7வது ஊதியக்குழு, சமீபத்திய புதுப்பிப்பு: மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு கூடிய விரைவில் இரண்டு பெரிய பரிசுகளை வழங்க மோடி அரசு தயாராகி வருகிறது. இந்த முறை மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படியை (டிஏ) வழக்கமான நேரத்திற்கு முன்னதாகவே அரசு அதிகரிக்கலாம் என்று நம்பப்படுகிறது. இது ஊழியர்களுக்கு மிகப்பெரிய நன்மை அளிக்கக்கூடிய ஒரு விஷயமாக இருக்கும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இது தவிர, ஊழியர்களை திருப்திபடுத்தும் வகையில் ஃபிட்மென்ட் ஃபாக்டர் தொடர்பாகவும் ஒரு ஆச்சரியமான முடிவு எடுக்கப்படலாம். சில நாட்களுக்கு முன்னர்தான் அரசாங்கம் ஜூலை 2023 -க்கான டிஏ அதிகரிப்பு பற்றிய அறிவிப்பை வெளியிட்டது. இதனால் ஊழியர்களின் சம்பளத்தில் கணிசமான அதிகரிப்பு ஏற்பட்டது. இப்போது அடுத்த அரையாண்டு, அதாவது ஜனவரி 2024 -க்கான டிஏவை உயர்த்துவதற்கான யோசனை பரிசீலிக்கப்பட்டு வருகிறது. இது ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு ஒரு பெரிய பரிசாக இருக்கும். அகவிலைப்படியை அதிகரிப்பது குறித்து அரசு அதிகாரப்பூர்வமாக எதுவும் கூறவில்லை. எனினும் 2024 ஆம் ஆண்டு நிகழவுள்ள மக்களவைத் தேர்தலைக் கருத்தில் கொண்டு அரசு இந்த முடிவை எடுக்கலாம் என நம்பப்படுகின்றது.


அகவிலைப்படி எவ்வளவு அதிகரிக்கும்? 


மத்திய அரசு ஊழியர்கள் (Central Government Employees) மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலைப்படியை அரசு சுமார் 4 சதவீதம் உயர்த்துவது சாத்தியம் என்று கருதப்படுகிறது. இதற்குப் பிறகு, டிஏ 50 சதவீதமாக உயரும், இதன் காரணமாக அடிப்படை சம்பளத்தில் பெரும் உயர்வு ஏற்படும். எனினும், அகவிலைபப்டி (Dearness Allowance) 5 சதவிதம் அதிகரித்து மொத்த அகவிலைப்படி 51 சதவிகிதமாக அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது. டிசம்பர் வரையிலான ஏஐசிபிஐ எண்களின் அடிப்படையில் இது கணக்கிடப்படும். 


இதன் மூலம் சுமார் 1 கோடி குடும்பங்கள் பயனடைவார்கள். டிஏ (DA) அதிகரிக்கும் தேதியை அரசாங்கம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. ஆனால் அது பொதுத் தேர்தலுக்கு முன்னதாக அறிவிக்கப்படும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


மேலும் படிக்க | ஆதார் அட்டை இலவச அப்டேட்: சூப்பர் செய்தி... காலக்கெடு மார்ச் 14 வரை நீட்டிக்கப்பட்டது!!


ஏஐசிபிஐ குறியீடு


ஏஐசிபிஐ குறியீட்டின் (AICPI Index) சமீபத்திய புள்ளிவிவரங்கள் 138.4 மதிப்பெண்களைக் காட்டுகின்றன. இதில் 0.9 புள்ளிகள் உயர்வு ஏற்பட்டுள்ளது. அக்டோபர் மாதத்திற்கான தரவு இது. நவம்பர் மாத இறுதியில் இந்த தரவு வெளியிடப்பட்டுள்ளது. இன்னும் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களுக்கான தரவு வரவேண்டும். ஒவ்வொரு ஆண்டும் இரு முறை அகவிலைபப்டியில் மாற்றம் ஏற்படுகின்றது. ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் அகவிலைபப்டி திருத்தப்படுகின்றது. முந்தைய ஆண்டில் ஜூலை முதல் டிசம்பர் வரையிலான மாதங்களின் ஏஐசிபிஐ தரவின் அடிப்படையில் ஜனவரி மாத அகவிலைப்படியும் (DA), ஜனவரி முதல் ஜூன் வரையிலான ஏஐசிபிஐ குறியீட்டின் அடிப்படையில் ஜூலை மாத அகவிலைப்படியும் தீர்மானிக்கப்படுகின்றன.


ஃபிட்மென்ட் ஃபாக்டர் அதிகரிக்கும்


மத்திய அரசு ஊழியர்கள் நீண்ட காலமாக ஃபிட்மென்ட் ஃபாக்டர் (Fitment Factor)  அதிகரிப்பிற்காக காத்திருக்கிறார்கள். இவர்களுக்கு விரைவில் நல்ல செய்தி கிடைக்கும் என நம்பப்படுகின்றது. தற்போது ஊழியர்களின் ஃபிட்மென்ட் ஃபாக்டர் 2.60 மடங்காக உள்ளது. இதை அரசு 3.0 மடங்காக உயர்தலாம் என கூறப்படுகின்றது. அதன் பிறகு ஊழியர்களுன் அடிப்படை சமப்ளத்தில் பம்பர் ஏற்றம் இருக்கும். அரசு இந்த முடிவை எடுத்தால் விலைவாசி அதிகரிப்பால் அவதியில் இருக்கும் ஊழியர்களுக்கு இது மிகப்பெரிய நிவாரணமாக இருக்கும். 


மேலும் படிக்க | UPI: தவறான எண்ணுக்கு பணம் சென்றுவிட்டதா? கவலை வேண்டாம்.. 48 மணி நேரத்தில் ரீஃபண்ட் கிடைக்கும்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ