Small Savings Schemes Interest Rate: 2024 ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலாண்டிற்கான சிறு சேமிப்புத் திட்டங்களின் வட்டி விகிதங்களை அரசாங்கம் அறிவித்துள்ளது. இந்த திட்டங்களின் வட்டி விகிதத்தில் அரசு எந்த மாற்றமும் செய்யவில்லை. அதாவது முதலீட்டாளர்களுக்கு அதே பழைய வட்டி விகிதங்கள் தொடர்ந்து வழங்கப்படும். இந்த முறை சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதங்கள் உயர்த்தப்படும் என பெரிய அளவில் நம்பப்பட்டது. ஆனால், அரசு இதில் எந்த மாற்றத்தையும் செய்யாதது சிறிசேமிப்பு திட்ட முதலீட்டாளர்களுக்கிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சிறு சேமிப்பு திட்டங்களில் பொது வருங்கால வைப்பு நிதி (Public Provident Fund), செல்வமகள் சேமிப்புத் திட்டம் எனப்படும் சுகன்யா சம்ரித்தி யோஜனா (Sukanya Samriddhi Yojana), தபால் அலுவலக தொடர் வைப்பு (Post Office Recurring Deposit), மகிளா சம்ரித்தி சேமிப்பு சான்றிதழ் (Mahila Samriddhi Yojana), கிசான் விகாஸ் பத்ரா (Kisan Vikas Patra), தேசிய சேமிப்பு சான்றிதழ் (National Saving Certificate) மற்றும் மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் (Senior Citizen Savings Scheme) போன்ற திட்டங்கள் அடங்கும். ஒவ்வொரு காலாண்டிலும் இந்தத் திட்டங்களின் வட்டி விகிதங்களை அரசாங்கம் தீர்மானிக்கிறது.


ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலாண்டுக்கான வட்டி விகிதங்கள்


- PPF: பொது வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் 7.1%.
- SCSS: மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டத்திற்கான வட்டி விகிதம் 8.2%.
- SSY: செல்வமகள் சேமிப்புத் திட்டத்துக்கான வட்டி விகிதம் 8.2% வட்டி விகிதம்.
- NSC: தேசிய சேமிப்புச் சான்றிதழுக்கான வட்டி விகிதம் 7.7%.
- POMIS: தபால் அலுவலகம்-மாதாந்திர வருமானத் திட்டத்துக்கான வட்டி விகிதம் 7.4%.
- KVP: கிசான் விகாஸ் பத்ரா திட்டத்துக்கான வட்டி விகிதம் 7.5%.
- 1 ஆண்டு வைப்புத்தொகையின் வட்டி விகிதம் 6.9%.
- 2 ஆண்டு வைப்புத்தொகைக்கான வட்டி விகிதம் 7.0%.
- 3 ஆண்டு வைப்புத்தொகைக்கான வட்டி விகிதம் 7.1%.
- 5 ஆண்டு வைப்புத்தொகையின் வட்டி விகிதம் 7.5%.
- 5 ஆண்டு திட்டத்திற்கான வட்டி விகிதம் 6.7% ஆகும்.


மேலும் படிக்க | பங்குச்சந்தையில் அதிரடி மாற்றம்! டிமேட் கணக்கு வரம்பு 10 லட்ச ரூபாயாக உயர்கிறது!


சென்ற காலாண்டிலும் எந்த மாற்றமும் செய்யவில்லை


இந்த நிதியாண்டின் முதல் காலாண்டான ஏப்ரல்-ஜூன் காலாண்டிலும் இந்தத் திட்டங்களின் வட்டி விகிதங்களை அரசாங்கம் மாற்றாமல் பழைய விகிதங்களிலேயே தொடர்ந்தது. வட்டி விகிதங்கள் அதிகரிக்கப்பட்டிருந்தால், கடந்த சில ஆண்டுகளாக பின்தங்கியிருக்கும் குடும்பச் சேமிப்பை ஊக்குவிக்கும் சமிக்ஞையாக இது இருந்திருக்கும். இருப்பினும், அதிக வட்டி செலுத்துதலை நிர்வகிக்க அரசாங்க கருவூலத்தில் எவ்வளவு திறன் உள்ளது என்பதையும் அரசாங்கம் பார்க்க வேண்டும். 


இந்த வட்டி விகிதங்களை தீர்மானிப்பதில், உலகளாவிய நிலைமையையும் கருத்தில் கொள்ள வேண்டும் என நிபுணர்கள் கூறுகிறார்கள். ஏனென்றால், பெரும்பாலான நாடுகள் இன்னும் டெபாசிட்டுகளுக்கு ஒப்பீட்டளவில் குறைந்த வட்டி விகிதங்களையே வைத்துள்ளன. இந்தியா வட்டி விகிதத்தை கணிசமாக உயர்த்தியிருந்தால், சர்வதேச அளவில் அது நாட்டுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தியிருக்கும். ஆகையால் வட்டி விகிதங்களில் மாற்றம் தொடர்பான அனைத்து முடிவுகளும் இப்படிப்பட்ட பல வித காரணிகளை கருத்தில் கொண்டே செய்யப்படுகின்றன.


மேலும் படிக்க | FATF: சர்வதேச அளவில் இந்தியாவிற்கு பாராட்டு! பணமோசடியை தடுப்பதில் நம்பர் ஒன் நாடு!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ