காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காத மத்திய அரசை கண்டித்து தமிழகத்தில் திமுக, காங்கிரஸ், மதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும், பல்வேறு அமைப்புகளும் போராட்டங்களை தீவிரமாக நடத்தி வருகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்நிலையில், காவிரி விவகாரம் தொடர்பாக நடிகர் பிரகாஷ் ராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழக மற்றும் கன்னட மக்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்:_


அதில் அவர் கூறியுள்ளதாவது:- தண்ணீருக்காக மூன்றாம் உலகப்போர் நடக்கும் என்று அறிஞர்கள் எச்சரிக்கிறார்கள். ஆனால் இந்தியாவில் பல ஆண்டுகளாக உள்நாட்டு போராக நடந்து வருகிறது. 


வறட்சி காலத்தில் தமிழகத்திலும் கர்நாடகத்திலும் தண்ணீர் பிரச்னை வரத்தொடங்குகிறது. இந்த போராட்டத் தீயை மழையால் மட்டுமே அணைக்க முடிகிறது எனக் கூறியுள்ளார்.


காவிரி நீரிலிருந்து அரசியலை அகற்றுங்கள் எல்லாம் தானாக சரியாகும். ஒரு தாய்ப்பால் குடித்த சகோதரர்கள் சண்டையிட்டுக் கொள்ளக்கூடாது என்றும், ஒரு நதி நீரைக் குடித்து அதில் விவசாயம் செய்து வாழ்ந்த மக்கள் சண்டையிடுவது முறையல்ல எனவும் அவர் கூறியுள்ளார். 


மேலும், இது தொடர்பாக அவர் ஒரு அறிக்கை ஒன்றையும் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.