ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி தொடர்பாக ஊழியர்களின் மனதில் பல குழப்பங்கள் இருந்து வருகிறது.  இதில் முக்கியமாக எப்போது பணத்தை எடுக்க முடியும் என்பது போன்ற கேள்விகள் ஊழியர்களின் மனதில் உள்ளது.  இபிஎஃப் கணக்கு தானாகவே மூடப்படும் என்பது பற்றி பெரிதாக யாருக்கும் தெரிந்திருக்காது, அப்படி இபிஎஃப் கணக்கு மூடப்பட்டு விட்டால் கணக்கிலுள்ள முழு பணமும் சிக்கிவிடும், இதனை திரும்ப பெறுவது மிகப்பெரிய போராட்டமாக மாறிவிடும்.  உங்கள் பழைய நிறுவனம் மூடப்பட்டு, உங்கள் பணத்தை புதிய நிறுவனத்தின் கணக்கிற்கு மாற்றாமல் இருந்தாலோ அல்லது 36 மாதங்களுக்கு இந்தக் கணக்கில் எந்தப் பரிவர்த்தனையும் நடைபெறவில்லை என்றாலோ, 3 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தக் கணக்கு தானாகவே மூடப்பட்டு, செயலற்ற கணக்குகளின் பட்டியலில் சேர்க்கப்பட்டு விடும்.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | JanDhan Account: அரசின் பெரிய பரிசு, ரூ. 10,000 கிடைக்கும், இப்பவே இதை பண்ணுங்க


மூடப்பட்ட கணக்கில் சிக்கியுள்ள பணத்தை மீட்டெடுக்க வங்கியின் உதவியுடன் நீங்கள் கேஒய்சி செய்யலாம். இபிஎஃப்ஓ சில காலத்திற்கு முன்பு தனது சுற்றறிக்கை ஒன்றில், செயல்படாத கணக்குகள் தொடர்பான கோரிக்கைகளை தீர்க்கும் போது கவனமாக இருக்க வேண்டும் என்று கூறியிருந்தது.  36 மாதங்களுக்கும் மேலாக பங்களிப்பு தொகை டெபாசிட் செய்யப்படாத கணக்குகளை, இபிஎஃப்ஓ ​​செயல்படாத கணக்குகளின் பிரிவில் வைக்கிறது.  இருப்பினும் செயல்படாத கணக்குகளுக்கும் வட்டி கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.  கேஒய்சி ஆவணங்களில் பான் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட், ரேஷன் கார்டு, இஎஸ்ஐ அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம் ஆகியவை அடங்கும்.  இது தவிர, ஆதார் போன்ற அரசால் வழங்கப்படும் வேறு எந்த அடையாள அட்டையையும் இதற்குப் பயன்படுத்தலாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். 


கேஒய்சி ஆவணங்களை சமர்ப்பித்த பிறகு, உதவி வருங்கால வைப்பு நிதி ஆணையர் அல்லது பிற அதிகாரிகள் தொகைக்கு ஏற்ப கணக்குகளில் இருந்து பணம் எடுப்பதையோ அல்லது கணக்குப் பரிமாற்றத்தையோ அங்கீகரிப்பார்கள்.  கணக்கில் ரூ.50,000க்கு மேல் தொகை இருந்தால், உதவி வருங்கால வைப்பு நிதி ஆணையரின் ஒப்புதலுக்குப் பிறகு பணம் எடுக்கப்படும்.  ரூ.25,000-க்கு அதிகமாகவும், ரூ.50,000க்கு  குறைவாகவும் இருந்தால் அதிகாரி பணத்தை திரும்பப் பெற ஒப்புதல் அளிப்பார்.  அதுவே கணக்கில் ரூ.25,000-க்கு குறைவாக இருந்தால் அதற்கு டீலிங் அசிஸ்டென்ட் ஒப்புதல் அளிக்கலாம்.


மேலும் படிக்க | இலவச ரேஷன் விதிகளை மாற்றியது அரசு, இனி கோதுமை, அரிசி...


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ