இந்த திட்டத்தின் கீழ் நீங்கள் 72000 ரூபாய் ஓய்வூதியத்தையும் பெறலாம். எப்படி விண்ணப்பிப்பது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்..!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்திய அரசாங்கத்தின் நூற்றுக்கணக்கான திட்டங்களை நீங்கள் எளிதாகப் பயன்படுத்திக் கொள்ளலாம், ஆனால் இன்று ஒரு குறிப்பிட்ட திட்டத்தைப் பற்றி நாங்கள் உங்களுக்கு சொல்லப்போகிறோம். நாட்டின் தொழிலதிபர்களுக்காக அரசாங்கம் தொடங்கிய ஓய்வூதிய திட்டம் (Pension Scheme) குறித்து நாங்கள் பேசுகிறோம்.


உண்மையில், மோடி அரசு சில மாதங்களுக்கு முன்பு பிரதமர் சிறு வணிக நாயகன் (PM Laghu Vyapari Maan-Dhan Yojana) திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதன் கீழ் 60 வயதிற்குப் பிறகு ரூ.15,000-க்கும் குறைவான வருமானம் உள்ள தொழிலாளர்களுக்கு அரசாங்கம் மாதம் ரூ.3000 ஓய்வூதியம் வழங்கும். சிறப்பு என்னவென்றால், கணவன்-மனைவி இருவரும் இந்தத் திட்டத்தில் பங்காளிகளாக இருக்க முடியும், அவ்வாறான நிலையில் நீங்கள் ஆண்டுதோறும் ரூ.72 ஆயிரம் ஓய்வூதியத்தின் பயனைப் பெறலாம்.


இந்த திட்டத்திற்கு முன்னர் பிரதான் மந்திரி லாகு வர்த்தகர் மந்தன் யோஜனா (PM Laghu Vyapari Maan-Dhan Yojana) என்று பெயரிடப்பட்டது. ஆனால், பின்னர் இது வர்த்தகர்கள் மற்றும் சுயதொழில் செய்பவர்களுக்கான என்.பி.எஸ் (NPS) என மாற்றப்பட்டது. கணவன்-மனைவி இருவரும் இந்தத் திட்டத்திற்குத் தகுதியானவர்கள் என்றால், 60 ஆண்டுகளுக்குப் பிறகு அவர்களுக்கு ஒவ்வொரு மாதமும் கூட்டாக 6 ஆயிரம் ரூபாய் கிடைக்கும்.


ALSO READ | மூத்த குடிமக்களுக்கான SBI-யின் சிறப்பு FD திட்டம் மீண்டும் நீட்டிப்பு!


திட்டம் எவ்வாறு பயனளிக்கும்


இந்த திட்டத்தை பயன்படுத்தி ஒரு நபர் 30 வயதில் மாதத்திற்கு ரூ.100 முதலீடு செய்கிறார். அதாவது, அவர் 30 ஆண்டுகளில் மொத்தம் ரூ.1,200 மற்றும் ரூ .36 ஆயிரம் பங்களிப்பு செய்தால், 30 ஆண்டுகளுக்குப் பிறகு, 60 வயதிற்குப் பிறகு, அவருக்கு ஆண்டுக்கு ரூ.36 ஆயிரம் ஓய்வூதியம் கிடைக்கும். இந்தத் திட்டத்தின் படி, கணக்கு வைத்திருப்பவரிடம் ஏதேனும் அசம்பாவிதங்கள் நடந்தால், அவரது மனைவிக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.1,500 கிடைக்கும்.


இதற்கு எந்தவிதமான சறுக்கலும் இல்லை


வர்த்தகர்கள் மற்றும் சுயதொழில் செய்பவர்களுக்கான என்.பி.எஸ் திட்டத்தில் மாதாந்திர தவணை வயதுக்கு ஏற்ப ரூ.55 முதல் 200 வரை ஆகும். இருப்பினும், இந்த திட்டம் EPF / NPS / ESIC வாடிக்கையாளர்களுக்கு பயனளிக்காது. இதன் மூலம், நீங்கள் வருமான வரியை டெபாசிட் செய்தாலும், இந்த திட்டம் உங்களுக்காக அல்ல.


ALSO READ | SBI-யில் சேமிப்பு கணக்கு இருக்கா? - அதிக வட்டி கிடைக்க இதை செய்யுங்கள்!


எப்படி விண்ணப்பிப்பது


> NPS திட்டத்திற்கு விண்ணப்பிக்க மிக முக்கியமானது ஆதார் அட்டை மற்றும் சேமிப்பு கணக்கு.


> இந்த திட்டத்தை 18 வயது முதல் 40 வயது வரை உள்ளவர்கள் மட்டுமே பெற முடியும்.


> விண்ணப்பதாரரின் வருவாய் ரூ.15,000-க்கும் குறைவாக இருந்தால், நீங்கள் அதை மிக எளிதாகப் பயன்படுத்திக் கொள்ளலாம்.


> இந்த திட்டங்களில் விண்ணப்பிக்க, நீங்கள் CSC-யில் ஒரு ஆவணத்தை எடுக்க வேண்டும்.


உலக நிகழ்வுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள ZEE இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்... 


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR