8வது சம்பள கமிஷன், சமீபத்திய அப்டேட்: மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு நல்ல செய்தி உள்ளது. இந்த செய்தி சம்பள கமிஷன் தொடர்பானது. 7வது ஊதியக் குழுவிற்குப் (7th Pay Commission) பிறகு, 8வது ஊதியக் குழுவை அரசு அறிமுகம் செய்யக்கூடும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால், இது குறித்து அரசிடம் இருந்து முறையான அறிவிப்பு வரவில்லை. புதிய சம்பள கமிஷன் அமைப்பது தொடர்பான விவாதங்கள் தொடங்கியுள்ளதாக கூறப்படுகின்றது. மத்திய அரசு ஊழியர்களுக்கு மோடி அரசு (Modi Government) விரைவில் பெரிய அறிவிப்பை வெளியிடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

8வது ஊதியக் குழுவுக்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன


டெல்லியில் 8வது ஊதியக்குழு தொடர்பாக மத்திய அரசு ஊழியர்கள் (Central Government Employees) மற்றும் ஓய்வூதியதாரர்களின் (Pensioners) போராட்டம் நடைபெற்று வருகிறது. ஒரு மாதத்தில் தொடர்ந்து இரண்டாவது முறையாக, சம்பள கமிஷன் விவகாரத்தை அரசு தெளிவுபடுத்த வேண்டும் என்று அரசு ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து அரசு முடிவெடுத்தால், மத்திய ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளம் பெரிய அளவில் உயர்த்தப்படும். 8வது சம்பள கமிஷன் (8th Pay Commission) இப்போது அறிமுகம் ஆகாது என இதுவரை கூறப்பட்ட நிலையில், தற்போது இது குறித்த புதிய நம்பிக்கை பிறந்துள்ளது. இப்போது சம்பள கமிஷனுக்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாக எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், அரசு தரப்பில் இது குறித்து எந்த உறுதிப்பாடும் இல்லை. இதில் அரசு கவனம் செலுத்தி வருவதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


சம்பளத்தில் பெரும் ஏற்றம் ஏற்படும்


2024 ஆம் ஆண்டில் மக்களவைத் தேர்தல்கள் (Lok Sabha Election) நடத்தப்படும். ஆகையால், மத்திய அரசு ஊழியர்களை மகிழ்விக்கும் வகையில் அரசு புதிய ஊதியக் குழுவை உருவாக்குவது குறித்து ஆலோசிக்கலாம். 8-வது ஊதியக் குழு அமலுக்குப் பிறகு ஊழியர்கள் பெரும் பலன்களைப் பெறுவார்கள். ஊதியக் குழுவிற்காக எந்த குழுவையும் அமைக்க வேண்டிய அவசியமில்லை என்ற கருத்தில் அரசாங்கம் இருப்பதாக வட்டாரங்கள் தெரிவிகின்றன. மாறாக, ஊதியக் கமிஷனிலேயே சம்பள திருத்தத்திற்கான புதிய ஃபார்முலா உருவாக்குவது குறித்து அரசு பரிசீலிக்கலாம் என கூறப்படுகின்றது. 


மேலும் படிக்க | EPFO முக்கிய அப்டேட்: இனி ஆதார் அட்டையை இதற்கான சான்றாக காட்டமுடியாது... பட்டியலிலிருந்து நீக்கம்


8வது ஊதியக்குழு எப்போது வரலாம்?


8வது ஊதியக் குழு 2024 ஆம் ஆண்டில் அமைக்கப்பட வேண்டும். அடுத்த ஆண்டு இது அமைக்கப்பட்டால், ஒன்றரை ஆண்டுகளுக்குள் இது செயல்படுத்தப்படும். இது நடந்தால், மத்திய அரசு ஊழியர்களின் சம்பளத்தில் பெரும் ஏற்றம் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக நிபுணர்கள் கருதுகிறார்கள். 7வது ஊதியக் குழுவுடன் ஒப்பிடும்போது 8வது ஊதியக் குழுவில் பல மாற்றங்கள் இருக்கலாம். ஃபிட்மெண்ட் ஃபாக்டரிலும் (Fitment Factor) சில மாற்றங்கள் இருக்கலாம். இப்போது வரை 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதியக் குழுவை அரசு அமைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. 


சம்பளம் எவ்வளவு உயரும்?


7வது ஊதியக் குழுவை விட 8வது ஊதியக் குழுவில் ஊழியர்களுக்கு அதிக அளவு ஊதிய ஏற்றம் (Salary Hike) ஏற்படும். எல்லாம் சரியாக நடந்தால், ஊழியர்களின் சம்பளத்தில் மிகப்பெரிய முன்னேற்றம் எதிர்பார்க்கப்படுகிறது. ஊழியர்களின் ஃபிட்மென்ட் காரணி 3.68 மடங்கு அதிகரிக்கும். மேலும், எந்த ஃபார்முலாவாக இருந்தாலும், ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தில் (Basic Salary) 44.44% அதிகரிப்பு இருக்கும். ஆகையால் இது ஊழியர்களுக்கு மகிழ்ச்சியைத் தரும் செய்தியாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. 


மேலும் படிக்க | ராமர் படம் போட்ட 500 ரூபாய் நோட்டை வெளியிடுகிறதா ரிசர்வ் வங்கி?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ