7வது ஊதியக் குழு, சமீபத்திய புதுப்பிப்பு: அகவிலைப்படி உயர்வு அறிவிப்புக்காக காத்திருந்த லட்சக்கணக்கான மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு நல்ல செய்தி கிடைத்துள்ளது. ஏஐசிபிஐ இன்டெக்ஸ் தரவு நேற்று வெளியிடப்படது. இதன் கணக்கீட்டின் மூலம், ஊழியர்களின் நம்பிக்கை அதிகரித்துள்ளது. அகவிலைப்படி கணக்கீடு மற்றும் டிஏ குவாண்டத்தை நிர்ணயிப்பதற்கான அடித்தளமாக கருதப்படும் ஏஐசிபிஐ குறியீட்டின் ஜூன் மாதத்திற்கான எண்கள் ஊழியர்களுக்கு ஊக்கம் அளிக்கும் வண்ணம் வந்துள்ளன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஜூன் 2023 ஏஐசிபிஐ குறியீடு


ஜூன் 2023 ஏஐசிபிஐ குறியீட்டின் புள்ளிவிவரங்கள் அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டுள்ளன. இது குறியீட்டில் பெரிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்பதைக் காட்டுகிறது. மே மாதத்தில் 134.7 புள்ளிகளாக இருந்த குறியீட்டு எண்ணுடன் ஒப்பிடுகையில் ஜூன் குறியீட்டு எண் 136.4 புள்ளிகளை எட்டியுள்ளது. ஜூன் மாதத்தில் மொத்தம் 1.7 புள்ளிகள் அதிகரிப்பு பதிவு செய்யப்பட்டுள்ளது. மே மாத புள்ளிவிவரங்களின்படி, மொத்த அகவிலைப்படி மதிப்பெண் 45.58 சதவீதமாக இருந்தது, இது ஏஐசிபிஐ குறியீட்டு புள்ளிவிவரங்களைப் பொறுத்து ஜூன் 2023 இல் 46.24 சதவீதமாக அதிகரித்துள்ளது.


டிஏ 46 சதவீதமாக அதிகரிக்கலாம்


இப்போது மத்திய ஊழியர்களுக்கு 46 சதவீதம் அகவிலைப்படி வழங்கப்படும் என்ற ஊகம் ஊடக அறிக்கைகளில் பரபரப்பாக உள்ளது. இது தொடர்பான அறிவிப்பு செப்டம்பர் மாதம் அரசால் வெளியிடப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. டிஏவை உயர்த்துவதற்கு 7வது மத்திய ஊதியக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் அங்கீகரிக்கப்பட்ட ஃபார்முலா பின்பற்றப்படும்.


மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி ஆண்டுக்கு இருமுறை மாற்றியமைக்கப்படுகிறது. முதலாவது ஜனவரி முதல் ஜூன் வரை வழங்கப்படுகிறது, இரண்டாவது ஜூலை முதல் டிசம்பர் வரை வழங்கப்படுகிறது.


மேலும் படிக்க | 7th Pay Commission: வந்தது நல்ல செய்தி... 46% டிஏ ஹைக் உறுதி, AICPI குறியீட்டில் ஏற்றம்


டிஏ உயர்வு செப்டம்பர் மாதம் அறிவிக்கப்படும்


இதற்கிடையில், புதிய டிஏ விகிதங்கள் அரசாங்கத்தால் அறிவிக்கப்படும் வரை, ஊழியர்களுக்கு 42 சதவீத டிஏ ஊதியம் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், அரசு அகவிலைப்படியை உயர்த்தி அறிவிப்பை வெளியிட்டவுடன், உயர்த்தப்பட்ட தொகை ஜூலை 2023 முதலான அரியர் தொகையுடன் வழங்கப்படும். இந்த அகவிலைப்படி உயர்வின் பலன், 7 ஆவது ஊதியக்குழுவின் கீழ் சம்பளம் பெறும் மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும். 1 கோடிக்கும் அதிகமான மத்திய ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு இந்த உயர்வின் பலன் நேரடியாக வழங்கப்படும்.
 
அகவிலைப்படி உயர்வு மார்ச் 2023


இதற்கு முன்னர் ஜனவரி 2023 -யிலும் அகவிலைப்படி 4 சதவிகிதம் உயர்த்தப்பட்டது. இதற்கான அறிவிப்பை பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை மார்ச் மாதம் வெளியிட்டது. அப்போது 38 சதவிகிதமாக இருந்த அகவிலைப்படி 42 சதவிகிதம்மாக அதிகரிக்கபட்டது. தற்போது ஜூலை 2023 முதல் அகவிலைப்படி மீண்டும் உயர்த்தப்பட்டால் இது 46 சதவிகிதமாக அதிகரிக்கும். அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணம் ஆகிய இரண்டின் மூலம் கருவூலத்தில் ஏற்படும் கூட்டுப் பாதிப்பு ஆண்டுக்கு ரூ.12,815.60 கோடியாக இருக்கும்.


இதன் மூலம் 47.58 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 69.76 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயனடைவார்கள்.


ஜூலை 2023 இல் அகவிலைப்படியில் 4 சதவீதம் அதிகரிப்பு இருக்கும். இதன் மூலம் ஜூலை 2021 முதல், டிஏ -வில் மொத்தம் 15 சதவீதம் அதிகரிப்பு ஏற்பட்டு இருக்கின்றது. ஜூலை 2021 இல், ஒன்றரை ஆண்டுகளாக நிறுத்தப்பட்டிருந்த அகவிலைப்படி அதாவது டிஏ ஒரே நேரத்தில் 17 சதவீதம் அதிகரிக்கப்பட்டது. அதன் பிறகு, ஜூலை 2021 இல் 3 சதவீதமும், ஜனவரி 2022 இல் 3 சதவீதமும், ஜூலை 2022 இல் 4 சதவீதமும், பின்னர் 2023 ஜனவரியில் 4 சதவீதமும் அதிகரிக்கப்பட்டது. ஒட்டுமொத்தமாக இதுவரை அகவிலைப்படி 42 சதவீதத்தை எட்டியுள்ளது. இப்போது ஜூலை 2023 இல், மீண்டும் 4 சதவீதம் உயர்ந்துள்ளது. 


மேலும் படிக்க | மத்திய ஊழியர்களுக்கு குட் நியூஸ், டிஏ ஹைக் எப்போது? வந்தது அப்டேட்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ