EPFO Update: அலுவலக பணிகளில் பணிபுரியும் பணியாளர்கள் மாதா மாதம் தங்கள் ஊதியத்தில் ஒரு பங்கினை இபிஎஃப் கணக்கில் டெபாசிட் செய்கிறார்கள். நிறுவனங்களும் அதே அளவு தொகையை ஊழியர்களின் பிஎஃப் கணக்குகளில் டெபாசிட் செய்கின்றன. பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பான EPFO, ஊழியர்களின் கணக்குகளை நிர்வகிக்கின்றது. எனினும், இதில் அவ்வப்போது சில குளறுபடிகளும் நடக்கின்றன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தங்களது இபிஎஃப் பங்களிப்பை (EPF Contribution) ஊழியர்களின் கணக்கில் தவறாமல் டெபாசிட் செய்ய வேண்டியது ஒரு நிறுவனம் / முதலாளியின் கடமையாகும். எனினும், பல முறை பல நிறுவனங்கள் இதை சரியாக செய்வதில்லை. அப்படி தங்கள் பங்களிப்பை ஒழுங்காக அளிக்காத நிறுவனங்களுக்கு EPFO கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளது.


இது தொடர்பாக  பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பான இபிஎஃப்ஓ, ஒரு ட்வீடை பதிவிட்டது. நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களின் இபிஎஃப் கணக்கில் (PF Account) பிஎஃப் பங்களிப்புகளை அளிப்பது குறித்து இதில் EPFO எச்சரிக்கை விடுத்துள்ளது. “பங்களிப்பை அளிக்காமல் தவறு செய்யும் நிறுவனங்கள் பிரிவு 14B -இன் கீழ் அபராதங்களையும் 7Q -இன் கீழ் கட்டப்பட வேண்டிய தொகையின் வட்டியையும் செலுத்த வேண்டும்" என்று EPFO தெரிவித்துள்ளது.


இபிஎஃப் கணக்கில் பங்களிக்கத் தவறிய நிறுவனங்களுக்கு விதிக்கப்படும் அபராதம் வெவ்வேறு கால அளவுகளுக்கு வெவ்வேறாக இருக்கும் என EPFO கூறியுள்ளது. தங்கள் பங்களிப்பை சரியாக செலுத்தாத முதலாளிகளுக்கான விதிகள் என்ன? இவர்கள் மீது எப்படிப்பட்ட நடவடிக்கை எடுக்கப்படும்? இந்த விவரங்களை பற்றி இந்த பதிவில் காணலாம். 


- இரண்டு மாதங்களுக்கு குறைவான காலத்துக்கு நிறுவனம் ஊழியர்களின் கணகில் தனது பிஎஃப் பங்களிப்பை அளிக்கவில்லை என்றால், மொத்த பங்களிப்பில் ஆண்டுக்கு 5 சதவீதத்தை ஊழியர்களின் நிதிக்கு நிறுவனம் செலுத்த வேண்டும் என்று EPFO கூறுகிறது.


மேலும் படிக்க | தங்க நகைகளை வங்கி லாக்கரில் வைக்கலாமா? புதிய விதிகள் கூறுவது என்ன?


- இரண்டு முதல் நான்கு மாதங்களுக்கு மேல் பங்களிப்பை அளிக்காத நிறுவனங்கள், ஆண்டுக்கு 10 சதவீதம் இழப்பீடு செலுத்த வேண்டும்.


- பணியாளர்களின் PF கணக்கில் விடுபட்ட பங்களிப்புகளுக்கு, நிறுவனம் மொத்த பங்களிப்பில் ஆண்டுக்கு 15 சதவிகிதம் அபராதமாக செலுத்த வேண்டும்.


- நிறுவனம் ஆறு மாதங்களுக்கு மேல் பங்களிக்காமல் இருந்தால், மொத்த பங்களிப்பில் ஆண்டுக்கு 25 சதவீதம் அபராதமாக செலுத்தப்பட வேண்டும்.


 அபராதங்கள் நிலுவையில் உள்ள தொகையில் 100 சதவீதம் வரை கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. செலுத்த வேண்டிய தொகைக்கு 12 சதவீதம் சிம்பிள் இண்டெரெஸ்டும் (வட்டி) செலுத்தப்படும்.


அபராதம் செலுத்துவதையும், தேவையற்ற வட்டியையும் தவிர்க்க, பணியாளர்களின் கணக்கில் மாதா மாதம் இபிஎஃப் தொகையை (EPF Amount) சரியான நேரத்தில் செலுத்துவதை முதலாளிகள் உறுதி செய்ய வேண்டும் என்று EPFO வெளியிட்டுள்ள ட்வீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இபிஎஃப் கணக்கு


அலுவலக பணிகளில் உள்ளவர்கள் மாதா மாதம் தங்கள் இபிஎஃப் கணக்கில் ஒரு குறிப்பிட்ட தொகையை டெபாசிட் செய்கிறார்கள். அதே அளவு தொகையை அவர்களது நிறுவனமும் டெபாசிட் செய்கிறது. இபிஎஃப் கணக்கில் டெபாசிட் செய்யப்படும் தொகைக்கு அரசு நல்ல வட்டியையும் அளிக்கின்றது. தற்போது இபிஎஃப் இருப்புக்கு 8.25 சதவிகித வட்டி வழங்கப்படுகின்றது. சமீபத்தில்தான் அரசாங்கம் பிஎஃப் கணக்குகளுக்கான வட்டியை உயர்த்தியது என்பது குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க | மகிழ்ச்சியில் ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள்: வந்தது டிஏ ஹைக், அதிரடி ஊதிய உயர்வு.. கணக்கீடு இதோ


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ