7th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களுக்கு இந்த தீபாவளி மகிழ்ச்சியாக இருந்தது. பண்டிகைக்கு முன்னதாக, அவர்களது அகவிலைப்படி (DA) அதிகரிக்கப்பட்டது. அதே சமயம் ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் மற்றும் டிஏ அரியர் தொகையும் கிடைத்தது. இப்போது வந்துள்ள மற்றொரு அப்டேட் ஊழியர்களின் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கியுள்ளது. தீபாவளிக்குப் பிறகு, இப்போது மத்திய அரசு ஊழியர்களுக்கு புத்தாண்டில் பெரிய பரிசுகள் கிடைக்கும். புத்தாண்டின் ஆரம்பம் அவர்களுக்கு அதிரடியாய் இருக்கவுள்ளது. ஊழியர்களின் சம்பளத்தில் கணிசமான உயர்வு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அகவிலைப்படி மீண்டும் ஒருமுறை உயரும்


முதலாவதாக, மத்திய அரசு ஊழியர்களுக்கு (Central Government Employees)  2024 துவக்கத்தில் அகவிலைப்படி உயர்வு பரிசாக வழங்கப்படும். இதற்கான கனக்கீடு ஜூலை முதல் தொடங்கியுள்ளது. ஜூலை, ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களுக்கான ஏஐசிபிஐ குறியீட்டு (AICPI Index) எண்கள் வந்துவிட்டன. அக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களின் புள்ளிவிவரங்கள் இன்னும் வரவில்லை. இதுவரை அகவிலைப்படி எண்ணிக்கை 2.50 சதவீதம் அதிகரித்துள்ளது. தற்போதைய டிஏ விகிதம் 46 சதவீதமாக உள்ளது. ஆனால் ஏஐசிபிஐ இன்டெக்ஸ் தரவைப் பார்த்தால், அகவிலைப்படி (DA Hike) 48.54 சதவீதத்தை எட்டியுள்ளது. குறியீடு தற்போது 137.5 புள்ளிகளாக உள்ளது. அத்தகைய சூழ்நிலையில், அடுத்த டிஏ உயர்வு 4-5 சதவீதமாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.


பயணப்படி அதிகரிக்கும் (TA Hike)


இரண்டாவது பரிசு பயணப்படியாக இருக்கும். டிஏ அதிகரிப்புடன், பயணப்படியும் (TA) அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இப்படிப்பட்ட சூழ்நிலையில், பயணக் கொடுப்பனவை ஊதியக் குழு அதிகரிப்புடன் இணைத்தால், டிஏ அதிகரிப்பு இன்னும் அதிகமாக இருக்கும். பயணக் கொடுப்பனவு வெவ்வேறு ஊதியக் குழுக்களுடன் இணைக்கப்படுகின்றன. உயர் TPTA நகரங்களில், கிரேடு 1 முதல் 2 வரையிலான பயணப்படி ரூ.1800 மற்றும் ரூ.1900 ஆகும். கிரேட் 3 முதல் 8 வரை ரூ. 3600 + அகவிலைப்படி ஆகும். அதேசமயம், மற்ற இடங்களுக்கு இந்த விகிதம் ரூ. 1800 + அகவிலைப்படி என உள்ளது.


மேலும் படிக்க | மத்திய அரசு ஊழியர்களுக்கு அட்டகாசமான நற்செய்தி: 50% டிஏ, எக்கச்சக்க ஊதிய உயர்வு


HRA இல் திருத்தம் இருக்கும் (HRA Hike)


மூன்றாவது மற்றும் மிகப்பெரிய பரிசு வீட்டு வாடகை கொடுப்பனவு (HRA) வடிவத்தில் பெறப்படும். இதிலும் மறுசீரமைப்பு அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. எச்ஆர்ஏ -வில் அடுத்த திருத்த விகிதம் 3 சதவீதமாக இருக்கும். விதிகளின்படி, அகவிலைப்படி 50 சதவீதத்தைத் தாண்டினால் வீட்டு வாடகை கொடுப்பனவு திருத்தப்படும். தற்போது எச்ஆர்ஏ 27, 24, 18 சதவீதம் வழங்கப்படுகிறது. இது நகரங்களின் X, Y, Z, வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளது. அகவிலைப்படி 50 சதவீதமாக இருந்தால், எச்ஆர்ஏ 30, 27, 21 சதவீதமாக உயரும்.


இந்த 3 பரிசுகள் எப்போது கிடைக்கும்?


அகவிலைப்படி உயர்வு, பயணப்படி உயர்வு மற்றும் மத்திய ஊழியர்களுக்கான எச்ஆர்ஏ திருத்தம் ஆகிய மூன்றும் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வழக்கமாக, அரசாங்கம் மார்ச் மாதம் ஜனவரி முதலான அகவிலைப்படியை அறிவிக்கும். அத்தகைய சூழ்நிலையில், அகவிலைப்படி 50 சதவீதத்தை எட்டுகிறதா இல்லையா என்பது மார்ச் 2024 இல் தான் முடிவு செய்யப்படும். அகவிலைப்படி (Dearness Allowance) 50% -ஐ எட்டினால் எச்ஆர்ஏ 3 சதவீதம் அதிகரிக்கும். அதே நேரத்தில், ஊழியர்களின் கிரேடிற்கு ஏற்ப பயணப்படியும் அதிகரிக்கலாம். 


மேலும் படிக்க | SBI Vs HDFC Vs PNB: FD கணக்கிற்கு வட்டியை அள்ளித் தரும் வங்கி எது?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ