வங்கிகள் மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்கள் (NBFCs) கடன் கணக்குகள் மீது விதிக்கப்படும் அதிக அளவிலான அபராத தொகைகளை கட்டுப்படுத்தும் வகையில், இந்திய ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுத்துள்ளது.  திருத்தப்பட்ட விதிகள் மற்றும் அறிவுறுத்தல்களை அமல்படுத்துவதற்கான காலக்கெடு முன்னதாக, 2024 ஜனவரி1ம் தேதி என்று இருந்த நிலையில், தற்போது வங்கிகள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க, அமல்படுத்துவதற்கான காலக்கெடுவை  மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டித்துள்ளது RBI. ஏப்ரல் 1, 2024 முதல் புதிய அறிவுறுத்தல்களை செயல்படுத்த வங்கிகள் மற்றும் NBFC நிறுவனங்களை இந்திய ரிசர்வ் வங்கி கேட்டுக் கொண்டுள்ளது. 'நியாயமான கடன் வழங்கும் செயல்முறை - கடன் கணக்குகளில் அபராதக் கட்டணங்கள்' என்ற சுற்றறிக்கையை ஆகஸ்ட் மாதம் வெளியிடும் போது, ​​ஜனவரி 1, 2024 முதல் இது பொருந்தும் என்று ரிசர்வ் வங்கி கூறியது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

புதிய விதிமுறைகள் அனைத்து புதிய கடன்களுக்கும் பொருந்தும்


இருப்பினும், புதிய விதிமுறைகளை அமல்படுத்தும் வகையில், நிறுவனத்தின் உள் அமைப்புகளை மறுவடிவமைத்து சுற்றறிக்கையை செயல்படுத்த கூடுதல் அவகாசம் கோரிய பிறகு, இந்த வழிமுறைகளை அமல்படுத்துவதற்கான காலக்கெடு மூன்று மாதங்களுக்கு நீட்டிக்கப்படும் என்று ரிசர்வ் வங்கி (Reserve Bank of India) கூறியது. அதன்படி, ஏப்ரல் 1, 2024 முதல் எடுக்கப்படும் அனைத்து புதிய கடன்களுக்கும் இந்த அறிவுறுத்தல்கள் செயல்படுத்தப்படுவதை உறுதி செய்ய வங்கிகள் மற்றும் NBFC கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன.


ரிசர்வ் வங்கி ஆகஸ்ட் 18 அன்று மேற்கொண்ட திருத்தம் 


புதிய கடன்கள் மட்டுமல்லாது தற்போதுள்ள கடன்களில், புதிய அபராதக் கட்டண முறை ஏப்ரல் 1, 2024 அன்று அல்லது அதற்குப் பிறகு செயல்படுத்தப்பட வேண்டும் என்றும் அடுத்த மறுஆய்வு/புதுப்பித்தல் தேதி ஜூன் 30 அல்லது அதற்குப் பிறகு வரும் தேதிகளில் இருக்கும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. வருவாயை அதிகரிக்கும் நடவடிக்கையாக, தாமதமாகும் கடன்கள் மீதான அபராத வட்டியைப் பயன்படுத்தி கொள்ளும் வகையிலான வங்கிகள் மற்றும் NBFC களின் செயல்பாடுகள் குறித்து கவலை கொண்ட ரிசர்வ் வங்கி ஆகஸ்ட் 18 அன்று விதிமுறைகளை திருத்தியது.


மேலும் படிக்க | புத்தாண்டுக்கு முன் மிகப்பெரிய பரிசு.. இனி வெறும் ரூ.450க்கு கேஸ் சிலிண்டர் கிடைக்கும் 


இவற்றின் கீழ், கடன் வழங்கும் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் கடனைத் திருப்பிச் செலுத்துவதில் தவறினால் 'நியாயமான' அபராதக் கட்டணங்களை மட்டுமே விதிக்க முடியும். வங்கிகள் மற்றும் பிற கடன் வழங்கும் நிறுவனங்கள் ஜனவரி 1, 2024 முதல் அபராத வட்டி வசூலிக்க அனுமதிக்கப்படாது என்று கூறப்பட்டது. புதிய விதிகளின்படி, கடன் வாங்குபவர் கடன் ஒப்பந்தத்தின் முக்கியமான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு இணங்காததற்காக அபராதம் விதிக்கப்பட்டால், அதை 'அபராத கட்டணம்' என்று கருத வேண்டும்.


கிரெடிட் கார்டுகள், வணிகக் கடன்கள், வர்த்தகக் கடன்கள் ஆகியவற்றுக்கு இந்த அறிவுறுத்தல்கள் பொருந்தாது என்பதும் குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க | மிஸ் பண்ணிடாதீங்க! FDல் அதிக வட்டியை அள்ளித்தரும் SBI.. இனி ட்ரிபிள் வருமானம் பெறலாம்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ