FD என்னும் நிலையான வைப்புத்தொகை ஒரு பிரபலமான முதலீட்டு வழிமுறை. ஏனென்றால், FD என்பது நம்பகமான முதலீட்டு வழிமுறையாகும், ஏனெனில் அதில் உங்கள் பணம் பாதுகாப்பாக இருக்கும், மேலும் இதில் நீங்கள் உத்தரவாதமான வருமானத்தையும் பெறுவீர்கள். ஆனால் அதிக வருமானம் உள்ளவர்களுக்கு எஃப்டியில் வரிச் சலுகைகள் கிடைக்காது. இதற்குக் காரணம், நீங்கள் சம்பாதிக்கும் வட்டி உங்கள் ஆண்டு வருமானத்தில் சேர்க்கப்படுகிறது. அத்தகைய சூழ்நிலையில், உங்கள் வருமானம் வரி வரம்பிற்குள் வந்தால், அதற்கு வருமான வரி அடுக்கு விகிதத்தின்படி நீங்கள் வரி செலுத்த வேண்டும். ஆனால் நீங்கள் FD மூலம் வரிச் சலுகைகளைப் பெற விரும்பினால், அதற்கு சில FD திட்டங்களில் முதலீடு செய்வது பலன் அளிக்கும். அத்தகைய வரி சேமிப்பு FD பற்றி தெரிந்து கொண்டு, பலன்களை எப்படி பெறுவது என்று அறிந்து கொள்ளலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


நீங்கள் FD மீது வரி விலக்கு கோர விரும்பினால், நீங்கள் FD இல் குறைந்தது 5 ஆண்டுகளுக்கு முதலீடு செய்ய வேண்டும். 5 வருட FD என்பது வரி சேமிப்பு FD என அழைக்கப்படுகிறது. வங்கிகளின் சில எஃப்டி முதலீடுகள், தபால் நிலைய சேமிப்பு கணக்குகுகளில் இந்த விருப்பத்தைப் பெறுவீர்கள். வெவ்வேறு வங்கிகள் மற்றும் தபால் நிலையங்களில் இதன் வட்டி விகிதம் மாறுபடலாம். 5 வருட FD இல் நீங்கள் வருமான வரிச் சட்டத்தின் 80C பிரிவின் பலனைப் பெறுவீர்கள். பிரிவு 80C இன் கீழ், உங்களின் மொத்த வருமானத்தில் இருந்து ரூ.1.5 லட்சம் வரையில் வருமான வரி விலக்கு கிடைக்கும்.


5 ஆண்டுகளுக்கு முன் கணக்கில் இருந்து பணத்தை எடுப்பதல் ஏற்படும் இழப்புகள்


5 ஆண்டுகளுக்கு முன் உங்கள் FD கணக்கில் இருந்து பணத்தை திரும்ப எடுத்து விட்டால், வங்கி உங்களுக்கு அபராதம் விதிப்பது மட்டுமல்லாமல் வரிச் சலுகைகளையும் பெறமாட்டீர்கள். இந்தச் சூழ்நிலையில், நீங்கள் எஃப்டியை உடைக்கும் போது, ஆண்டின் முழுத் தொகையும், நீங்கள் வருமான வரி விலக்கின் (Income Tax Saving Tips) பலனைப் பெற இயலாமல் உங்கள் வருமானத்தில் சேர்க்கப்படும். இது தவிர, உங்கள் வருமானத்தில் வட்டியும் சேர்க்கப்படும். அதன் பிறகு, நீங்கள் வரும் வருமான வரி அடுக்குக்கு ஏற்ப வரி செலுத்த வேண்டும்.


மேலும் படிக்க | Income Tax: சம்பளத்தில் ‘இந்த’ அலவென்ஸ்களுக்கு வரியே கிடையாது..!


வரி சேமிப்பு FD கிடைக்கும் வட்டி விபரம்


தபால் அலுவலகம் - 7.5%
பாரத ஸ்டேட் வங்கி - 6.5%
பேங்க் ஆஃப் பரோடா - 6.5%
பேங்க் ஆஃப் இந்தியா - 6.5%
பஞ்சாப் நேஷனல் வங்கி - 6.5%


கூடுதல் தகவல்:


வருமான வரியை சேமிக்க உதவும் தேசிய ஓய்வூதிய திட்டம் (NPS)


தேசிய ஓய்வூதிய அமைப்பில் (NPS), நீங்கள் பிரிவு 80C இன் கீழ் ரூ. 1.5 லட்சம் வரியைச் சேமிக்கிறீர்கள். ஆனால் இதற்கு மேல், பிரிவு 80CCD (1B) இன் கீழ் ரூ. 50,000 கூடுதலாகச் சேமிக்கலாம். அதாவது மொத்தம் ரூ.2 லட்சம் வரை சேமிக்கலாம்.


வருமான வரியை சேமிப்பை தரும் திட்டங்களில் முதலீடு செய்தால், வரி விலக்க்கு பெற்று வரியை சேமிக்கலாம். வரிச் சேமிப்புக்கு உங்களுக்கு மார்ச் 31 வரை மட்டுமே அவகாசம் உள்ளது. அத்தகைய சூழ்நிலையில், இப்போதே சேமித்தால் சம்பளத்தில் இருந்து வரி கழிக்கப்படாமல் சேமிக்க முடியும். வருமான வரியைச் சேமிப்பதற்கான மிகவும் பிரபலமான வழி 80C ஆகும்


மேலும் படிக்க | கிரெடிட் கார்டு விதிகளில் மாற்றம்... நோட் பண்ணிக்கோங்க மக்களே!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ