7வது ஊதியக் கமிஷன் சமீபத்திய செய்தி: வரும் ஆண்டு மத்திய அரசு ஊழியர்களுக்கு பல மகிழ்ச்சிகரமான செய்திகள் கிடைக்கவுள்ளன. 2023 ஆம் ஆண்டில் அவர்களது ஊதியத்தில் அபரிமிதமான ஏற்றம் இருக்க வாய்ப்புகள் உள்ளன. மேலும், இன்னும் பல நல்ல செய்திகளை அவர்கள் பெறக்கூடும். ஆண்டின் தொடக்கத்திலேயே அகவிலைப்படி அதிகரிப்பு என்ற பெரிய பரிசை ஊழியர்கள் பெறுவார்கள். மத்திய ஊழியர்களின் நன்மைக்காக அரசு மொத்தம் 3 முடிவுகளை எடுக்கக்கூடும். இவற்றில் மிகப்பெரிய நன்மை ஊதியத்தின் வடிவில் கிடைக்கும். ஃபிட்மெண்ட் ஃபாக்டரில் மாற்றத்திற்கான கோரிக்கை நீண்ட காலமாக இருந்து வருகிறது. இது குறித்தும் 2023-ம் ஆண்டு அரசு முடிவெடுக்கக்கூடும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

2024 தேர்தலுக்கு முன் மத்திய அரசு ஊழியர்களுக்கு அரசு பல பரிசுகளை வழங்கலாம் என நிபுணர்கள் கருதுகின்றனர். இது தவிர, அகவிலைப்படி, பழைய ஓய்வூதியத் திட்டம் குறித்தும் முடிவு எடுக்கப்படலாம்.


ஃபிட்மெண்ட் ஃபாக்டர் அதிகரிக்குமா?


மத்திய அரசு ஊழியர்களுக்கு மிகப்பெரிய பரிசு கிடைக்க வாய்ப்புள்ளது. அகவிலைப்படி, வீட்டு வாடகை கொடுப்பனவு (எச்ஆர்ஏ), பயணப்படி (டிஏ), பதவி உயர்வு ஆகியவற்றுக்குப் பிறகு, ஃபிட்மென்ட் ஃபாக்டர் குறித்தும் அடுத்த ஆண்டு விவாதிக்கப்படலாம். ஊழியர்களின் ஊதியத்தில் ரூ 8000 உயர்த்துவது குறித்து அரசாங்கம் நேரடியாக பரிசீலிக்கலாம் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஃபிட்மென்ட் ஃபாக்டரை அதிகரிப்பதன் மூலம், அரசு ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தை அரசு பலப்படுத்த முடியும். 


தற்போது 7வது ஊதியக்குழுவின் கீழ் மத்திய பணியாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியமாக ரூ.18,000 கிடைக்கிறது. அடுத்த ஆண்டு மத்திய மற்றும் மாநில ஊழியர்களின் ஃபிட்மென்ட் ஃபாக்டர் அதிகரிக்கப்படக்கூடும். பிப்ரவரி 1, 2023ல் தாக்கல் செய்யப்படும் பட்ஜெட்டுக்குப் பிறகு, மத்திய ஊழியர்களின் இந்தக் கோரிக்கையை அரசு பரிசீலிக்கலாம் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


மேலும் படிக்க | 7th Pay Commission: அரசு ஊழியர்களுக்கு அதிர்ச்சி செய்தி, ஓய்வூதியம், கிராஜுவிட்டி கிடைக்காது 


அகவிலைப்படி மீண்டும் அதிகரிக்கும்


ஒவ்வொரு ஆண்டையும் போலவே, 2023 ஆம் ஆண்டிலும் மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படியில் உயர்வு இருக்கும். ஜனவரி 2023-க்கான அகவிலைப்படி அதிகரிப்பு பற்றி மார்ச் மாதத்தில் அறிவிக்கப்படும். இதுவரையிலான, பணவீக்க புள்ளிவிவரங்களைப் பார்க்கும்போது, ​​அடுத்த ஆண்டும் 4 சதவீத டிஏ உயர்வு இருக்கலாம் என்று தெரிகிறது. 


இருப்பினும், அக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களுக்கான ஏஐசிபிஐ குறியீட்டு எண்கள் இன்னும் வரவில்லை. இந்த 3 மாதங்களில் குறியீட்டு எண் வேகமாக வளர்ச்சியடைந்தால், 4 சதவீத அதிகரிப்பு உறுதியாக இருக்கும். குறியீட்டில் இடைவெளி ஏற்பட்டாலோ அல்லது அது குறைந்தாலோ, 3 சதவிகிதம் அதிகரிப்பும் சாத்தியமாகும்.


பழைய ஓய்வூதியத் திட்டத்தின் பலன் கிடைக்குமா?


வரும் புத்தாண்டில் மத்திய ஊழியர்களுக்கு அரசாங்கம் மிகப்பெரிய பரிசை வழங்கக்கூடும். 2023-ம் ஆண்டில் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தையும் அமல்படுத்தலாம். பழைய ஓய்வூதியத்தை அமல்படுத்த வேண்டும் என நீண்ட நாட்களாக ஊழியர்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. சில மாநிலங்கள் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தியுள்ளன. தற்போது பஞ்சாப் அமைச்சரவையும் இதற்கு ஒப்புதல் அளித்துள்ளது. 


7வது ஊதியக் குழுவின் கீழ், 2024 ஆம் ஆண்டுக்குள் மத்திய அரசு ஊழியர்களுக்கு மோடி அரசாங்கம் அதை அமல்படுத்தக்கூடும். பழைய ஓய்வூதியத் திட்டம் தொடர்பாக மத்திய அரசின் சட்ட அமைச்சகத்திடம் கருத்து கேட்கப்பட்டது. பழைய ஓய்வூதியத் திட்டத்தை (ஓபிஎஸ்) எந்தத் துறையில் செயல்படுத்தலாம் என்றும் கேட்கப்பட்டது. ஆகையால் இது குறித்தும் விரைவில் ஒரு முடிவு எடுக்கப்படும் எனகூறப்படுகின்றது.


மேலும் படிக்க | 7th Pay Commission: ஊழியர்களுக்கு குட் நியூஸ், ஜனவரியில் மாபெரும் டிஏ ஹைக் 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ