7th pay commission: மத்திய அரசு 7வது ஊதியக் குழுவின் கீழ் ஒரு கோடிக்கும் அதிகமான ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதரர்களுக்கான அகவிலைப்படியை உயரத்தவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தற்போது ஊழியர்களுக்கு அகவிலைப்படி 38% வழங்கப்பட்டு வரும் நிலையில் 4% உயர்த்தி 42 சதவீதமாக உயர்த்தி வழங்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  விரைவில் மத்திய அரசு ஓய்வூதியர்களுக்கான அகவிலை நிவாரணம் (டிஆர்) உயர்வு அறிவிப்பும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.  அகவிலைப்படி (டிஏ) என்பது வாழ்க்கைச் செலவுக்காக கொடுக்கப்படும் அலவன்ஸ் ஆகும்.  அரசு இதனை பொதுத்துறை ஊழியர்களுக்கும் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கும் வழங்குகிறது.  ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்படும் அகவிலை நிவாரணம் (டிஆர்) என்பதும் அலவன்ஸுக்கு சமம் தான்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | ஹோம் லோன் எடுக்க வாட்ஸ்-அப் போதும்... நீங்க அலையவே வேண்டாம்!


தற்போது டிஏ 38 சதவீதமாக உள்ளது, இது 4 சதவீதம் உயர்ந்தால் மொத்த டிஏ 42 சதவீதமாக இருக்கும். இப்போது அடிப்படை சம்பளம் ரூ.18,000 என்று வைத்துக்கொண்டால், 1800 தர ஊதிய விகிதத்தின் லெவல் 1-ன் கீழ், டிஏ ரூ.7,560 ஆக இருக்கும்.  இது மாதம் ரூ.720 கூடுதலாக இருக்கும்.  38 சதவீத அகவிலைப்படியில் ரூ.6,840 கிடைக்கிறது.  


பார்முலா:


மத்திய அரசு ஊழியர்களுக்கு: அகவிலைப்படி சதவீதம் = ((ஏஐசிபிஐ-ன் சராசரி (அடிப்படை ஆண்டு 2001=100) கடந்த 12 மாதங்களில் -115.76)/115.76) *100


அகவிலைப்படி சதவீதம் = ((ஏஐசிபிஐ-ன் சராசரி (அடிப்படை ஆண்டு 2016=100) கடந்த 3 மாதங்களில் -126.33)/126.33) *100


ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கு ஒரு முறையும் அரசாங்கம் ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதரர்களுக்கான அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணத்தை திருத்தியமைக்கிறது.  ஜூலை 1, 2022 முதல் அமலுக்கு வந்த அகவிலைப்படியில் கடைசியாக செப்டம்பர் 28, 2022 அன்று திருத்தம் செய்யப்பட்டது.  அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீட்டின் 12 மாதாந்திர சராசரியின் சதவீத அதிகரிப்பின் அடிப்படையில், நான்கு சதவீத புள்ளிகள் 38 சதவீதமாக மத்திய அரசு உயர்த்தியுள்ளது.  அகவிலைப்படி உயர்வு 4.23 சதவீதமாக இருக்கும். ஆனால் தசம புள்ளிக்கு அப்பால் டிஏ-வை உயர்த்துவதில் அரசாங்கம் காரணியாக இல்லை.  இதனால் டிஏ 4 சதவீதம் அதிகரித்து 42 சதவீதமாக அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அகில இந்திய ரயில்வே கூட்டமைப்பு பொதுச் செயலாளர் சிவ கோபால் மிஸ்ரா அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.  ஊழியர்களுக்கு வழங்கப்படும் அகவிலைப்படிக்கு சம்பளத்துடன் முழுமையாக வரி விதிக்கப்படும்.  வருமான வரிச் சட்டம் டிஏ மற்றும் சம்பளத்திற்கான வரிப் பொறுப்பு தாக்கல் செய்யப்பட்ட ரிட்டனில் தெரிவிக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளது.


மேலும் படிக்க | ஊழியர்களுக்கு அதிர்ச்சி செய்தி: விதியில் மாற்றம், இனி பென்ஷன், கிராஜுவிட்டி கிடைக்காது


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ