சென்னை: TNPSC குரூப் 1 தேர்வாளர்களுக்கான வயது வரம்பை உயர்த்தி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு விடுத்துள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழக சட்டப்பேரவையில் இன்றைய கூட்டத்தின் போது உறையாற்றி அவர் TNPSC எனப்படும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நடத்தப்படும் குரூப் 1 தேர்வு எழுதும் தேர்வாளர்களுக்கான வயது வரம்பை உயர்த்தி அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.


இந்த அறிவிப்பின் படி SC., ST., பிரிவு தேர்வாளர்களுக்கான வயது வரம்பு 35-லிருந்து 37-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. பிற பிரிவினருக்கு 30-ல் இருந்து 32-ஆக உயர்த்தப்பட்டுள்ளது.


இந்த மாற்றமானது குரூப் 1, 1ஏ, 1பி தேர்வை எழுதுவோருக்கு பொருந்தும் எனவும், DSP துணை ஆட்சியர் உள்ளிட்ட உயர் பதவிகள் நிரப்பப்படும் TNPSC குரூப் 1 தேர்வாளர்களுக்கும் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்த வயது வரம்பு உயர்வினை குறித்து பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கைகள் வந்த வன்னம் இருந்ததால் இந்த அறிவிப்பு கொண்டுவரப்பட்டுள்ளதாக தமிழக அரசில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்த அறிவிப்பானது குரூப் 1 தேர்வு எழுத முன் வரும் கிராமப்புற மாணவர்களுக்கு மிகுவும் பயனுள்ளதாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.