7வது சம்பள கமிஷன் டிஏ உயர்வு: மத்திய அரசின் ஒரு கோடிக்கும் அதிகமான ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு ஒரு நல்ல செய்தி உள்ளது. அகவிலைப்படி உயர்வு மற்றும் அகவிலை நிவாரணம் உயர்வுக்கான ஊழியர்களின் காத்திருப்பு விரைவில் முடிவடையும். ஆதாரங்களில் இருந்து பெறப்பட்ட தகவல்களின்படி, அரசாங்கம் தனது ஊழியர்களுக்கும் (7th Pay Commission) ஓய்வூதியதாரர்களுக்கும் அடுத்த மாதம் அதாவது செப்டம்பர் மாதத்தில் ஒரு பெரிய பரிசை வழங்கலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அகவிலைப்படி உயர்வுக்காக  (DA Hike) காத்திருக்கும் மத்திய ஊழியர்கள்
உண்மையில், மத்திய அரசு அகவிலைப்படி உயர்வு (Dearness Allowances) மற்றும் அகவிலை நிவாரணத்தை (Dearness Relief) ஆண்டுக்கு இருமுறை திருத்துகிறது. முதல் திருத்தம் ஜனவரி 1 முதல் அமலுக்கு வருகிறது, இரண்டாவது திருத்தம் ஜூலை 1 முதல் அமலுக்கு வருகிறது. 24 மார்ச் 2023 அன்று ஹோலிக்கு முன்னதாக அகவிலைப்படியின் கடைசி திருத்தம் அறிவிக்கப்பட்டது, இது ஜனவரி 1, 2023 முதல் அமலுக்கு வருகிறது. அப்போது மத்திய ஊழியர்களுக்கு அகவிலைப்படி 4 சதவீதம் உயர்த்தி பரிசாக கிடைத்தது. இதற்குப் பிறகு டிஏ 38ல் இருந்து 42 சதவீதமாக உயர்த்தப்பட்டது. தற்போது மத்திய ஊழியர்களுக்கு 42 சதவீதம் அகவிலைப்படி வழங்கப்படுகிறது.


மேலும் படிக்க | மத்திய ஊழியர்களுக்கு ஜாக்பாட்.. பம்பர் ஊதிய உயர்வு! எவ்வளவு தெரியுமா?


செப்டம்பரில் பணியாளர்களுக்கு பெரிய பரிசு கிடைக்கும்
அதே சமயம்,  அகவிலைப்படி இரண்டாவது அதிகரிப்பு குறித்த அறிவிப்புக்காக மத்திய ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் காத்திருக்கின்றனர். ஊடகங்களில் வரும் செய்திகளின்படி, அடுத்த மாதம் அதாவது செப்டம்பரில் அகவிலைப்படி உயர்வை அரசு அறிவிக்கலாம்.


ஏஐசிபிஐ (AICPI) குறியீட்டு எண்ணிக்கையில் டிஏ உயர்வு
பணவீக்கத்தின் சுமையை குறைக்கவும், ஊழியர்களின் வாழ்க்கைத் தரத்தை சிறப்பாக பராமரிக்கவும் மத்திய அரசு (Central Government) தனது ஊழியர்களுக்கு DA அதாவது அகவிலைப்படியை வழங்குகிறது. தொழிலாளர் அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட AICPI குறியீட்டின் தரவுகளின் அடிப்படையில் ஒவ்வொரு 6 மாதங்களுக்கும் ஒரு வருடத்திற்கு இரண்டு முறை அரசாங்கம் இதைக் கணக்கிடுகிறது. அகவிலைப்படி கணக்கீடு அந்தந்த ஊதிய விகிதத்தின் அடிப்படையில் ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தில் செல்கிறது.


அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக காத்திருக்கிறோம்
இம்முறை  அகவிலைப்படி உயர்வு மற்றும் அகவிலை நிவாரணம் 4 அல்லது 3 சதவீதம் அதிகரிக்கலாம் என ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், ஏஐசிபிஐ (All India Consumer Price Index) குறியீட்டின் தரவுகளின் அடிப்படையில், மத்திய ஊழியர்களின் அகவிலைப்படி இம்முறையும் 4 சதவீதம் அதிகரிக்கலாம் என்று ஊகிக்கப்படுகிறது. எனினும், இம்முறை அகவிலைப்படி உயர்வு எவ்வளவு என்பது அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு பிறகே தெரியவரும்.


டிஏவில் 4 சதவீதம் உயர்வு எதிர்பார்க்கப்படுகிறது
இந்த முறையும் 4 சதவீதம் அகவிலைப்படி உயர்வு இருந்தால், அது தற்போதைய 42 சதவீதத்தில் இருந்து 46 சதவீதமாக உயரும். அதன் மத்திய ஊழியர்களின் சம்பள உயர்வு ஆண்டுக்கு ரூ.8000 முதல் ரூ.27000 ஆக இருக்கும்.


இப்படித்தான் DA கணக்கிடப்படும்
ஜூலை 2023 இல், அகவிலைப்படி குறைந்தபட்சம் 4 சதவீதம் அதிகரிக்கும் என நிபுணர்கள் கருதுகிறார்கள். இதன் பின்னணியில் உள்ள தர்க்கம் என்னவென்றால், விலைக் குறியீட்டு விகிதத்தில் காட்டப்படும் நகர்வு காரணமாக, டிஏ மதிப்பெண் 46 சதவீதத்தைத் தாண்டியுள்ளது. ஜூன் மாதத்தில், குறியீட்டின் எண்ணிக்கை 136.4 புள்ளிகளாக இருந்தது. இதன் அடிப்படையில் கணக்கீடு பார்த்தால், டிஏ மதிப்பெண் 46.24ஐ எட்டியுள்ளது. அதாவது மொத்த டிஏவில் 4% அதிகரிப்பு இருக்கும். ஏனெனில், டிஏ ஹோல் நம்பராக எடுக்கப்படுகிறது. இந்த எண்ணின் தசம எண் 0.51 க்கும் குறைவாக இருப்பதால் அது 46 சதவீதமாக மட்டுமே கருதப்படும்.


மேலும் படிக்க | 7th Pay Commission: ஊழியர்களுக்கு சூப்பர் செய்தி... 2 ஆண்டுகள் கூடுதல் விடுப்பு கிடைக்கும்!!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ