7th Pay Commission: கர்நாடகா ஊழியர்களுக்கு நவம்பர் மாதத்தில் பெரிய பரிசு கிடைக்க உள்ளது. இதற்கான அறிகுறிகள் மாநில அரசிடம் இருந்து தெரியத் தொடங்கியுள்ளன. உண்மையில், கர்நாடகாவில் ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்த மாநில அரசு குழுவை அமைத்தது. இந்த குழு தனது பரிந்துரைகளை அடுத்த மாதம் அதாவது நவம்பரில் மாநில அரசிடம் சமர்ப்பிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே, தேவைப்பட்டால் மாநில அரசு உரிய முடிவு எடுக்கும் என்று மாநில உள்துறை அமைச்சர் பரமேஸ்வரா தெரிவித்துள்ளார். குழு நவம்பர் மாதத்தில் பரிந்துரைகளை சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது. கமிஷன் அறிக்கையை அமல்படுத்த முடிவு எடுப்பதாக அம்மாநில முதல்வர் சித்தராமையா ஏற்கனவே உறுதி அளித்துள்ளார். அரசு ஊழியர்கள் இனி கவலைப்பட தேவையில்லை என்று அவர் கூறினார். 7வது ஊதிய குழு  (7th Pay Commission) பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்படும் என்றார் அவர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

NPS  என்னும் தேசிய ஓய்வூதிய முறை ரத்து செய்யப்படும்


புதிய ஓய்வூதியத் திட்டத்தை (என்பிஎஸ்) ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை (ஓபிஎஸ்) அரசு அமல்படுத்தும் என்று கர்நாடக உள்துறை அமைச்சர் ஜி பரமேஸ்வரா தெரிவித்தார். மே மாதம் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையில் பழைய ஓய்வூதியத்தை அமல்படுத்துவதாக காங்கிரஸ் உறுதி அளித்திருந்தது. இதற்கான குழு அமைக்கப்பட்டுள்ளது. அறிக்கையின் அடிப்படையில் மாநில அரசு முடிவெடுக்கும். மாநில அரசு ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு இலவச சிகிச்சை அளிக்கும் வகையில் கர்நாடகா ஆரோக்கிய சஞ்சீவினி திட்டத்தை அரசு விரைவில் தொடங்கும் என்றார். அடுத்த 5 ஆண்டுகளில் 2.5 லட்சம் காலி பணியிடங்களை மாநில அரசு நிரப்பும்.


மேலும் படிக்க | மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் அப்டேட்: தேசிய ஓய்வூதிய திட்டத்தில் வரும் லாபகரமான மாற்றம்


டிஏவை 23% அதிகரிக்க வேண்டும் என கோரிக்கை


ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை விரைவில் அமல்படுத்துமாறு அமைச்சரிடம் மாநில அரசு ஊழியர் சங்கத் தலைவர் சி.எஸ்.ஷடாக்ஷரி வேண்டுகோள் விடுத்துள்ளார். இதனுடன், அகவிலைப்படியை (டிஏ) 23 சதவீதம் உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.


மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி அதிகரிப்பு


சமீபத்தில், மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரண அதிகரிப்பை மத்திய அரசு அறிவித்தது. 2023 ஜனவரியில் அகவிலைப்படி 4 சதவிகிதம் அதிகரித்ததை தொடர்ந்து ஜூலை  மாதத்திலும் அரசு அகவிலைப்படியை 4 சதவிகிதம் மத்திய அரசு அதிகரித்துள்ளது. இதன் பிறகு ஊழியர்களின் மொத்த அகவிலைபப்டி 42% -லிருந்து 46% ஆக அதிகரித்துள்ளது. நவம்பரில் அதிகரித்த அகவிலைப்படியும் ஜூலை மாதம் முதலான 3 மாத அரியர் தொகையும் சம்பளத்துடன் ஊழியர்களுக்கு வழங்கப்படும். இனி அடுத்த அகவிலைப்படி அதிகரிப்பு 2024ம் ஆண்டில் இருக்கும். இருப்பினும், அடுத்த முறை டிஏ எவ்வளவு அதிகரிக்கும் என்பது ஏஐசிபிஐ குறியீட்டின் அரையாண்டுத் தரவைப் பொறுத்தது.


தமிழக அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி


மத்திய அரசை தொடர்ந்து மாநில அரசுகளும் தங்களின் ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்தி பரிசாக வழங்கி வருகின்றன. இந்த நிலையில், தற்போது தமிழக அரசு தனது ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அகவிலைப்படியை 4 சதவீதம் உயர்த்துவதாக கடந்த புதன்கிழமை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அகவிலைப்படி உயர்வு ஜூலை 1 ஆம் தேதி, 2023 முதலே அமலுக்கு வரும். இந்த உயர்வுக்குப் பிறகு, அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 42 சதவிகிதத்தில் இருந்து 46 சதவீதமாக அதிகரித்துள்ளது.


மேலும் படிக்க | பென்ஷன் பற்றி இனி நோ டென்ஷன்: மாதா மாதம் 1 லட்சம் ஓய்வூதியம்.. அசத்தும் NPS


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ