பிபிஎஃப் கணக்கு: பொது வருங்கால வைப்பு நிதி (PPF) ஒரு சிறந்த முதலீட்டு திட்டமாகும். இந்த திட்டத்தை இந்தியர்கள் அதிகம் விரும்புகிறார்கள். இதற்குக் காரணம் அதில் கிடைக்கும் பலன்கள்தான். இதில் பெறப்படும் வட்டி, வரி இல்லாத முதலீடு, முதிர்ச்சியின் போது பெறப்படும் தொகை என அனைத்து வகையிலும் இந்த திட்டம் முதலீட்டிற்கான சிறந்த வழியாக பார்க்கப்படுகின்றது. இதன் முதிர்வு காலம் 15 ஆண்டுகள். ஆனால், 15 ஆண்டுகளுக்குப் பிறகும் இந்த திட்டத்தில் பல நன்மைகள் கிடைக்கின்றன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த திட்டத்தில் கிடைக்கும் மூன்று முக்கிய நன்மைகளை பற்றி இந்த பதிவில் காணலாம். இதை பற்றி தெரிந்தபிறகு நீங்களும் இதில் முதலீடு செய்ய திட்டமிடுவீர்கள். இந்தத் திட்டத்தின் மிகப்பெரிய நன்மை என்னவென்றால், திட்டம் முதிர்ச்சியடைந்த (மெச்யூர்) பிறகு பணத்தைப் போட்டாலும் இல்லாவிட்டாலும், உங்களுக்கு வட்டி தொடர்ந்து கிடைக்கும். பிபிஎஃப் கணக்கின் முதிர்வு தொடர்பாக உங்களுக்கு 3 விருப்பங்கள் கிடைக்கின்றன. இந்த விருப்பங்களில் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுத்து உங்கள் தொகையை மேலும் அதிகரிக்கலாம்.


1. மெச்யூரிட்டியின் போது பிபிஎஃப் தொகையை திரும்பப் பெறுதல்


பிபிஎஃப் கணக்கின் முதிர்ச்சியின் போது, ​​நீங்கள் அதில் டெபாசிட் செய்த தொகையையும், அதில் கிடைக்கும் வட்டியையும் திரும்பப் பெறலாம்.  இது முதல் விருப்பம். கணக்கு மூடப்பட்டால், உங்கள் முழுப் பணமும் உங்கள் கணக்கிற்கு மாற்றப்படும். முதிர்ச்சியின் போது பெறப்படும் பணம் மற்றும் வட்டிக்கு முற்றிலும் வரி விலக்கு அளிக்கப்படும் என்பது சிறப்பு. மேலும், நீங்கள் முதலீடு செய்த வருடங்களின் எண்ணிக்கைக்கு வரி செலுத்த வேண்டியதில்லை.


2. 15 ஆண்டுகளுக்குப் பிறகும் பிபிஎஃப் -இல் முதலீடு செய்யுங்கள்


மற்றொரு நன்மை அல்லது விருப்பம் என்னவென்றால், முதிர்ச்சியடைந்தவுடன் உங்கள் கணக்கை மேலும் நீட்டிக்கலாம். 5 வருட கால அளவில் கணக்கை நீட்டிக்கலாம். ஆனால், பிபிஎஃப் கணக்கின் முதிர்ச்சிக்கு 1 வருடத்திற்கு முன்பே கணக்கு நீட்டிப்புக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இருப்பினும், நீட்டிப்பு காலத்தின் போது சந்தாதாரர்கள் பணத்தை எடுக்கலாம். முதிர்வுக்கு முன் தொகையை எடுக்கும் (ப்ரீ மெச்யூர் வித்ட்ராயல்) விதிகள் இதில் பொருந்தாது.


3. முதலீடு இல்லாவிட்டாலும் பிபிஎஃப் கணக்கு தொடரும்


பிபிஎஃப் கணக்கின் மூன்றாவது பெரிய நன்மை, மேலே உள்ள இரண்டு விருப்பங்களையும் நீங்கள் தேர்வு செய்யாவிட்டாலும் கூட, உங்கள் கணக்கு முதிர்வுக்குப் பிறகு தொடர்ந்து இயங்கும். இதில் முதலீடு செய்ய வேண்டிய அவசியமில்லை. முதிர்வு தானாகவே 5 ஆண்டுகளுக்கு அதிகரிக்கும். நல்ல விஷயம் என்னவென்றால், நீங்கள் தொடர்ந்து அதில் வட்டியை பெறுவீர்கள். இதிலும் 5 ஆண்டுகளுக்கான கால நீட்டிப்பு பொருந்தும்.


மேலும் படிக்க | ஓய்வூதியம் பெறுவோருக்கு சூப்பர் செய்தி... வருகிறது மாற்றம் - இனி கவலையே இல்லை!


பிபிஎஃப் கணக்கை எப்படி திறப்பது? 


பிபிஎஃப் கணக்கை எந்த அரசு அல்லது தனியார் வங்கியிலும் தொடங்கலாம். இதனுடன், உங்கள் நகரத்தின் எந்த தபால் நிலையத்திலும் நீங்கள் கணக்கைத் திறக்கலாம். மைனர்களும் கணக்குகளைத் திறக்கலாம், ஆனால் அவர்கள் சார்பாக பெற்றோர்கள் இந்த கணக்கை 18 ஆண்டுகள் வைத்திருப்பார்கள். இருப்பினும், நிதி அமைச்சகத்தின் விதிகளின்படி, இந்து பிரிக்கப்படாத குடும்பம் (HUF) பிபிஎஃப் கணக்கைத் திறக்க முடியாது.


எவ்வளவு முதலீடு செய்தால் எத்தனை தொகை கிடைக்கும்? 


தற்போது, ​​பொது வருங்கால வைப்பு நிதியில் 7.1 சதவீத வட்டி பெறப்படுகிறது. இந்த வட்டி விகிதத்தில், நீங்கள் 15 அல்லது 20 ஆண்டுகள் முதலீடு செய்தால், ஒரு பெரிய நிதியை சேமிக்க முடியும். முழு கணக்கீட்டை இங்கே காணலாம்.


- மாதம் ரூ. 1,000 முதலீடு; - 15 ஆண்டுகளுக்கு பிறகு - ரூ. 3.25 லட்சம்; 20 ஆண்டுகளுக்கு பிறகு ரூ. 5.32 லட்சம்


- மாதம் ரூ. 2,000 முதலீடு; - 15 ஆண்டுகளுக்கு பிறகு - ரூ. 6.50 லட்சம்; 20 ஆண்டுகளுக்கு பிறகு ரூ. 10.65 லட்சம்.


- மாதம் ரூ. 3,000 முதலீடு; - 15 ஆண்டுகளுக்கு பிறகு - ரூ. 9.76 லட்சம்; 20 ஆண்டுகளுக்கு பிறகு ரூ. 15.97 லட்சம்.


- மாதம் ரூ. 5,000 முதலீடு; - 15 ஆண்டுகளுக்கு பிறகு - ரூ. 16.27 லட்சம்; 20 ஆண்டுகளுக்கு பிறகு ரூ. 26.63 லட்சம்


குறிப்பு: மேலே கொடுக்கபட்டுள்ள கணக்கீடுகள் பொதுவான அனுமானத்தில் அளிக்கப்பட்டுள்ளன. பிபிஎஃப் -இல் கிடைக்கும் வட்டி 3 மாதங்களுக்கு ஒரு முறை மறுபரிசீலனை செய்யப்படுகின்றது. இவை மாற்றத்திற்கு உட்பட்டவை.


மேலும் படிக்க | 8th Pay Commission அட்டகாசமான அப்டேட்: 44% ஊதிய உயர்வு விரைவில்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ