புதுடெல்லி: இந்த பண்டிகை விற்பனையின் முதல் நான்கு நாட்களில் மட்டும், சுமார் 7 மில்லியன் ஸ்மார்ட்போன்கள் விற்பனையாகியுள்ளன. Redseer இன் அறிக்கையின்படி, இந்த தள்ளுபடி விற்பனையில் சுமார் 10 மில்லியன் மொபைல் போன்கள் விற்கப்படலாம் என்ற தரவுகள், திருவிழா விற்பனை 2022 சிறப்பாக நடந்து வருகிறது என்பதைக் காட்டுகிறது. பண்டிகைக் கால விற்பனையின் முதல் நான்கு நாட்களில் ஈ-காமர்ஸ் நிறுவனங்கள் ரூ.24,500 கோடி மதிப்பிலான பொருட்களை விற்றுள்ளன. மூலோபாய ஆலோசனை நிறுவனமான RedSeer இன் அறிக்கையின்படி, இந்த காலகட்டத்தில், பெரிய ஈ-காமர்ஸ் நிறுவனங்கள் ஒவ்வொரு நிமிடமும் 1100 மொபைல் போன்களை விற்பனை செய்தன, அதாவது ஒவ்வொரு நொடிக்கும் 18 க்கும் மேற்பட்ட மொபைல் போன்கள் விற்பனையாகின்றன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மொபைல் போன்களின் மொத்த விற்பனை மதிப்பு 11 ஆயிரம் கோடி ரூபாய் ஆகும்.. பிரீமியம் வகை ஸ்மார்ட்போன்கள் அதிக அளவில் விற்பனையாகின்றன.


மொத்தம் 1 கோடி மொபைல் போன்கள் விற்பனையாகும் என எதிர்பார்க்கப்படுகிறது
முதல் நான்கு நாட்களில் 60-70 லட்சம் மொபைல் போன்கள் விற்பனையாகியுள்ளதாக ரெட்சீர் அறிக்கையில் மதிப்பிடப்பட்டுள்ளது. முதல் வாரத்தில் 90 லட்சம் முதல் 10 மில்லியன் ஸ்மார்ட்போன்கள் விற்பனையாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


மேலும் படிக்க | Smartphone: தண்ணீருக்குள் நீச்சலடிக்கும் வாட்டர் ப்ரூப் ஸ்மார்ட்போன்: 3 நாட்கள் சார்ஜ் கேரண்டி 


ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான சாம்சங் இந்தியா இந்த பண்டிகை விற்பனையின் முதல் நாளில், 1000 கோடி ரூபாய்க்கு மேல் மொபைல் போன்களை விற்பனை செய்ததாக தெரிவித்துள்ளது. இந்நிறுவனம் 12 லட்சம் ஸ்மார்ட்போன் கைபேசிகளை விற்பனை செய்துள்ளது. நிறுவனம் கேலக்ஸி சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் விலையை 17 முதல் 60 சதவீதம் வரை குறைத்துள்ளது. சாம்சங் நிறுவனம் Galaxy S20 FE 5G, Galaxy S22 Ultra, Galaxy S22, Galaxy M53, Galaxy M33, M32 Prime Edition மற்றும் Galaxy M13 போன்களின் விலைகளைக் குறைத்துள்ளது.


ஃபேஷன் பிரிவில் 4.5x ஜம்ப்


இது தவிர, பேஷன் பிரிவில் தினசரி சராசரி மொத்த விற்பனை மதிப்பானது, சாதாரண நாள் வர்த்தகத்துடன் ஒப்பிடும்போது 4.5 மடங்கு அதிகரித்துள்ளது. முதல் நான்கு நாட்களில் இந்த வகையில் 5500 கோடிகள் விற்பனையாகியுள்ளது.


மேலும் படிக்க | Flipkart Big Billion Days 2022 Sale: டாப் பிராண்ட் போன்களில் எக்கச்சக்க தள்ளுபடிகள்


24.5 ஆயிரம் கோடி மதிப்பிலான பொருட்கள் விற்பனை செய்யப்பட்டன
“பண்டிகைக் கால விற்பனையின் முதல் நான்கு நாட்களில் அதாவது செப்டம்பர் 22 முதல் 25 வரை, இ-காமர்ஸ் தளங்கள் 24.5 ஆயிரம் கோடி ரூபாய் அல்லது 3.5 பில்லியன் டாலர் விற்பனையை ஈட்டியுள்ளன. இது பண்டிகை விற்பனைக்கான மதிப்பிடப்பட்ட மொத்த விற்பனை மதிப்பில் 60 சதவீதம் ஆகும்". இந்த எண்ணிக்கை இந்த ஆண்டு பண்டிகைக் காலத்தின் விற்பனையானது, எதிர்பார்த்ததை விட சிறப்பாக இருக்கும் என்பதைக் குறிக்கிறது.


தீபாவளி வரை மூன்று தள்ளுபடி விற்பனைகள்  
இ-காமர்ஸ் தளங்கள் தீபாவளிக்கு முன்னதாக, மூன்று பண்டிகை சீசன் விற்பனையை ஏற்பாடு செய்கின்றன. இவற்றில், முதல் விற்பனையானது பொதுவாக மிகப்பெரியது ஆகும். பண்டிகை காலத்தில் மொத்த விற்பனையில் 50 சதவீதத்திற்கும் அதிகமாக முதல் தள்ளுபடி விற்பனையில் ஆகிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க | Flipkart Big Billion Days sale: Poco ஸ்மார்ட்போன்களில் பெரும் தள்ளுபடி 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ