ஆஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் நகரில் நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டிகளில் பங்கேற்ற அங்கு தங்கியிருந்த இந்திய தடகள விளையாட்டு வீரர்கள் ராகேஷ் பாபு மற்றும் இர்பான் தோடி ஆகிய இருவரும் விளையாட்டு கிராமத்தில் இருந்து வெளியேற காமன்வெல்த் போட்டி நிர்வாகம் அறிவித்துள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

21-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஆஸ்திரேலியாவில் உள்ள கோல்டுகோஸ்ட் நகரில் நடந்து வருகிறது. இந்த போட்டியில் மொத்தம் 71 நாடுகள் பங்கேற்கின்றன. 


இந்நிலையில் காமன்வெல்த் போட்டிகளில் பங்கேற்ற அங்கு தங்கியிருந்த இந்திய தடகள விளையாட்டு வீரர்கள் ராகேஷ் பாபு மற்றும் இர்பான் தோடி ஆகிய இருவரும் விதிமுறைகளை மீறியதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து, அவர்கள் இருவரும் போட்டிகளில் இருந்து வெளியேற்றப்படுவதாக காமன்வெல்த் போட்டி நிர்வாகம் அறிவித்துள்ளது.