EPFO Update: ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பான EPFO, பிஎஃப் உறுப்பினர்களின் நன்மை மற்றும் வசதிக்காக அவ்வப்போது புதிய விதிகளை அறிமுகம் செய்கிறது, ஏற்கனவே இருக்கும் விதிகளில் மாற்றங்களையும் செய்கிறது. இபிஎஃப் சந்தாதாரர்களின் (EPF Subscribers) வசதிகளை அதிகரிக்க, இபிஎஃப்ஓ சமீபத்திலும் பல விதிகளில் மாற்றங்களைச் செய்துள்ளது. அவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

EPFO ​​மருத்துவம், கல்வி, திருமணம் மற்றும் வீடு கட்டுதல் அல்லது வாங்குதல் ஆகிய காரணங்களுக்காக, செய்யப்படும் அட்வான்ஸ் க்ளெய்ம்களை செட்டில் செய்ய தானியங்கு செட்டில்மெண்ட் அதாவது ஆட்டோ-மோட் செட்டில்மென்ட் வசதியையும் வழங்கியுள்ளது. 6 கோடிக்கு மேல் உள்ள இபிஎஃப் உறுப்பினர்கள் (EPF Members) இந்த வசதியைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இதன் மூலம் அவசர காலங்களில் மக்களுக்கு நிதி உதவி கிடைக்கின்றது. 


கால அவகாசம் குறைக்கப்பட்டுள்ளது


இதற்கு முன்னர், EPFO ​​இன் இந்த வசதியைப் பெற 15 முதல் 20 நாட்கள் ஆகும். எனினும், தற்போது இந்த கால அவகாசம் 3 முதல் 4 நாட்களாக குறைக்கப்பட்டு விட்டது. முன்னர், உறுப்பினரின் தகுதி, ஆவணங்கள், EPF கணக்கின் KYC நிலை, வங்கிக் கணக்கு போன்ற விவரங்கள் சரிபார்க்கப்பட்டதால் க்ளெய்ம் செட்டில் செய்ய அதிக நேரம் ஆனது. ஆனால், இப்போது தானியங்கி முறையில், க்ளெய்ம் எளிதாக நடக்கும் வகையில், ஆய்வு மற்றும் ஒப்புதல் அனுப்பப்படுகிறது.


யாரெல்லாம் இதை க்ளெய்ம் செய்ய முடியும்?


அவசரகாலங்களில் கோரப்படும் பணத்தை செட்டில் செய்வதற்கான ஆட்டோ மோட் ஏப்ரல் 2020 இல் தொடங்கப்பட்டது, ஆனால், அப்போது நோய் சிகிச்சைக்காக மட்டுமே பணத்தை எடுக்க முடியும். இப்போது அதன் நோக்கம் விரிவடைந்துள்ளது. நோய்களுக்கான சிகிச்சை, கல்வி, திருமணம் மற்றும் வீடு வாங்குதல் என இந்த காரணங்களுக்காகவும் இப்போது EPF -இல் இருந்து பணத்தை எடுக்கலாம். 


மேலும் படிக்க | மாதா மாதம் ரூ.1 லட்சம் ஓய்வூதியம் வேண்டுமா? NPS-இல் இப்படி முதலீடு செய்தால் போதும்


EPF Withdrawal: இதன் மூலம் எவ்வளவு பணம் எடுக்க முடியும்?


- இபிஎஃப் கணக்கிலிருந்து (EPF Account), இப்போது ரூ. 1 லட்சம் வரை அட்வான்ஸ் தொகையை எடுக்க முடியும். 


- முன்பு இந்த வரம்பு ரூ.50 ஆயிரமாக இருந்தது. 


- ஆட்டோ மோட் செடில்மெண்ட் (Auto Mode Settlement) முறையில், கணினி மூலம் அட்வான்ஸ் தொகையை பெற முடியும். 


- இதற்கு எந்த வித ஒப்புதலும் தேவையில்லை.


- மூன்று நாட்களுக்குள் இந்த தொகை பிஎஃப் உறுப்பினரின் கணக்கிற்கு அனுப்பப்படும். 


- இதற்கு, KYC, க்ளைம் கோரிக்கைக்கான தகுதி, வங்கி கணக்கு ஆகிய விவரங்கள் தேவைப்படும்.


பணத்தை எடுப்பதற்கான முழுமையான செயல்முறை


- இபிஎஃப்ஓ வலைத்தளத்தில், UAN மற்றும் கடவுச்சொல்லைப் பயன்படுத்தி லாக் இன் செய்யவும்.
- இதன் பின்னர், online services -க்கு சென்று ‘Claim’ பகுதியைத் தேர்ந்தெடுக்கவும். 
- வங்கிக் கணக்கைச் சரிபார்த்து, Proceed for Online Claim என்பதை க்ளிக் செய்யவும்.
- புதிய பக்கம் திறந்தவுடன், ​​PF அட்வான்ஸ் படிவம் 31ஐத் தேர்ந்தெடுக்கவும். 
- இதன் பின்னர் பிஎஃப் கணக்கைத் தேர்ந்தெடுக்கவும்.
- இங்கே பணம் எடுப்பதற்கான காரணம், எவ்வளவு பணம் எடுக்க வேண்டும் மற்றும் முகவரி ஆகிய விவரங்களை நிரப்ப வேண்டும். 
- இதற்குப் பிறகு, காசோலை அல்லது பாஸ்புக்கின் ஸ்கேன் செய்யப்பட்ட நகலை பதிவேற்ற வேண்டும்.
- இதற்குப் பிறகு, நீங்கள் ஒப்புதல் அளித்து ஆதாருடன் வெரிஃபை செய்ய வேண்டும். 
- க்ளெய்ம் ப்ராசஸ் செய்யய்யப்பட்ட பிறகு, அது ஒப்புதலுக்காக முதலாளி / நிறுவனத்திடம் செல்லும்.
- ஆன்லைன் சேவையின் கீழ், க்ளெய்ம் ஸ்டேடசை செக் செய்யலாம். 


மேலும் படிக்க | ஹிண்டன்பர்க் விவகாரம்: Conflict Of Interest என்றால் என்ன? இதற்கான செபியின் நெறிமுறைகள் என்ன?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ