Limit For Keeping Cash AT Home: நாட்டில் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இதன் காரணமாக மக்கள் வீட்டில் பணத்தை வைத்திருப்பதையும் குறைத்துள்ளனர். எனினும், சில அவசர தேவைகளுக்காக நாம் அனைவருமே வீட்டில் ஒரு குறிப்பிட்ட அளவு பணத்தை வைத்திருக்கிறோம். ஆனால், வீட்டில் எவ்வளவு பணம் வைத்திருக்கலாம் என்பது உங்களுக்கு தெரியுமா? வீட்டில் ஒரே நேரத்தில் ரொக்கமாக அதிக பணம் வைத்திருப்பது ஆபத்தா? வீட்டில் பணத்தை வைத்திருப்பதற்கான வரம்பு என்ன? வரம்பிற்கு மேல் பணத்தை வீட்டில் வைத்திருந்தால் என்ன நடக்கும்? இது பற்றிய முழுமையான தகவல்கலை இந்த பதிவில் விரிவாக காணலாம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வீட்டில் பணம் வைத்திருப்பதற்கான விதிகள் (Rules for keeping Cash at Home)


அரசாங்க விதிகளின்படி, வீட்டில் பணத்தை வைத்திருப்பதற்கு வரம்பு இல்லை. ஆனால் உங்களிடம் உள்ள பணத்தின் (Cash) முழுமையான கணக்கையும் நீங்கள் வைத்திருப்பது முக்கியம். அந்த பணம் உங்களுக்கு எங்கிருந்து வந்தது? அதன் வருமான ஆதாரம் என்ன? இப்படிப்பட்ட கேள்விகளுக்கான பதில்களும் ஆதாரங்க்களும் உங்களிடம் இருக்க வேண்டும்.


வரி தொடர்பான ஆவணங்கள் அவசியம்


உங்களிடம் ஒரு பெரிய தொகை ரொக்கமாக இருந்தால், அதற்கு நீங்கள் வரி (Income Tax) செலுத்த வேண்டும். இதனுடன், வரி செலுத்துதல் தொடர்பான அனைத்து ஆவணங்களும் உங்களிடம் இருக்க வேண்டும். இதன் மூலம் வருமான வரித் துறை (Income Tax Department), உங்களிடம் இருக்கும் பணம் தொடர்பாக கேட்கும் கேள்விகளுக்கு நீங்கள் எளிதாக பதிலளிக்க முடியும்.


வருமான வரித்துறையினர் (Income Tax Departmemnt) உங்கள் வீட்டில் சோதனை (Income Tax Raid) நடத்தி அதிக அளவு பணம் மீட்கப்பட்டால், அந்த பணத்தைப் பற்றிய சரியான தகவலை உங்களால் தெரிவிக்க முடியாவிட்டால், நீங்கள் கடுமையான அபராதம் (Fine) செலுத்த வேண்டியிருக்கும். இந்த அபராதம் ரெய்டில் கைப்பற்றப்பட்ட தொகையில் 137 சதவீதம் வரை இருக்கலாம்.


அதாவது எவ்வளவு பணம் வைத்திருந்தாலும் அது கருப்புப் பணமாக இருக்கக் கூடாது, கணக்கில் வராமல் இருக்கக் கூடாது. இவ்வளவு பணம் எங்கிருந்து வந்தது, என்ன ஆதாரம் என்பதற்கான நியாயமான பதில் உங்களிடம் இருக்க வேண்டும்.


மேலும் படிக்க | சேமிப்புக் கணக்கில் இவ்வளவு பணம்தான் இருக்கலாம்: மீறினால் வருமான வரி நோட்டீஸ் வரும்


வீட்டில் பணத்தை வைப்பதற்கான விதிகள் இவைதான்


- ஒரு நிதியாண்டில் (Financial Year) ரூ.20 லட்சத்துக்கு மேல் ரொக்கப் பரிவர்த்தனை செய்தால் அபராதம் விதிக்கப்படும்.


- CBDT -இன் படி, நீங்கள் ஒரே நேரத்தில் 50,000 ரூபாய்க்கு மேல் டெபாசிட் செய்தாலோ அல்லது எடுத்தாலோ பான் எண்ணை (PAN) வழங்குவது அவசியம்.


- ஒரு நபர் ஒரு வருடத்தில் ரூ.20 லட்சம் ரொக்கமாக டெபாசிட் செய்தால், அவர் பான் மற்றும் ஆதார் இரண்டின் தகவலையும் அளிக்க வேண்டும்.


- பான் மற்றும் ஆதார் விவரங்களை வழங்கத் தவறினால் ரூ.20 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும்.


- 2 லட்சத்திற்கு மேல் ரொக்கமாக எந்த பொருளையும் வாங்க முடியாது.


- ரூ.2 லட்சத்துக்கு மேல் ரொக்கமாக கொடுத்து வாங்கினால், பான் மற்றும் ஆதார் அட்டையின் நகல் தேவைப்படலாம்.


- 30 லட்சத்துக்கும் அதிகமான மதிப்புள்ள சொத்துக்களை வாங்குவதும் விற்பதும் விசாரணை அமைப்பின் ரேடாரின் கீழ் வரலாம்.


- உறவினர்களிடம் இருந்து ஒரு நாளில் ரூ.2 லட்சத்துக்கு மேல் ரொக்கமாக பெற முடியாது.


மேலும் படிக்க | வரி செலுத்துவோருக்கு சூப்பர் செய்தி, வருமானம் வந்தாலும் வரி செலுத்த வேண்டாம்!!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ