மத்திய அரசின் சோலார் மின் திட்டம் (Rooftop Solar Scheme): மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், பிப்ரவரி மாதம் 1ம் தேதி தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட்டில், மத்திய அரசின் சோலார் மின்சார திட்டம் குறித்த முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். பிரதம மந்திரி சூர்யா கர் முஃப்ட் பிஜ்லி யோஜனா (PM Surya Ghar Muft Bijli Yojana) என்றழைக்கப்படும் சூரிய மின் திட்டத்தின் கீழ் இதன் கீழ் நாட்டில் உள்ள ஒரு கோடி குடும்பங்களுக்கு மாதம் 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. வீடுகளின் கூரையில் சோலார் தகடுகளை அமைக்க ஒரு கோடி குடும்பங்களுக்கு தலா ரூ78,000 வரை மானிய உதவியும் கிடைக்கும். இத்திட்டத்தின் பலனை பெற எவ்வாறு விண்ணப்பிக்கலாம், 300 யூனிட் இலவச மின்சாரத்தை எவ்வாறு பெறுவது என்பது குறித்து அறிந்து கொள்ளலாம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பிரஸ் இன்பர்மேஷன் பீரோ (PIB) இது குறித்து பிப்ரவரி 29, 2024 வெளியிட்ட அறிக்கையில், தபால் நிலையங்கள் மூலம் பதிவு செய்து கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது. தபால்காரர்கள் பதிவு செய்வதற்கு குடும்பங்களுக்கு உதவுவார்கள். சூரிய எரிசக்திகான சோலார் பேனல்களை வீடுகளில் மேல் கூரைகளில் நிறுவ, திட்டப்பணியை பொறுத்து மத்திய அரசு நிதி உதவி வழங்கும். 2 கிலோவாட் திறன் கொண்டஅமைப்புக்கு 60% மானியமும், 2 முதல் 3 கிலோவாட் திறன் கொண்ட சோலார் பேனல் அமைப்புகளுக்கு 40% நிதியுதவி கிடைக்கும் எனவும் கூறப்படுகிறது. அதாவது, 3 கிலோவாட்டுக்கு ரூ.78,000 மானிய உதவியும், 2 கிலோவாட் திறன் கொண்ட சோலார் அமைப்புக்கு ரூ.60,000 மானியமும், 1 கிலோவாட் திறன் கொண்ட அமைப்புக்கு ரூ.30,000 மானியமும் கிடைக்கும் என கூறப்படுகிறது. எனினும், ஏற்கனவே தங்கள் வீடுகளில் சோலார் சிஸ்டம் வைத்திருக்கும் நுகர்வோருக்கு இந்த மானியம் பொருந்தாது.


சூரிய மின் திட்டத்தில் பயன்பெற விரும்பினால், முதலில் www.pmsuryaghar.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். அதற்கு நீங்கள் வசிக்கும் மாநிலம் மற்றும் மின் விநியோக நிறுவனத்தைத் தேர்வு செய்து, உங்கள் மின் நுகர்வோர் எண், மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் ஐடி ஆகிய தகவல்களை உள்ளிட வேண்டும். இதற்குப் பிறகு, உள்ளூர் விநியோக நிறுவனத்திடமிருந்து உங்கள் கோரிக்கைக்கான ஒப்புதல் கிடைக்கும். ஒப்புதல் பெற்ற பிறகு, விநியோக நிறுவனத்தில் பதிவுசெய்யப்பட்ட சோலான் பேனல்களை நிறூவம் நிறூவனத்தின் உதவியுடன் சோலார் பேனலை நிறுவலாம். அங்கீகரிப்பட்ட சோலார் பேனல் நிறுவனங்களின் பட்டியல் இணையதளத்தில் உள்ளது. மேலும் விவரங்களுக்கு, https://pmsuryagarh.gov.in/ என்ற இணையதளத்தை சென்று பார்க்கலாம் அல்லது உங்கள் பகுதியில் உள்ள தபால் நிலையத்தை தொடர்பு கொள்ளவும். 


மேலும் படிக்க | இந்தியாவின் முதல் நீருக்கடியிலான மெட்ரோ ரெயில் சேவை.. தொடக்கி வைத்தார் பிரதமர் மோடி


வீட்டின் கூரைகளில் சூரிய மின்சக்தி தகடு பொருத்துபவர்களுக்கு, மத்திய அரசு மானியம் வழங்குவதோடு, இதற்கான வங்கி கடன் உதவியும் கிடைக்கும். வீட்டின் மேல் கூரைகளில், சோலார் யூனிட்டுகளை நிறுவுவதன் மூலம், நாட்டில் உள்ள சுமார் ஒரு கோடி குடும்பங்கள், மாதம் தோறும் 300 யூனிட் என்று அளவிற்கு இலவசம் மின்சாரத்தையும் பெறலாம். ரூ75,021 கோடி மதிப்பிலான இந்தத் திட்டம் பிப்ரவரி 13ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடியால் (PM Narendra Modi) தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் குடும்பங்கள் பயன்பெறுவதோடு, சூரிய சக்தி உதிரிபாகங்களை உள்நாட்டில் உற்பத்தி செய்வதற்கு ஊக்கம் கிடைக்கும் என்பதோடு, 17 லட்சம் பேருக்கு நேரடி வேலை வாய்ப்பும் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க | 370 நீக்கப்பட்ட பிறகு காஷ்மீரில் பிரதமர் நரேந்திர மோடி! வேளாண் பொருளாதார மேம்பாட்டு திட்டங்கள்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ