Indian Railways New Rules: ரயில் பயணிகளுக்கான முக்கியமான செய்தி!! அடிக்கடி ரயிலில் பயணிக்கும் நபரா நீங்கள்? அப்படியென்றால் இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். ரயிலில் பயணிக்கும் பயணிகள் பல விதிகளை பின்பற்ற வேண்டும். பல சமயங்களில் சில பயணிகள் மது அருந்திவிட்டு ரயிலில் பயணிக்கிறார்கள், அல்லது சில சமயம் பயணிகள் ரயிலில் மதுவுடன் பயணிக்கிறார்கள். இப்படி பலரை நாமும் நம் பயணங்களில் பார்த்திருப்போம். ஆனால், இப்படி செய்வது முறையா? ரயிலில் மதுபானங்களை எடுத்துச் செல்லலாமா? இதற்கான விதிகள் என்ன? இந்த அனைத்து விவரங்களையும் இந்த பதிவில் காணலாம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மதுபானம் தொடர்பாக வெவ்வேறு மாநிலங்களில் வெவ்வேறு விதிமுறைகள் உள்ளன


ரயிலில் மதுபானங்களை எடுத்துச் செல்வது நீங்கள் பயணிக்கும் மாநிலத்தைப் பொறுத்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஏனெனில் அனைத்து மாநிலங்களுக்கும் மதுபானம் தொடர்பாக அவற்றின் சொந்த விதிகள் உள்ளன. அரசியல் சட்டத்தில், மதுபானம் தொடர்பான விதிகளை அந்தந்த மாநிலங்கள் தங்கள் சொந்த விதிகளுக்கு ஏற்ப உருவாக்கலாம் என்ற விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.


ரயில்வே அதிகாரி தகவல் தெரிவித்தார்


அதே சமயம், ரயில், மெட்ரோ, பேருந்து போன்ற எந்த வித போக்குவரத்து வசதிகள் மூலமாகவும் ஒரு மாநிலத்திலிருந்து மற்றொரு மாநிலத்திற்கு மதுபானங்களை கொண்டு வர முடியாது. இதுகுறித்து வடக்கு ரயில்வேயின் தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி (சிபிஆர்ஓ) தீபக் குமார், “ரயிலில் மதுபானம் கொண்டு செல்வது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. ரயிலில் பயணிகள் மது அருந்தி பயணம் செய்தால், அவர்கள் மீது ரயில்வே துறை கடும் நடவடிக்கை எடுக்கிறது.” என்று கூறினார்.


மேலும் படிக்க | ரயிலில் குழந்தைகள் பயணம் செய்ய புதிய விதிகள் - இந்திய ரயில்வே!


500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்


மது அருந்திவிட்டு ரயிலில் பயணம் செய்தாலோ, அல்லது மதுபானங்களை எடுத்துச்சென்றாலோ, அப்படி செய்பவர்கள் மீது இந்திய ரயில்வே சட்டம் 1989 பிரிவு 165ன் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். இதுதவிர, ரயிலில் தடை செய்யப்பட்ட வேறு ஏதேனும் பொருட்களை யாரேனும் வைத்திருந்தால், அவர்களுக்கு 500 ரூபாய் அபராதமும் விதிக்கப்படும். மறுபுறம், இந்த பொருளால் ஏதேனும் இழப்பு ஏற்பட்டால், அந்த நபர் அதையும் ஈடுசெய்ய வேண்டும்.


பல மாநிலங்கள் ட்ரை ஸ்டேட்டாக உள்ளன 


தற்போது, ​​பீகார் மற்றும் குஜராத் போன்ற மாநிலங்கள் ட்ரை ஸ்டேட்களாக உள்ளன. அதாவது இந்த இடங்களில் மதுபான பயன்பாட்டிற்கு தடை உள்ளது. இங்கு மதுபானத்துடன் பிடிபட்டால், சட்ட சிக்கலில் சிக்கக்கூடும். அதுமட்டுமின்றி, மது பாட்டில்கள் திறந்திருந்தால், ரயில்வே அபராதம் விதிக்கலாம். இது தவிர, ரயில் ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்திற்குச் சென்றால், அது மதுபானம் தொடர்பாக வரி ஏய்ப்பு வழக்காகவும் மாறலாம். இதுபோன்ற சூழ்நிலையில், குற்றவாளி ஜிஆர்பியிடம் ஒப்படைக்கப்படுவார். அதன் பிறகு அந்த மாநில கலால் துறை விதிகளின்படி நடவடிக்கை எடுக்கப்படும்.


இரவில் போனை சார்ஜ் செய்ய முடியாது


இரவு 11 மணி முதல் அதிகாலை 5 மணி வரை ரயிலில் பயணிகள் தங்கள் ஸ்மார்ட்போன் அல்லது மடிக்கணினிகளை சார்ஜ் செய்ய இந்திய ரயில்வே தடை விதித்துள்ளது. ரயிலில் எந்த வித விபத்தும் ஏற்படாமல் இருக்க இந்திய ரயில்வே இப்படி செய்கிறது. மக்கள் பெரும்பாலும் தங்கள் தொலைபேசியை சார்ஜிங்கில் போட்டுவிட்டு அது முழுமையாக சார்ஜ் ஆனவுடன் சார்ஜை அணைக்க மறந்துவிடுகிறார்கள். சார்ஜிங்கில் போட்டுவிட்டு பயணிகள் தூங்கி விடுவதால், சார்ஜை மூட அவர்களுக்கு பல சமயம் நினைவிருப்பதில்லை. 


லும் படிக்க | கடும் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் ரயில் டிக்கெட்டில் சலுகை... முழு விவரம் இதோ!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ