தினசரி உபயோகப் பொருட்கள் மீதான ஜிஎஸ்டி புதுப்பிப்பு: பணவீக்கம் அதிகரித்து வரும் நிலையில், பொது மக்களுக்கு மீண்டும் ஒரு அதிர்ச்சி காத்துக்கொண்டிருக்கின்றது. வரும் ஜூலை 18 முதல், மக்களுக்கு அத்தியாவசியமான பல அன்றாடப் பொருட்களுக்கு அதிக கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். ஜிஎஸ்டியின் 47வது கூட்டத்திற்கு பிறகு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த தகவலை தெரிவித்தார். சில புதிய தயாரிப்புகள் மற்றும் சில பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான ஜிஎஸ்டி வரி ஜூலை 18 முதல் அதிகரிக்கப்படும் என்று நிதியமைச்சர் தெரிவித்தார். இந்த பொருட்களின் புதிய விலைகள் வரும் 18ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. எந்தெந்த பொருட்களின் விலை அதிகரிக்கும்? எவற்றின் விலை குறையும்? இந்த பதிவில் முழுமையாக தெரிந்துகொள்ளலாம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அரசாங்கம் வழங்கிய தகவல்


ஜூலை 18 முதல், பன்னீர், லஸ்ஸி, மோர், பேக்கேஜ் செய்யப்பட்ட தயிர், கோதுமை மாவு, பிற தானியங்கள், தேன், பப்பாளி, உணவு தானியங்கள், இறைச்சி மற்றும் மீன் (உறைந்தவை தவிர), பஃப்ட் அரிசி மற்றும் வெல்லம் போன்ற முன் பேக்கேஜ் செய்யப்பட்ட லேபிள்களுடன் கூடிய விவசாயப் பொருட்களின் விலை உயரும். அதாவது, அவற்றின் மீதான வரி அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்போது, ​​பிராண்டட் மற்றும் பேக் செய்யப்பட்ட உணவுப் பொருட்களுக்கு 5 சதவீதம் ஜிஎஸ்டி விதிக்கப்படுகிறது. அதே சமயம் பேக் செய்யப்படாத மற்றும் லேபிள் இல்லாத பொருட்களுக்கு வரி இல்லை. ஜூலை 18 முதல் எந்த பொருட்களின் விலை உயரும், எவற்றின் விலை அதிகரிக்கும் என காணலாம். 


மேலும் படிக்க | மத்திய அரசு ஊழியர்களுக்கு இரட்டை மகிழ்ச்சி..ஒரே நேரத்தில் டிஏ, பதவி உயர்வு! 


இந்த பொருட்கள் விலை உயரும்: 


- டெட்ரா பேக் தயிர், லஸ்ஸி மற்றும் மோர் ஆகியவற்றின் விலை அதிகரிக்கும். ஏனெனில் இவற்றுக்கு ஜூலை 18 முதல் 5% ஜிஎஸ்டி விதிக்கப்படும். முன்பு இது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. 


- காசோலை புத்தகம் வழங்குவதற்கு வங்கிகள் வசூலிக்கும் கட்டணத்திற்கு இனி 18% ஜிஎஸ்டி வரி விதிக்கப்படும்.


- 5,000 ரூபாய்க்கு மேல் (ஐசியு அல்லாத) மருத்துவமனையில் வாடகைக்கு எடுக்கப்படும் அறைகளுக்கு 5 சதவீதம் ஜிஎஸ்டி விதிக்கப்படும்.


- இது தவிர, அட்லஸ் உட்பட வரைபடங்கள் மற்றும் சார்டுகளில் இப்போது 12 சதவீத விகிதத்தில் ஜிஎஸ்டி விதிக்கப்படும். 


- நாள் ஒன்றுக்கு ரூ.1,000க்கு குறைவாக வாடகைக்கு உள்ள ஹோட்டல் அறைகளுக்கு 12 சதவீதம் ஜிஎஸ்டி விதிக்கப்படும். இது முன்பு நடைமுறையில் இல்லை.


- எல்இடி லைட்டுகள், எல்இடி லேம்புகள் அகியவற்றுக்கு 18 சதவீத ஜிஎஸ்டி வசூலிக்கப்படும். இது முன்பு இல்லை. 


- பிளேடுகள், காகித கத்தரிக்கோல், பென்சில் ஷார்ப்பனர்கள், கரண்டிகள், ஃபோர்க் ஸ்பூன்கள், ஸ்கிம்மர்கள் மற்றும் கேக்-சர்வர்கள் போன்றறுக்கு முன்பு 12 சதவீத ஜிஎஸ்டி வசூலிக்கப்பட்ட நிலையில், இனி 18 சதவீத ஜிஎஸ்டி வரி விதிக்கப்படும்.


இந்த பொருட்களின் விலை மலிவாகும்


- ஜூலை 18 முதல், ரோப்வே மூலம் பயணிகள் மற்றும் சரக்கு போக்குவரத்து மலிவானதாக மாறும், ஏனெனில் அதன் மீதான ஜிஎஸ்டி விகிதம் 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.


- பிளவுகள் மற்றும் பிற எலும்பு முறிவு சாதனங்கள், உடலில் பொருத்தப்படும் செயற்கை உறுப்புகள், உடல் உள்வைப்புகள், உள் கண் லென்ஸ்கள் மீதான ஜிஎஸ்டி 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.


- எரிபொருள் விலை சார்ந்து சரக்குகளை எடுத்துச் செல்லும் ஆபரேட்டர்களின் கட்டணத்தில் ஜிஎஸ்டி 18 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக குறைக்கப்படும்.


- பாதுகாப்புப் படைகளுக்காக இறக்குமதி செய்யப்படும் சில பொருட்களுக்கு IGST பொருந்தாது.


மேலும் படிக்க | ITR 2022 Filing Last Date: காலக்கெடு நீட்டிக்கப்படுமா? நிபுணர்கள் கூறுவது என்ன? 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ