ஜன்தன் கணக்கு வைத்திருப்பவருக்கு முக்கிய செய்தி, உடனே இ படியுங்க

PMJDY: இன்றைய காலகட்டத்தில், கோடிக்கணக்கான மக்கள் ஜன்தன் கணக்கைத் தொடங்கியுள்ளனர், அதன்படி உங்களுக்கும் இதில் கணக்கு இருந்தால் நீங்கள் 10 ஆயிரம் ரூபாய் பெறலாம்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Nov 23, 2022, 10:50 AM IST
  • பிரதமர் ஜன் தன் யோஜனா திட்டம்.
  • அரசு 10 ஆயிரம் ரூபாய் வழங்குகிறது.
  • 10 ஆயிரம் ரூபாய்க்கு உடனடியாக விண்ணப்பிக்கவும்.
ஜன்தன் கணக்கு வைத்திருப்பவருக்கு முக்கிய செய்தி, உடனே இ படியுங்க title=

ஜன்தன் கணக்கு: நாடு முழுவதும் பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா திட்டத்தின் கீழ் சுமார் 47 கோடி பேர் கணக்கு தொடங்கியுள்ளனர், ஆனால் அதே மக்களுக்கு இந்தக் கணக்கில் கிடைக்கும் நன்மைகள் பற்றி தெரியாது. அந்த வகையில் ஜன்தன் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு தற்போது அரசு 10 ஆயிரம் ரூபாய் வழங்குகிறது, ஆனால் இதற்கு நீங்கள் உங்கள் கிளையில் சென்று விண்ணப்பிக்க வேண்டும். இந்தத் திட்டங்களைப் பற்றி உங்களுக்கும் தெரியவில்லை என்றால், உடனடியாக அறிந்து 10 ஆயிரம் ரூபாய்க்கு விண்ணப்பிக்கவும்.

10 ஆயிரம் ரூபாய்க்கு உடனடியாக விண்ணப்பிக்கவும்
ஜன்தன் கணக்கில் கணக்கு வைத்திருப்பவருக்கு பல வகையான நன்மைகள் வழங்கப்படுகின்றன. அதன்படி இந்த கணக்கின் முதல் நன்மை என்னவென்றால், இந்தக் கணக்கில் மினிமம் பேலன்ஸை பராமரிக்க தேவையில்லை. இது தவிர, ரூபே டெபிட் கார்டு கொடுக்கப்பட்டுள்ளது, நீங்கள் விரும்பினால், வங்கியில் விண்ணப்பித்து இந்த கணக்கில் ரூ.10,000 ஓவர் டிராஃப்ட் எடுக்கலாம். இதற்கு உங்கள் வங்கி கிளையை தொடர்பு கொள்ள வேண்டும். 

மேலும் படிக்க | 7th Pay Commission: 2023ம் ஆண்டு மத்திய ஊழியர்களுக்கு லாட்டரி! சம்பளம் இரட்டிப்பாக்கப்படும் 

ஜன்தன் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு அரசு பல வசதிகளை வழங்குகிறது, அதன்படி இதில் கணக்கு வைத்திருப்பவருக்கு ரூ.1 லட்சம் விபத்து காப்பீடு வழங்கப்படுகிறது. இது தவிர, 30 ஆயிரம் ரூபாய்க்கான ஆயுள் காப்பீடும் வழங்கப்படுகிறது. ஆனால் உங்கள் கணக்கை ஆதார் உடன் இணைக்கவில்லை என்றால், இந்த நன்மை உங்களுக்கு கிடைக்காது. இதன் காரணமாக நீங்கள் ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான காப்பீட்டை இழப்பீர்கள்.

ஜன்தன் கணக்கை திறப்பது எப்படி
நீங்களும் இந்தத் திட்டங்களைப் பயன்படுத்திக் கொள்ள விரும்பினால், இதுவரை நீங்கள் எந்த ஜன்தன் கணக்கையும் திறக்கவில்லை என்றால், நீங்கள் இந்தக் கணக்கைத் திறக்கலாம். இதற்கு ஆதார் அட்டை மற்றும் பான் கார்டு இருக்க வேண்டும் அவ்வளவுதான்.

மேலும் படிக்க | வாட்ஸ் ஆப் வழியாக ஆதார், பான் கார்டு பெறுவது எப்படி? 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News