ரத யாத்திரைக்கு எதிர்ப்பு தெரிவித்து மு.க.ஸ்டாலின் மற்றும் திமுக எம்எல்ஏக்கள், தலைமைச் செயலக வளாகத்தைக் கடந்து, ராஜாஜி சாலையில் மறியிலில் ஈடுபட்டனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதனையடுத்து மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து முழக்கமிட்டு மறியலில் ஈடுபட்ட மு.க.ஸ்டாலின் மற்றும் திமுக எம்எல்ஏக்கள் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்டனர்.


இந்நிலையில் தலைமைச் செயலகம் அருகே நேற்று மறியலில் ஈடுபட்ட மறியலில் ஈடுபட்ட திமுக செயல் தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட 75 திமுக எம்எல்ஏக்கள் மீது கோட்டை காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அனுமதியின்றி ஒன்று கூடுதல், போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் கோட்டை காவல் நிலைய காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.