Voluntary Provident Fund: தன்னார்வ வருங்கால வைப்பு நிதியில் முதலீடு செய்துள்ளீர்களா? அப்படியென்றால் உங்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி. தன்னார்வ வருங்கால வைப்பு நிதி தொடர்பாக அரசாங்கம் பெரிய திட்டங்களை வகுத்து வருகிறது. ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் (EPFO) கீழ் தன்னார்வ வருங்கால வைப்பு நிதியில் (விபிஎஃப்) வரி இல்லாத வட்டி வரம்பு ரூ. 2.5 லட்சத்தில் இருந்து அதிகரிக்கப்படலாம் என எகனாமிக் டைம்ஸில் வெளியிடப்பட்ட செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தற்போது, ​​இதை விட அதிக முதலீட்டில் பெறப்படும் வட்டிக்கு வரி விதிக்கப்படுகிறது. இதுகுறித்து தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் ஆலோசித்து வருவதாக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 


VPF: நிதி அமைச்சகத்துடன் விவாதம்


இந்த விவகாரம் அடுத்த ஆண்டு நிதி அமைச்சகத்திடம் விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2026-ம் நிதியாண்டிற்கான பட்ஜெட் விவாதத்தின் போது இந்த விவகாரம் நிதி அமைச்சகத்திடம் விவாதிக்கப்படும் என்று கூறப்படுகின்றது. நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் குறைந்த சம்பளம் வாங்கு நபர்கள் ஆகியோரை, பணத்தை முதலீடு செய்ய ஊக்குவிக்கும் நோக்கத்தில் இந்த முடிவை அரசாங்கம் எடுக்கலாம். 


இபிஎஃப் சந்தாதாரர்கள் (EPF Subscribers) எதிர்காலத்தில் ஓய்வுபெறும் போது, ​​போதுமான பணம் இருக்கும் வகையில், இபிஎப் கணக்கில் (EPF Account) முடிந்தவரை பணத்தை டெபாசிட் செய்ய வேண்டும் என்பதே அரசின் நோக்கமாக உள்ளது. முன்னதாக, ஈபிஎஃப்-ல் டெபாசிட் செய்யப்பட்ட தொகைக்கு ரூ.2.5 லட்சம் வரையிலான முதலீட்டுக்கு அரசு வரி விலக்கு (Tax Free) அளித்தது. இந்தத் தொகைக்கு மேல் பெற்ற வட்டிக்கு வரி செலுத்த வேண்டும்.


VPF இல் செய்யப்படும் முதலீடுக்கு கிடைக்கும் வரிச் சலுகைகள்


அதிக வட்டி பெறும் நபர்களிடம் வரி வசூல் செய்ய அரசாங்கம் அதற்கான வரம்பை விதித்து 2022 நிதியாண்டில் இந்த முடிவை எடுத்தது. அதிக சம்பளம் வாங்கிய நபர்கள், வரியை தவிர்க்க, விபிஎஃப் கணக்கில் (VPF Account) அதிக தொகையை டெபாசிட் செய்து வந்தார்கள். அவர்களுக்காகவே இந்த வரம்பு கொண்டுவரப்பட்டது. அதேபோல, VPF-ல் டெபாசிட் செய்யப்பட்ட தொகை, அதற்குக் கிடைக்கும் வட்டி மற்றும் அதை எடுக்கும்போது கிடைக்கும் பணம், இவை அனைத்திற்கும் நீங்கள் எந்தவிதமான வரியும் செலுத்த வேண்டியதில்லை. அதாவது, VPF இல் முதலீடு செய்வதன் மூலம், நீங்கள் வரி அடிப்படையில் அதிக நன்மைகளைப் பெறுவீர்கள்.


மேலும் படிக்க | POMIS: தபால் அலுவலக அசத்தல் திட்டம்... உறுதியான மாத வருமானம், பம்பர் லாபம்


EPF Interest Rate: இபிஎஃப் வட்டி விகிதம்


- EPFO கடந்த பல நிதியாண்டுகளாக 8% -க்கும் அதிகமான வட்டியை அளித்து வருகிறது. 
- 1990 நிதியாண்டில், இது 12% ஆக அதிகரித்தது. 
- 2000 நிதியாண்டு வரை தொடர்ந்து 11 ஆண்டுகள் இதே நிலையில் இருந்தது.
- 2022 நிதியாண்டிற்கான EPFO ​​இன் வட்டி விகிதம் 8.10% ஆக இருந்தது. 
- இதற்குப் பிறகு, இது 2023 இல் 8.15% ஆகவும், 2024 நிதியாண்டில் 8.25% ஆகவும் உயர்ந்தது.


EPF -இல் 20 லட்சம் கோடிக்கு மேல் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது


EPF இன் தற்போதைய விதிகளின்படி, இபிஎஃப் உறுப்பினர்கள் (EPF Members) தங்கள் விருப்பப்படி EPF இல் பணத்தை டெபாசிட் செய்யலாம். இதில் வரம்பு எதுவும் இல்லை. ஆனால், இந்த விதியை தவறாக பயன்படுத்த அரசு தடை விதித்துள்ளது. இப்போது ஒரு வருடத்தில் ரூ.2.5 லட்சத்துக்கு மேல் டெபாசிட் செய்தால் வட்டிக்கு வரி செலுத்த வேண்டும்.  இபிஎஃப் -இல் கோடிக்கணக்கான மக்கள் பணத்தை டெபாசிட் செய்கிறார்கள், கோடிக்கணக்கானோர் ஓய்வூதியம் பெறுகின்றனர். மொத்தமாக இதில் 20 லட்சம் கோடிக்கு மேல் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க | EPFO Higher Pension முக்கிய அப்டேட்: 97,000 பிஎஃப் உறுப்பினர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ