புதுடெல்லி: மார்ச் 2021 உடன் முடிவடைந்த 2020-21 நிதியாண்டுக்கான ஜிஎஸ்டி வருடாந்திர வருமானத்தை வணிகங்கள் தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை பிப்ரவரி 28 வரை, அதாவது இரண்டு மாதங்களுக்கு அரசாங்கம் நீட்டித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

புதன்கிழமை இரவு வெளியிடப்பட்ட ஒரு ட்வீட்டில், "2020-21 நிதியாண்டிற்கான படிவம் GSTR-9 மற்றும் படிவம் GSTR-9C இல் சுய சான்றளிக்கப்பட்ட ரீகன்சிலேஷன் அறிக்கையை வழங்குவதற்கான காலக்கெடு 31.12.2021-லிருந்து 28.02.2022 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது" என்று மத்திய மறைமுக வரிகள் வாரியம் (Central Board of Indirect Taxes & Customs (CBIC)) தெரிவித்துள்ளது. 



 
GSTR 9 என்பது சரக்கு மற்றும் சேவை வரியின் (GST) கீழ் பதிவு செய்யப்பட்ட வரி செலுத்துவோர் ஆண்டுதோறும் தாக்கல் செய்ய வேண்டிய வருடாந்திர வருமானமாகும். வெவ்வேறு வரித் தலைப்புகளின் கீழ் செய்யப்பட்ட அல்லது பெறப்பட்ட வெளிப்புற மற்றும் உட்புற பொருட்கள் பற்றிய விவரங்களை இது கொண்டுள்ளது.


GSTR-9C என்பது GSTR-9 மற்றும் தணிக்கை செய்யப்பட்ட வருடாந்திர நிதிநிலை அறிக்கைக்கு இடையேயான சமரச அறிக்கையாகும்.


2 கோடி ரூபாய்க்கு மேல் மொத்த வருடாந்திர வருவாய் உள்ள வரி (Tax) செலுத்துவோர் மட்டுமே வருடாந்திர வருமானத்தை வழங்குவது கட்டாயமாகும். அதே சமயம் 5 கோடி ரூபாய்க்கு மேல் மொத்த வருவாய் உள்ள பதிவு செய்யப்பட்ட நபர்கள் மட்டுமே சமரச அறிக்கை (reconciliation statement) சமர்ப்பிக்க வேண்டும்.


ALSO READ | ITR filing: ஐடிஆர் தாக்கல் செய்ய 2 நாட்களே உள்ளன, காலக்கெடுவை மிஸ் செய்தால் என்ன நடக்கும் 


ALSO READ | Good News! 10 லட்சம் ரூபாய்க்கு அதிகமாய் வருமானம் இருந்தாலும், வரி கட்டவேண்டாம்! திட்டமிடுங்கள் 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR