ஏழாவது ஊதிய கமிஷன், சமீபத்திய புதுப்பிப்பு: அகவிலைப்படி உயர்வு அறிவிப்புக்காக சுமார் ஒரு கோடி மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுபவர்கள் காத்திருக்கிறார்கள். அகவிலைப்படி ஒவ்வொரு ஆண்டும் இருமுறை அதிகரிக்கப்படுகிறது. கடைசியாக டிஏ உயர்வு மார்ச் 24, 2023 -இல் அறிவிக்கப்பட்டது. இது ஜனவரி 1, 2023 முதல் அமலுக்கு வந்தது. அப்போது மத்திய அரசு அகவிலைப்படியை 4% அதிகரித்து 42% ஆக உயர்த்தியது. தற்போது மீண்டும் அகவிலைப்படி உயர்வு அறிவிப்புக்காக தொழிலாளர்கள் காத்திருக்கின்றனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அகவிலைப்படி உயர்வுக்கான அறிவிப்பு எப்போது வரும்? 


ஊழியர்களுக்கு இந்த நற்செய்தி எப்போது வழங்கப்படும் என்பதை அரசாங்கம் இதுவரை தெரிவிக்கவில்லை என்றாலும், அடுத்த மாதம் அதாவது செப்டம்பர் மாதம் அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்படும் என்று ஊகிக்கப்படுகிறது. ஒரு அறிக்கையின்படி, நாட்டில் சில்லறை பணவீக்கம் ஜூலை மாதத்தில் 15 மாதங்களில் மிக உயர்ந்த அளவை எட்டியுள்ளது.


இத்தகைய சூழ்நிலையில், ஒரு கோடிக்கும் மேற்பட்ட ஓய்வூதியம் பெறுவோர் மற்றும் ஊழியர்களுக்கு அகவிலைப்படியை 3 சதவீதம் உயர்த்தி மத்திய அரசு மொத்த அகவிலைபப்டியை 45 சதவீதமாக உயர்த்தும் என ஒரு தரப்பினர் கருதுகிறார்கள். எனினும், 4 சதவிகித உயர்வு இருக்கும் என மற்றொரு தரப்பினர் நம்புகின்றனர். இந்த அதிகரிப்பு பற்றிய அறிவிப்பை மத்திய அரசு செப்டம்பர் 2023 -இல் அறிவிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 


மேலும் படிக்க | 7th Pay Commission: ஊழியர்களுக்கு நல்ல செய்தி.. விரைவில் டிஏ, விவரம் இதோ


டிஏ உயர்வு பற்றிய பெரிய செய்தி


7வது ஊதியக் குழு பணவீக்கத்தை கருத்தில் கொண்டு, அரசு ஊழியர்களின் சுமையை குறைக்க அகவிலைப்படியை (DA Hike) வழங்குகிறது. பணவீக்கம் அதிகரிக்கும் போது, ​​அரசு ஊழியர்களின் வாழ்க்கைத் தரத்தை பராமரிக்க அகவிலைப்படி வழங்கப்படுகிறது. இது ஆண்டில் இரு முறை, அதாவது ஆறு மாதங்களுக்கு ஒரு முறை மாற்றப்படுகின்றது. இதன் அளவு அப்போதைய பணவீக்கத்தைப் பொறுத்தது. இந்த அகவிலைப்படியானது அந்தந்த ஊதிய விகிதத்தின் அடிப்படையில் ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தின் படி கணக்கிடப்படுகிறது.


இரண்டு நல்ல செய்திகள்


கூடிய விரைவில் ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு பற்றிய அறிவிப்பு வெளியிடப்படும். இதனுடன் அவர்களுக்கு மற்றொரு நல்ல செய்தியும் காத்திருக்கின்றது. ஊழியர்களுக்கான ஃபிட்மெண்ட் ஃபாக்டரையும் அரசு அதிகரிக்கும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து மோடி அரசு இப்போது விரைவில் நல்ல செய்தியை வழங்க உள்ளது. பண்டிகை காலம் துவங்கவுள்ள நிலையில், இந்த இரட்டை அதிகரிப்புகள் நடந்தால், அது அரசு ஊழியர்களுக்கு அளிக்கும் மிகப்பெரிய பரிசாக கருதப்படும். 


ஃபொட்மெண்ட் ஃபாக்டரில் அதிகரிப்பு


ஊழியர்கள் நீண்ட காலமாக ஃபிட்மென்ட் பேக்டரை அதிகர்க்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகிறார்கள். இது நடந்தால் ஊழியர்களின் அடிப்படை ஊதியத்தில் நல்ல அதிகரிப்பு இருக்கும். ஃபிட்மென்ட் பேக்டர் மற்றும் டிஏ அதிகரிக்கும் தேதியை அரசாங்கம் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. எனினும் இது குறித்த அறிவிப்பு மிக விரைவில் வரும் என ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. 


ஃபிட்மெண்ட் ஃபாக்டர் 2016 இல் அதிகரிக்கப்பட்டது


2016 ஆம் ஆண்டு ஏழாவது ஊதியக்குழு அரசால் அமல்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. ஏழாவது ஊதியக்குழுவின் கீழ் ஊழியர்களின் சம்பளம் உயர்த்தப்பட்டது. அதன் பிறகு அவர்களது குறைந்தபட்ச சம்பளத்தில் பெரிய அதிகரிப்பு காணப்பட்டது. அடிப்படை குறைந்தபட்ச சம்பளம் ரூ.18,000 ஆக நிர்ணயிக்கப்பட்டது. ஃபிட்மென்ட் ஃபாக்டர் 2.57 மடங்காக நிர்ணயம் செய்யப்பட்டுள்ள நிலையில், அதை 3.68 மடங்காக உயர்த்த வேண்டும் என ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பணியாளர் மூன்று மடங்கு வரை ஊதிய உயர்வு பெறலாம் என நம்பப்படுகின்றது.


மேலும் படிக்க | 7th Pay Commission: ஊழியர்களுக்கு முக்கிய அப்டேட்... இந்த நாளில் டிஏ ஹைக் அறிவிப்பு!!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ