10 லட்சம் கோடி ரூபாய் சந்தை மூலதனத்தை (m-cap) தொட்ட முதல் இந்திய நிறுவனமாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் புதிய சாதனை படைத்துள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் (RIL) வியாழக்கிழமை 10 லட்சம் கோடி ரூபாய் சந்தை மூலதனத்தை (m-cap) தொட்ட முதல் இந்திய நிறுவனமாக வரலாற்றை உருவாக்கியது. RIL அதன் பங்குகளை ஒரு துண்டுக்கு 1,581 ரூபாயாக உயர்ந்ததைத் தொடர்ந்து இந்த மைல்கல்லை எட்டியுள்ளது.


பல நாட்களாக ரிலையன்ஸ் நிறுவனம் 10 லட்சம் கோடி ரூபாய் சந்தை மூலதனத்தை (m-cap) சுற்றி வந்த நிலையில், வியாழக்கிழமை ஆரம்ப வர்த்தகத்தில் அதன் பங்குகள் 0.70 சதவீதம் உயர்ந்ததால் 10 லட்சம் கோடி ரூபாய் சந்தை மூலதனத்தை (m-cap) இலக்கை எட்டியுள்ளது. 2019-ஆம் ஆண்டில் நிறுவனத்தின் பங்குகள் கிட்டத்தட்ட 40 சதவீதத்தை எட்டியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. 


இந்தியாவின் செல்வந்தர்கள் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் முகேஷ் அம்பானி, அடுத்த 18 மாதங்களில் நிறுவனத்தின் நிகர கடனை பூஜ்ஜியமாகக் குறைக்கும் திட்டத்தை அறிவித்ததைத் தொடர்ந்து நிறுவனம் பங்குச் சந்தையில் லாபம் ஈட்டத் தொடங்கியுள்ளது. 


Reliance Industries தனது எண்ணெய் மற்றும் ரசாயன வியாபாரத்தில் தனது பங்குகளை சவுதி அரம்கோ மற்றும் வேறு சில முக்கிய நடவடிக்கைகளுக்கு விற்பதன் மூலம் அதன் பூஜ்ஜிய நிகர கடன் இலக்கை எட்டும் என்று நம்பப்படுகிறது.


ஆகஸ்ட் மாதம் Reliance Industries-ன் 42-வது ஆண்டு பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய அம்பானி, “இது ரிலையன்ஸ் நிறுவனத்திற்கான மிகப்பெரிய வெளிநாட்டு முதலீடு மற்றும் இந்தியாவுக்கு மிகப்பெரிய ஒன்றாகும். சவுதி அரம்கோவுடனான கூட்டு, RelianceIndustries-ன் சுத்திகரிப்பு மற்றும் பெட்ரோ கெமிக்கல்ஸ் சொத்துக்களை உள்ளடக்கும், இதில் பெட்ரோலிய சில்லறை விற்பனை JV-யின் 51 சதவீதம் அடங்கும் ” என குறிப்பிட்டிருந்தார்.


முன்னதாக கடந்த அக்டோபரில், Reliance Industries ரூபாய் 9 லட்சம் கோடி சந்தை மூலதனத்தை தாண்டிய முதல் நிறுவனமாக அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.