ஓய்வூதியம் பெறுவோர் மற்றும் மத்திய அரசு ஊழியர்களுக்கு விரைவில் நல்ல செய்தி கிடைக்கவுள்ளது. ஊழியர்களின் கணக்கில் விரைவில் ஒரு கணிசமான தொகை வந்து சேரக்கூடும். 18 மாத டிஏ நிலுவைத் தொகை குறித்து நிர்வாகம் விரைவில் முடிவெடுக்கும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 18 மாதங்களாக முடங்கி இருந்த அரச ஊழியர்களின் அகவிலைப்படி நிலுவைத் தொகை தொடர்பாக தற்போது கலந்தாலோசிக்கப்படும் என்று கூறப்படுகின்றது. இது தொடர்பாக அமைச்சரவை செயலாளருடன் கலந்துரையாடுவதற்கான நேரமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஓய்வூதியம் பெறுவோர் மற்றும் ஊழியர்களுக்கு தற்போதைய நிர்வாகத்தின் மீது முழு நம்பிக்கை உள்ளதாக கூறப்பட்டுள்ளது. 
 
18 மாத கால நிலுவைத் தொகை நிலுவைத் தொகையை வழங்க வேண்டும் என மத்திய ஊழியர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்தும் அரசு இதுவரை அதற்கு சரியான பதில் அளிக்கவில்லை. 7 ஆவது ஊதியக் குழுவின் கீழ் டிஏ நிலுவைத் தொகையைப் பெறுவது தொடர்பான மத்திய ஊழியர்களின் கோரிக்கையை அரசு ஏற்றுக்கொண்டால், மத்திய ஊழியர்களின் கணக்கில் உள்ள தொகை குறிப்பிடத்தக்க அளவு அதிகரிக்கும். இதனால் ஊழியர்கள் தொடர்ந்து இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றனர்.
 
ஊழியர்களின் கணக்கில் எவ்வளவு பணம் டெபாசிட் செய்யப்படும் என்பதை பற்றி இனி பார்க்கலாம். ஜேசிஎம் (பணியாளர்கள் தரப்பு) தேசிய கவுன்சிலின் ஷிவ் கோபால் மிஸ்ரா, பல்வேறு ஊழியர்களின் நிலுவைத் தொகையில் மாறுபாடு இருக்கும் என்று கூறினார். 
 
- லெவல்-1  ஊழியர்களுக்கு, அகவிலைப்படி நிலுவைத் தொகை ரூ.11,880 முதல் ரூ.37,554 வரை மாறுபடும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

- வெவல்-13 (7வது சிபிசி அடிப்படை ஊதிய அளவு) பணியாளர்களுக்கு, அகவிலைபப்டி நிலுவைத் தொகை ரூ.1,23,100 முதல் ரூ.2,15,900 வரை இருக்கும்.


- லெவல்-14 (ஊதிய அளவு) ஊழியர்களுக்கு, டிஏ நிலுவைத் தொகை ரூ.1,44,200 முதல் ரூ.2,18,200 வரை வழங்கப்படும்.
 
மேலும் படிக்க | ஜன்தன் கணக்கு வைத்திருப்பவருக்கு முக்கிய செய்தி, உடனே இ படியுங்க 


ஜூலை 1, 2020 முதல் கரோனா காலத்திற்குப் பிறகு மத்திய அரசு அகவிலைப்படியை 11% உயர்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆனால் அந்த நேரத்தில் ஊழியர்களுக்கு நிறுத்தப்பட்ட ஊழியர்களின் நிலுவைத் தொகை இன்னும் வழங்கப்படவில்லை என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். இது குறித்து ஊழியர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். 
 
அகவிலைப்படி முடக்கத்திற்குப் பதிலாக நிலுவைத் தொகை வழங்கப்பட மாட்டாது என்று கடந்த ஆண்டு நிதி அமைச்சகத்துக்குத் தெரிவிக்கப்பட்டது. மறுபுறம், அமைப்புகளின் கோரிக்கைகளின் விளைவாக அரசாங்கத்தின் மீதான அழுத்தம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மத்திய ஊழியர்களுக்கான அகவிலைப்படி தற்போது 34 சதவீதத்தில் இருந்து 38 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.
 
தற்போது பணவீக்கம் அதிகரித்து வருவதால், விரைவில் இது தொடட்பாக அரசு விரைவில் முடிவெடுக்கும் என நம்பிக்கை உள்ளதாக ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.


மேலும் படிக்க | 7th Pay Commission: புத்தாண்டில் அரசு ஊழியர்களுக்கு ஊதியத்தில் பம்பர் உயர்வு 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ