EPFO New Rule: பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பான EPFO ஆல் நிர்வகிக்கப்படும் இபிஎஃப் கணக்கில் மாதா மாதம் ஒரு குறிப்பிட்ட தொகையை டெபாசிட் செய்யும் நபரா நீங்கள்? அப்படியென்றால் உங்களுக்கு ஒரு முக்கியமான செய்தி உள்ளது. இபிஎஃப்ஓ ஏப்ரல் முதல் ஒரு புதிய விதியை அமல்படுத்தியுள்ளது. இந்த புதிய மாற்றதின் மூலம் ஊழியர்களுக்கு மிகப்பெரிய நிவாரணம் கிடைக்கும். இதை பற்றி இந்த பதிவில் விரிவாக காணலாம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த விதி மாற்றத்திற்கு முன்னர், PF உறுப்பினர்கள் தங்கள் வேலையை மாற்றினால், தங்கள் பழைய பிஎஃப் கணக்கில் (PF Account) உள்ள தொகையை மாற்ற, ஒரு படிவத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டி இருந்தது. ஆனால் இனி அவ்வாறு செய்ய வேண்டியதில்லை. ஒரு ஊழியர் ஒரு நிறுவனத்திலிருந்து மற்றொரு நிறுவனத்திற்கு தனது பணியை மாற்றினால், அவரது பிஎஃப் தொகை (PF Amount) தானாகவே மாற்றப்படும்.


இந்த பெரிய விதியில் மாற்றம் ஏற்பட்டுள்ளது


புதிய விதிகளின்படி, வேலை மாறும்போது பிஎஃப் பணத்தை ஊழியர்கள் தாங்களாக மாற்ற வேண்டிய அவசியமில்லை. இதற்காக எந்த சிறப்புப் படிவத்தையும் இனி அவர்கள் நிரப்ப வேண்டிய அவசியமில்லை. 2024-25 நிதியாண்டில் வேலை மாறும்போது பிஎஃப் பணம் தானாகவே மாற்றப்படும். இது ஊழியர்களுக்கு மிகப்பெரிய நிவாரணத்தை அளிக்கின்றது.


மேலும் படிக்க | உங்கள் குழந்தையின் எதிர்காலத்தை பாதுகாக்க வேண்டுமா? ‘இதை’ செய்யுங்கள்..


Automatic Transfer Process என்றால் என்ன?


தானியங்கு பரிமாற்ற அம்சம், அதாவது ஆடோமேடிக் டிடான்ஸ்ஃபர் ப்ராசஸ் மூலம் தற்போதுள்ள இபிஎஃப் உறுப்பினர்கள் (EPF Members), தங்கள் வேலைகளை மாற்றும்போது, எந்த வித ஆன்லைன் அல்லது ஆஃப்லைன் செயல்முறைகளும் இல்லாமல், தங்களது பிஎஃப் இருப்புத் தொகையை (PF Balance) பழைய நிறுவனத்திலிருந்து புதிய நிறுவனத்திற்கு தடையின்றி மாற்றுவதற்கு உதவுகிறது. அதாவது, இபிஎஃப் கணக்கு பரிமாற்றம் (EPF Account Transfer) தானாகவே நடக்கும். இதற்காக உறுப்பினர்கள் எந்த படிவத்தையும் பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டிய அவசியம் இருக்காது. இது உறுப்பினர்களின் சிரமத்தை பெருமளவில் நீக்கியுள்ளது. 


இந்த புதிய வசதி யாருக்கு கிடைக்கும்? 


- இந்த புதிய செயல்முறை அனைத்து ஊழியர்களுக்கும் கிடைக்காது.


- யாருடைய பழைய மற்றும் புதிய EPF கணக்குகள் EPFO ஆல் பராமரிக்கப்படுகின்றனவோ, அந்த EPF உறுப்பினர்களுக்கு மட்டுமே இந்த வசதி கிடைக்கும்.


- விலக்கு அளிக்கப்பட்ட பிஎஃப் அறக்கட்டளைகள் (PF Trusts) இந்த தானியங்கி பரிமாற்ற திட்டத்தின் கீழ் வராது.


பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு


பெரும்பாலும் சம்பள வர்க்கத்தினர் அனைவரும் இபிஎஃப் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். பிஎஃப் தொகையானது ஊழியர்களின் பணி ஓய்வுக்கு  பிறகான காலத்தின் முக்கிய சேமிப்பாக பார்க்கப்படுகின்றது. இந்த கணக்கில் ஊழியர்களும் நிறுவனங்களும் மாதா மாதம் ஒரு குறிப்பிட்ட தொகையை டெபாசிட் செய்கிறார்கள். 


EPFO இன் இந்த சமீபத்திய மாற்றத்தின் மூலம், பணியாளர்கள் தாங்கள் சேமித்த நிதியை எளிதாக அணுகும் வாய்ப்பை பெறுகிறார்கள். மேலும், ஓய்வூதியப் பயணத்தை இது பாதுகாப்பானதாகவும் நிம்மதியானதாகவும் மாற்றுகின்றது. 


மேலும் படிக்க | ரேஷன் அட்டை முறைகேட்டை தடுக்க புதிய அம்சம் அறிமுகம்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ