7 ஆவது ஊதியக்குழு, சமீபத்திய புதுப்பிப்பு: மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி உயர்வு குறித்து மத்திய அரசு நீண்ட நாட்களாக பரிசீலித்து வந்த நிலையில், இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. இந்த முறை டிஏ பெருமளவில் அதிகரிக்கும் என்று நம்பப்படுகிறது. இது குறித்த விவாதங்களும் நடந்து வருகின்றன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இம்முறை அரசு மத்திய ஊழியர்களின் டிஏவை 4 சதவீதம் அதிகரிக்கக்கூடும் என ஒரு தரப்பினரும், டிஏ 3 சதவிகிதம் அதிகரிக்கப்படும் என ஒரு தரப்பினரும் கூறி வருகிறார்கள். அகவிலைப்படி 3 சதவிகிதம் அதிகரித்தால், ஊழியர்களுக்கான மொத்த அகவிலைபப்டி 45 சதவிகிதமாகவும், 4 சதவிகிதம் அதிகரித்தால் 46 சதவிகிதமாகவும் உயரும். இதன் பிறகு அடிப்படை சம்பளத்தில் பம்பர் அதிகரிப்பு சாத்தியமாகும் என்று நம்பப்படுகிறது. இதன் காரணமாக இது குறித்த ஊழியர்களின் ஆர்வம் இன்னும் அதிகரித்து வருகின்றது. 


அகவிலைப்படி அதிகரிப்பு குறித்து இன்னும் அரசாங்கத்தால் எதுவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இந்த அறிவிப்பு விரைவில் வரக்கூடும் என ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இப்போது ஊழியர்களின் அகவிலைப்படி அதிகரிகக்ப்பட்டால், அது விலைவாசி ஏற்றம் மற்றும் பணவீக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள ஊழியர்களுக்கு பெரிய நிவாரணமாக இருக்கும். 


மேலும் படிக்க | 7th Pay Commission: ஊழியர்களுக்கு நல்ல செய்தி.. விரைவில் 50% டிஏ, விவரம் இதோ


அகவிலைப்படி எவ்வளவு உயரும்? 


மோடி அரசு மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணத்தை 4 சதவிகிதம் அதிகரிக்கும் என கூறப்படுகின்றது. அதன் பிறகு ஊழியர்களின் அகவிலைபப்டி 46 சதவிகிதமாக அதிகரிக்கும். ஆனால், சில நாட்களுக்கு முன்னர் அகில இந்திய ரயில்வே கூட்டமைப்பு பொதுச் செயலாளர் ஷிவ் கோபால் மிஸ்ரா, “ஜூன் 2023 -க்கான CPI-IW ஜூலை 31, 2023 அன்று வெளியிடப்பட்டது. நாங்கள் அகவிலைப்படியில் நான்கு சதவீத புள்ளி உயர்வு கோருகிறோம். ஆனால் அகவிலைப்படி அதிகரிப்பு மூன்று சதவீத புள்ளிகளை விட சற்று அதிகமாக உள்ளது. ஒரு தசம புள்ளிக்கு மேல் அகவிலைப்படி அதிகரிப்பதை அரசாங்கம் பரிசீலிக்கவில்லை. இதனால் டிஏ மூன்று சதவீத புள்ளிகள் அதிகரித்து 45 சதவீதமாக உயர வாய்ப்புள்ளது" என்று தெரிவித்துள்ளார். தற்போது மத்திய ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் 42 சதவீத அகவிலைப்படியை பெற்று வருகின்றனர்.


தற்போது அகவிலைப்படியை உயர்த்தினால், 1 கோடி குடும்பங்கள் பயன்பெறும். அகவிலைப்படி அதிகரிக்கப்பட்டால், ஊழியர்களின் சம்பளமும் நல்ல அளவில் அதிகரிக்கும். டிஏ 4% அதிகரித்தால்,  உங்கள் சம்பளம் ரூ.30,000 எனில், அது சுமார் ரூ.1,200 அதிகரிக்க வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது. இதன்படி வருடாந்தம் சுமார் 14 ஆயிரம் ரூபாய் சம்பளம் அதிகரிக்கும்.


ஃபிட்மெண்ட் ஃபாக்டர் பற்றிய சமீபத்திய புதுப்பிப்பு


நீண்ட காலத்திற்குப் பிறகு, மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் ஃபிட்மென்ட் ஃபாக்டரையும் அதிகரிக்கக்கூடும். ஃபிட்மெண்ட் ஃபாக்டர் 2.60 -இல் இருந்து 3 மடங்காக அதிகரிக்கலாம் என்று நம்பப்படுகிறது. இதன் காரணமாக குறைந்தபட்ச அடிப்படை சம்பளத்தில் நல்ல ஏற்றம் இருக்கும். இது மட்டுமின்றி, நீண்ட நாட்களுக்குப் பிறகு ஃபிட்மென்ட் ஃபாக்டருக்கான காத்திருப்பும் முடிவுக்கு வரும்.


தொழிலாளர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி (டிஏ) மற்றும் அகவிலை நிவாரண (டிஆர்) விகிதங்கள் தொழிலாளர் அமைச்சகத்தின் ஒரு பிரிவான தொழிலாளர் பணியகத்தால் வெளியிடப்படும் தொழில்துறை தொழிலாளர்களுக்கான சமீபத்திய அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீட்டின் (AICPI-IW) அடிப்படையில் ஒவ்வொரு மாதமும் நிர்ணயிக்கப்படுகிறது.


மேலும் படிக்க | 7th Pay Commission மத்திய அரசு ஊழியர்களுக்கு முக்கிய செய்தி.. 45% டிஏ, அறிவிப்பு எப்போது


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ