7வது சம்பள கமிஷன் டிஏ உயர்வு லேட்டஸ்ட் அப்டேட்: அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி தொடர்பாக மற்றொரு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி அகவிலைப்படியை உயர்த்தி மத்திய அரசு விரைவில் அறிவிக்கலாம் என்று கூறப்படுகிறது. மேலும் ஜூலை மாதம் முதலே அகவிலைப்படியை 3 சதவீதம் உயர்த்தியதால் மத்திய ஊழியர்களின் சம்பளத்தில் பெரும் உயர்வு ஏற்படும் என ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த உயர்வு ஜூலை 1, 2023 முதலே அமலுக்கு வரும் என்பதும் கூறப்பட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்நிலையில் இந்த முறை அகவிலைப்படி மூன்று சதவீதம் அதிகரிக்கலாம் என மத்திய ஊழியர்கள் நம்பிக்கை வைத்து வருகின்றனர். அகவிலைப்படியை மூன்று சதவீதம் உயர்த்தினால், மொத்த அகவிலைப்படி 45 சதவீதமாக உயரும். இதனால் மத்திய ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி உயர்வு ஒரு பம்பர் பரிசாக அமையும். அதுமட்டுமின்றி இந்த வருடத்தில் அகவிலைப்படியை இரண்டாவது முறையாக அரசாங்கம் அதிகரிக்கவுள்ளது. முன்னதாக, கடந்த ஜனவரி 1 முதல் அமலுக்கு வரும் வகையில் அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணம் உயர்த்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க | 7th Pay Commission: தொடர்ந்து அரசு ஊழியர்களுக்கு நல்ல செய்தி! ஜனவரி முதல் 50% டிஏ ஹைக்


எந்த அடிப்படையில் அகவிலைப்படி உயர்வு முடிவு செய்யப்படுகிறது?
தொழிலாளர் அமைச்சகத்தின் தொழிலாளர் பணியகக் கிளையின் மாதாந்திர நுகர்வோர் விலைக் குறியீட்டுத் தரவுகளின் அடிப்படையில் ஊழியர்களின் அகவிலைப்படி உயர்வு தீர்மானிக்கப்படுகிறது. அமைச்சகம் இதுவரை ஜூலை மாதத்திற்கான புள்ளிவிவரத்தை வெளியிட்டுள்ளது, இது 3.3 புள்ளிகள் அதிகரித்து 139.7 ஆக உள்ளது. இந்த புள்ளிவிவரத்தின் அடிப்படையில், அரசு ஊழியர்களின் அகவிலைப்படியை மூன்று சதவீதம் அதிகரிக்கலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. எனினும், இறுதி முடிவு அரசாங்கமே எடுக்கும்.


அகவிலைப்படி எப்போது அதிகரிக்கும்?
இதனிடையே மத்திய அரசு எப்போது அகவிலைப்படியை உயர்த்தப் போகிறது என்பது குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியிடப்படவில்லை என்றாலும் இந்த மாதம் இறுதிக்குள் அதாவது செப்டம்பரில் எப்போது வேண்டுமானாலும் அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்படலாம் என்று ஊடக அறிக்கைகள் கூறுகின்றன. மேலும் அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியும் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலை நிவாரணமும் வழங்கப்படுகிறது மற்றும் ஜனவரி, ஜூலை மாதங்களில் ஆண்டுக்கு இருமுறை இவை உயர்த்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


கடந்த முறை அகவிலைப்படி 4 சதவீதம் உயர்த்தப்பட்டது
முன்னதாக கடந்த முறை 2023 மார்ச்சில் நான்கு சதவீதம் அகவிலைப்படி உயர்த்தப்பட்டது, இதன் காரணமாக தற்போதைய அகவிலைப்படி 42 சதவீதமாக உள்ளது. மத்திய அரசின் இந்த முடிவுக்குப் பிறகு, பல மாநிலங்கள் அகவிலைப்படியை உயர்த்தப்பட்டன. இதில் மத்திய பிரதேசம், ஒடிசா, கர்நாடகா, ஜார்கண்ட் மற்றும் இமாச்சல பிரதேசம் போன்ற மாநிலங்களும் அடங்கும்.


எத்தனை பேர் பயனடைவார்கள்?
அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணம் அதிகரிப்பின் பலன் 1 கோடி ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு நேரடியாக வழங்கப்படும். கடந்த முறை, ஜனவரி 1 ஆம் தேதி முதல் 4 சதவீதம் உயர்த்திய அரசு, அதன் காரணமாக 38 சதவீதத்தில் இருந்து 42 சதவீதமாக அதிகரித்து, தற்போது 3 சதவீத உயர்வுக்கு பிறகு 45 சதவீதமாக மாறும்.


மேலும் படிக்க | 7th pay Commission ஜாக்பாட் செய்தி: இந்த நாளில் டிஏ ஹைக் அறிவிப்பு... ஊதிய உயர்வு கணக்கீடு இதோ


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ