழ், 'சீனாவும் இந்தியாவும் அச்சுறுத்தலாக இல்லை, ஆனால் பரஸ்பரம் வளர்ச்சி வாய்ப்புகளை வழங்குகின்றன' என்று தெளிவுபடுத்தப்பட்டது. சில நாட்களுக்கு முன்பு, சீன எலக்ட்ரிக் கார் நிறுவனமான BYD இன் திட்டம் இந்திய தரப்பில் இருந்து நிராகரிக்கப்பட்டது. சீனாவின் அதிகாரப்பூர்வ குளோபல் டைம்ஸ்வெளியிட்ட செய்தியில், இந்தியா BYD ஐ விட டெஸ்லாவை விரும்புகிறது. டெஸ்லா மற்றும் BYD இரண்டையும் இந்தியா வித்தியாசமாக நடத்துவது ஆச்சரியமாக உள்ளது என அந்த செய்தியில் குறிப்பிட்டிருந்தது.

வாங்குக்கு பதிலளித்த டோவல் 

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் பரந்த பொதுவான நலன்கள் உள்ளன என்று அஜித் தோவல் கூறினார். வாங் யீ சீனாவின் முன்னாள் வெளியுறவு அமைச்சராகவும் இருந்துள்ளார். இரு தரப்பினரின் விதிகளும் ஒன்றோடொன்று நெருக்கமாக இணைக்கப்பட்டுள்ளன என்று தோவல் கூறினார். அத்தகைய சூழ்நிலையில், மூலோபாய பரஸ்பர நம்பிக்கையை மீண்டும் கட்டியெழுப்புவது மற்றும் பொதுவான வளர்ச்சியை தேடுவது அவசியம். லைன் ஆஃப் கன்ட்ரோல் (எல்ஏசி) நிலைமைக்கு தீர்வு காண சீனாவுடன் இணைந்து பணியாற்ற இந்தியா தயாராக இருப்பதாக வாங்கிடம் டோவல் தெளிவுபடுத்தினார். புது தில்லி மற்றும் பெய்ஜிங்கில் பரஸ்பர மரியாதை மற்றும் பரஸ்பர புரிதல் தேவை என்று தோவல் கோடிட்டுக் காட்டினார். உலக அமைதி மற்றும் செழுமையைப் பேணுவதற்கு பெய்ஜிங் நெருக்கமாக பணியாற்ற வேண்டும் என்றார். எல்லைப் பகுதிகளில் உள்ள நிலையை மாற்றும் முயற்சியை சீனா நிறுத்தினால் மட்டுமே, இந்தியா மற்றும் சீனா இடையேயான உறவு இயல்பு நிலைக்குத் திரும்பும் என இந்தியா பலமுறை தெளிவுபடுத்தியுள்ளது. குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | சூரியனை விட 10 பில்லியன் மடங்கு ஒளி கொண்ட பிரம்மாண்ட ‘இருண்ட நட்சத்திரங்கள்

மூன்று வருடங்களாக உறவில் விரிசல்

கிழக்கு லடாக்கில் சர்ச்சைக்குரிய எல்லையில் 2020 இல் நடந்த கால்வன் வன்முறைக்குப் பின்னர் இரு அண்டை நாடுகளுக்கிடையேயான உறவுகள் குறிப்பாக சமீப ஆண்டுகளில் மோசமாகி வருகின்றன. இதில், வன்முறையில் குறைந்தது 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். சீனா மற்றும் இந்தியா தரப்பில் இருந்து பேச்சுவார்த்தைக்கான தொடர் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஜூலை தொடக்கத்தில், ஜகார்த்தாவில் நடந்த ஆசியான் வெளியுறவு அமைச்சர்களின் கூட்டத்தின் ஓரத்தில் இந்தியாவின் வெளியுறவு அமைச்சர் எஸ் ஜெய்சங்கரை வாங் சந்தித்தார். ஜெய்சங்கருடனான தனது சந்திப்பில், இந்தியா சீனாவை பாதியிலேயே சந்தித்து, இரு தரப்புக்கும் ஏற்றுக்கொள்ளக்கூடிய எல்லைப் பிரச்சனைக்குத் தீர்வு காண வேண்டும் என்று வாங் வலியுறுத்தினார்.

மேலும் படிக்க | தரம் குறைந்த வீடியோக்களையும் உயர் தரமாக்கும் சிறந்த AI வீடியோ எடிட்டிங் சாப்ட்வேர்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News