நம் வாழ்கயில் நாம் நிறைய செயல்களை செய்து வருகிறோம். அதில் சிலர் கூறுவார் நான் இவருக்காக தர்மம் செய்தேன், வருக்காக இந்த பாவத்தை செய்தேன் என்று. ஆனால், எது தர்மம் எது பாவம் என்பதே பலருக்கு தெரியாது..! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நாம் அனைவரும் நம் முன்னோர்கள் சொல்லி கேள்வி பட்டிருப்போம் தர்மங்களில் 32 வகை உள்ளது. பாவங்களில் பலவகை உள்ளது என்று. அவை பற்று உங்களுக்கு தெரியுமா?.


நாம் 32 வகை தர்மங்கள் மற்றும் பாவங்களை பற்றி பார்க்கலாம்....!


பிற உயிர்கட்குச் செய்யும் புண்ணியங்கள் என 32 வகை தர்மங்கள்  


1. வழிப் போக்கர்கட்குச் சத்திரங்கள் கட்டிவைப்பது.


2. கல்வி கற்கும் ஏழைப் பிள்ளைகட்கு உணவு வசதி அளிப்பது.


3. அறுவகைச் சமயத்தார்க்கும் உணவு கொடுப்பது.


4. பசுவுக்கு வைக்கோலும் புல்லும் வழங்குவது.


5. சிறைச் சாலையில் துன்புறுவோர்க்கு சோறளிப்பது.


6. வீடு தேடி வரும் ஆதரவற்ற ஏழைகட்குப் பிச்சை அளிப்பது.


7. தின்பண்டம் நல்கல்.


8. அறநெறி மேற்கொண்டு வாழும் துறவிகட்குச் சோறளிப்பது.


9. தாய்மைப் பேறுபெற்ற பெண்கட்கு உதவி செய்வது.


10. அனாதைக் குழந்தைகளை எடுத்து வளர்ப்பது.


11. அனாதைப் பிணங்களை அடக்க்கம் செய்வது.


12. வாசனைப் பொருள்களை அளிப்பது.


13. நோயாளிகட்கு மருந்துகள் கொடுத்து உதவுவது.


14. துணிவெளுக்கும் தொழிலாளர்க்கு உதவி செய்வது.


15. நாவிதர்க்கு உதவிகள் செய்வது.


16. ஏழைப் பெண்கட்குச் காசோலை கொடுத்து உதவுவது.


17. ஏழைகளின் கண் நோய்க்கு மருந்து கொடுத்து உதவுவது.


18. தலைக்கு எண்ணெய் கொடுப்பது.


19. திருமணமாகாத ஏழைப் பையனுக்குத் திருமணம் செய்து வைப்பது.


20. பிறர் துன்பம் தீர்ப்பது.


21. தண்ணீர்ப் பந்தல் வைத்து உதவுவது.


22. மடம் கட்டிச் சமய அற்இவை வளர்ப்பது.


23. சாலைகளை அமைத்துக் கொடுப்பது.


24. சோலைகளை உண்டாக்கி வைப்பது.


25. பசுமாடுகள் உடம்பைத் தேய்த்துக் கொள்ள தூண்களை நிறுவுவது.


26. விலங்கினங்கட்கு உணவளிப்பது.


27. ஏறு விடுதல்.


28. விலை கொடுத்து உயிரைக் காப்பாற்றுதல்.


29. கன்னிகாதானம் செய்து கொடுத்தல்.


30. குழந்தைகட்குப் பால் வழங்குதல்.


31. கண்ணாடி வழங்குதல்.


32. அறவைத் தூரியம்.


பாவங்களின் பட்டியல்​..! 


வள்ளலார் பாவங்கள் சிலவற்றைப் பட்டியலிட்டுக் கூறுகிறார்.


1. நல்லவர் மனத்தை நடுங்க வைப்பது.


2. வலிய வழக்கிட்டு மானம் கெடுப்பது.


3. தானம் கொடுப்போரைத் தடுத்து நிற்பது.


4. கலந்த சிநேகிதருள் கலகம் உண்டாக்குவது.


5. மனமொத்த நட்புக்கு வஞ்சகம் செய்வது.


6. குடிமக்களிடம் வரி உயர்த்திக் கொள்ளையடிப்பது.


7. ஏழைகள் வயிறு எரியச்செய்வது.


8. தருமம் பாராது தண்டிப்பது.


9. ஒரு தலைச் சார்பாக வழக்குரைப்பது.


10. உயிர்க் கொலை செய்பவர்க்கு உபகாரம் செய்வது.


11. களவு செய்பவர்க்கு உளவுகள் சொல்வது.


12. பொருளை இச்சித்துப் பொய் சொல்வது.


13. ஆசை காடி மோசம் செய்வது.


14. போக்குவரவு கூடிய வழியை அடைப்பது.


15. வேலை வாங்கிக்கொண்டு குறைப்பது.


16. பசித்தோர் முகத்தைப் பாராமல் இருப்பது.


17. இரப்பவர்க்குப் பிச்சை இல்லை என்பது.


18. கோள் சொல்லிக் குடும்பத்தைக் குலைப்பது.


19. நாட்டாற்றில் கை நழுவுவது.


20. கலங்கி ஒளிந்தவரைக் காட்டிக் கொடுப்பது.


21. கற்பிழந்தவளோடு கலந்துறைவது.


22. காவல் கொண்டகன்னியைக் கற்பழிப்பது.


23. கணவன் வழி நிற்பவளைக் கற்பழிப்பது.


24. கருவைக் கலைப்பது.


25. குருவை வணங்கக் கூசி நிற்பது.


26. குருவின் காணிக்கை கொடுக்க மறுப்பது.


27. கற்றவர் தம்மிடம் கடுகடுப்போடு நடப்பது.


28. பட்சியைக் கூண்டில் பதைக்க அடைப்பது.


29. கன்றுக்குப் பாலூட்டாமல் கட்டி அடைப்பது.


30. ஊன் சுவை உண்டு உடல் வளர்ப்பது.


31. கல்லும் நெல்லும் கலந்து விற்பது.


32. அன்புடையவர்க்குத் துன்பம் செய்வது.


33. குடிக்கின்ற நீருள்ள குளத்தைத் தூர்ப்பது.


34. வெயிலுக்கு ஒதுங்கும் விருட்சத்தை அழிப்பது.


35. பகை கொண்டு அயலவர் பயிர் அழிப்பது.


36. பொது மண்டபத்தைப் போய் இடிப்பது.


37. ஆலயக் கதவை அடைத்து வைப்பது.


38. சிவனடியாரைச் சீறி வைவது.


39. தவம் செய்வோரைத் தாழ்வு சொல்வது.


40. சுத்த ஞானிகளைத் தூஷணம் செய்வது.


41. தந்தை தாய் மொழியைக் தள்ளி நடப்பது.


42. தெய்வம் இகழ்ந்து செருக்கு அடைவது.


பாவம் எது புண்ணியம் எது என தெரிந்து கொண்டீர்களா?. இனி பார்த்து செயல்படுங்கள்!!