IRCTC Retiring Room Booking: நீங்களும் அடிக்கடி ரயிலில் பயணம் செய்யும் நபராக இருந்தால், உடனடியாக இந்த செய்தியை படியுங்கள். தற்போது இந்திய ரயில் (Indian Railways) பயணிகளுக்கு பல விதமான வசதிகளை வழங்குகிறது, இதனால் மக்களின் பயணம் சுகமாகி உள்ளது. குறிப்பாக பண்டிகை மற்றும் கோடை காலங்களில் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு பயணிகளுக்கு நிவாரணம் வழங்கப்படுகிறது. மேலும், டிக்கெட் முன்பதிவு மற்றும் இதர வசதிகள் அவ்வப்போது செய்து தரப்படுகிறது. எனினும் இது போன்ற பல ரயில்வேயின் வசதிகள் குறித்து ரயில் பயணிகளுக்கு தெரியாமல் இருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு வசதியை பற்றி தான் இன்று நாம் காண உள்ளோம். ஆம் நீங்கள் ரயில்வேயில் பயணம் செய்தால், நீங்கள் ரயில் நிலையத்தில் தங்க வேண்டும் என்றால், ரயில் நிலையத்திலேயே உங்களுக்கு ஒரு அறை கிடைக்கும். இதற்கான நீங்கள் எந்த ஹோட்டலுக்கும் எங்கும் அலையத் தேவையில்லை. இந்த அறைகள் மிகக் குறைந்த விலையில் கிடைக்கும். எவ்வளவு ரூபாய் மற்றும் எப்படி டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம் என்பதை தெரிந்துக்கொள்வோம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வெறும் 100 ரூபாயில் ஹோட்டல் போன்ற அறை:
இந்நிலையில் ரயில் பயணிகளின் வசதிக்கேற்ப இனி ரயில் நிலையத்தில் (IRCTC) பயணிகள் தங்குவதற்கு ஓட்டல் போன்ற அறைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இது ஒரு ஏசி அறை ஆகுன். மேலும் இதில் படுக்கை மற்றும் அறைக்கு தேவையான அனைத்து பொருட்களும் இருக்கும். அத்துடன் ஒரே இரவில் அறையை முன்பதிவு செய்ய ரூ.100 முதல் ரூ.700 வரை செலுத்த வேண்டியிருக்கும்.


மேலும் படிக்க | 7th pay commission: மகிழ்ச்சியில் மத்திய அரசு ஊழியர்கள்: அகவிலைப்படியை தொடர்ந்து இந்த அலவன்சுகளில் 25% ஏற்றம்


முன்பதிவு செய்வது எப்படி:
- ரயில்வே ஸ்டேஷனில் ஹோட்டல் (IRCTC Hotel Service) போன்ற அறையை முன்பதிவு செய்ய விரும்பினால், இங்கு குறிப்பிடப்பட்டுள்ள சில செயல்முறைகளை நீங்கள் பின்பற்ற வேண்டும்.
- அதற்கு முதலில் உங்கள் IRCTC கணக்கைத் திறக்கவும்
- இப்போது உள்நுழைந்து முன்பதிவுக்குச் செல்லவும்
- உங்கள் டிக்கெட் முன்பதிவின் கீழே ஓய்வு அறை என்கிற விருப்பம் தோன்றும்
- இங்கே கிளிக் செய்த பிறகு, அறையை முன்பதிவு செய்வதற்கான விருப்பத்தைக் காண்பீர்கள்
- PNR எண்ணை உள்ளிட தேவையில்லை
- ஆனால் சில தனிப்பட்ட தகவல்கள் மற்றும் பயணத் தகவல்கள் நிரப்பப்பட வேண்டும்
- இப்போது பணம் செலுத்திய பிறகு உங்கள் அறை முன்பதிவு செய்யப்படும்


ஓய்வறையை எத்தனை மணிநேரத்திற்கு முன்பதிவு செய்யலாம்?
IRCTC மூலம், 24 மணி நேரம் முதல் 48 மணிநேரம் வரை மட்டுமே ஓய்வு அறையை முன்பதிவு செய்ய முடியும். இதற்கு மேல் முன்பதிவு செய்ய முடியாது.


ஓய்வரையை ரத்து செய்யும் முறை:
முன்பதிவு செய்யப்பட்ட ஓய்வு அறையை ரத்து செய்ய விரும்போனால் ஐஆர்சிடிசி வழங்கிய தகவலின் படி, அறையை முன்பதிவு செய்த 48 மணி நேரத்திற்குள் முன்பதிவு ரத்துசெய்யப்படலாம். அப்படியானால், 10% ரத்து கட்டணம் விதிக்கப்படும். அதேசமயம், 48 மணிநேரத்திற்குப் பிறகு ரத்து செய்தால், 50% கட்டணம் செலுத்த வேண்டி இருக்கும்.


மேலும் படிக்க | Senior Citizen Saving Scheme Vs Bank FD: SCSS Vs மூத்த குடிமக்களுக்கான வங்கி FD... வட்டி வருமானத்தை அள்ளிக் கொடுப்பது எது..!!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ