சேலம் கன்னங்குறிச்சி பகுதியில் உள்ள மூக்கனேரியை நடிகர் சிலம்பரசன் நேரில் சென்று பார்வையிட்டார். இந்த ஏரியானது சமூக ஆர்வலர் பியூஸ் மானுஷ் மற்றும் சேலம் மக்கள் குரல் அமைப்பினர் தத்தெடுத்து, சீரமைத்து, முன்மாதிரி ஏரியாகப் பராமரித்து வருகின்றனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த நிகழ்வின்போது சமூக ஆர்வலர் பியூஸ் மானுஷ் அவர்கள் மூக்கனேரியில் செய்த பணிகள் குறித்து நடிகர் சிம்புவுவிடம் விளக்கினார். இந்த பயணத்தினை அடுத்து நடிகர் சிம்பு அவர்கள் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் தெரிவிக்கையில்...


"காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்து நான் தெரிவித்த கருத்துக்கு கர்நாடக மக்கள் பெருமளவில் வரவேற்பு அளித்தனர். இந்த நிகழ்விற்கு பின்னர் நீர் நிலைகளை சீரமைக்கும் பணியில் ஈடுபட இருக்கின்றேன், சேலம் மக்கள் தாமாகவே முன்வந்து ஏரிகளை தூய்மைப்படுத்தியுள்ளனர். இந்த விவரம் குறித்து சமூக வலைதளத்தில் பார்த்தேன், எனவே நேரில் பார்வையிட்டு என் பணிக்கான ஆரம்ப புள்ளியை ஆரம்பித்துள்ளேன்" என தெரிவித்தார்.


இதனையடுத்து நடிகர் சிலம்பரசன் அம்மாபேட்டை ஏரி, குமரகிரி ஏரி ஆகியவற்றையும் நேரில் சென்று பார்வையிட்டார்.