சத்தீஸ்கர் மாநிலம் பச்சிலை பகுதியில் காவலர்கள் சென்ற பேருந்து தடம்புரண்டு விபத்துக்குள்ளானதில் 15 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பச்சிலை - தண்டேவாடா சலையில் காவலர்களை கொண்டு பயணித்த பேருந்து ஒன்று தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த 15 காவலர்கள் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டனர்.


விபத்தில் காயமடைந்த காவலர்களை அப்பகுதி மக்கள் அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு கொண்டுச் சென்று அனுமதித்தனர். விபத்திற்கான காரணம் குறித்த தகவல்கள் இல்லை. 


இச்சம்பவம் தொடர்பாக மேற்கொண்டு விசாரணை நடத்தப்படவுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது!