7வது சம்பள கமிஷன் ஃபிட்மென்ட் ஃபேக்டர் அப்டேட்: ஃபிட்மென்ட் பேக்டரை (அடிப்படை சம்பளம்) உயர்த்த வேண்டும் என மத்திய ஊழியர்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர். அத்தகைய ஊழியர்களுக்கு இப்போது ஒரு பெரிய செய்தி உள்ளது. நீங்களோ அல்லது உங்கள் குடும்பத்தில் எவரேனும் மத்திய அரசு ஊழியர்களாக இருந்தால், அவர்களுக்கு இந்த செய்தி மிகவும் உபயோகமாக இருக்கும். ஃபிட்மென்ட் ஃபாக்டரில் மாற்றம் ஏற்பட்டவுடன் சம்பள அமைப்பில் பெரிய மாற்றம் ஏற்படும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அடுத்த ஆண்டு 7வது ஊதியக் குழுவின் கீழ் மத்திய அரசு ஊழியர்களின் சம்பளத்தில் பெரிய மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.  இது குறித்த விவரங்களை இங்கே காணலாம். 


குறைந்தபட்ச சம்பளம் 26,000 ரூபாய் ஆக அதிகரிக்ககும்


மத்திய அரசு ஊழியர்களுக்கு தற்போது 38 சதவீத அகவிலைப்படி வழங்கப்படுகிறது. ஃபிட்மென்ட் ஃபாக்டரை மாற்றுவது குறித்து அரசு பரிசீலித்து வருகிறது. அதன் அடிப்படையில், ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளம் தீர்மானிக்கப்படுகிறது. தற்போது ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளம் 18 ஆயிரம் ரூபாயாக உள்ளது. ஃபிட்மென்ட் ஃபாக்டர் தொடர்பான முடிவு எடுக்கப்பட்டால், குறைந்தபட்ச ஊதியம் 26,000 ரூபாயாக உயரும். அடுத்த ஆண்டு தாக்கல் செய்யப்படும் பட்ஜெட்டில் இந்த முடிவை அரசு எடுக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


மேலும் படிக்க | 7th Pay Commission: டிஏ அதிகரிப்பைத் தொடர்ந்து இதுவும் உயரும், பம்பர் ஊதிய ஏற்றம்


ஃபிட்மென்ட் ஃபாக்டர் 3.68 மடங்கு உயர்த்தப்படும்!


ஃபிட்மென்ட் ஃபாக்டரை உயர்த்துவது தொடர்பாக உள்ள கோரிக்கை ஒப்புக் கொள்ளப்பட்டால், 52 லட்சத்துக்கும் அதிகமான மத்திய அரசு ஊழியர்களின் அடிப்படை சம்பளம், ஃபிட்மென்ட் ஃபாக்டரின் கீழ் உயரும். ஃபிட்மென்ட் பேக்டரை உயர்த்த வேண்டும் என அரசு ஊழியர்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர். மத்திய ஊழியர்களுக்கு 2.57 சதவீதம் ஃபிட்மென்ட் வழங்கப்படுகிறது. இதை 3.68 மடங்காக அரசாங்கம் அதிகரிக்ககூடும்.


அரசு ஃபிட்மென்ட் ஃபாக்டரை 2.57ல் இருந்து 3.68 ஆக உயர்த்தினால் குறைந்தபட்ச அடிப்படை சம்பளம் 18 ஆயிரத்தில் இருந்து 26 ஆயிரமாக உயரும்.


அகவிலைப்படி உயர்வுக்கான அறிவிப்பு செப்டம்பர் 28ஆம் தேதி வெளியானது


முன்னதாக, செப்டம்பர் 28 ஆம் தேதி, அரசாங்கம் அகவிலைப்படியை 4 சதவீதம் உயர்த்தி அறிவித்தது. முன்பு 34 ஆக இருந்த அகவிலைப்படி தற்போது 38 சதவீதமாக அதிகரித்துள்ளது. ஜூலை 1, 2022 முதல் செயல்படுத்தப்பட்ட அகவிலைப்படியில் மூன்று மாத நிலுவைத் தொகையையும் பணியாளர்கள் பெறுகின்றனர். மத்திய அரசின் அகவிலைப்படி அதிகரிப்பு பற்றி அறிவித்த பிறகு, பல மாநில அரசுகள் அகவிலைப்படியை உயர்த்தி அறிவித்தன.


மேலும் படிக்க | 7th Pay Commission: தீபாவளியில் டிஏ ஹைக்குடன் ஊழியர்களுக்கு மற்றொரி குட் நியூஸ் 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ