கர்நாடகா முதலமைச்சராக பாஜக-வின் எடியூரப்பா இன்று காலை பதவியேற்றுள்ளார். இது குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில்,


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பாஜக-வின் பகுத்தறிவற்ற செயலால், போதிய பெரும்பான்மை இல்லாத நிலையிலும், கர்நாடகாவில் பாஜக ஆட்சியமைத்திருப்பது அரசியலமைப்பின் கேலிக்கூத்தாக்கி உள்ளது. இந்த காலைப் பொழுதில் வெற்று வெற்றியை பாஜக கொண்டாடிக் கொண்டிருக்கிறது. ஜனநாயகத்தின் தோல்வியை கண்டு இந்தியா வருந்தும். என ட்விட் பதிவிட்டுள்ளார்.


 



 


 


கர்நாடகாவில் இன்று காலை எடியூரப்பாவின் பதவி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் உச்சநீதிமன்ற இறுதிக்கட்ட தீர்பினையடுத்து அமைச்சரவை பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.


கர்நாடகாவில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை பலம் கிடைக்கவில்லை. பாஜக 104 தொகுதிகளில் வென்று தனிப் பெரும் கட்சியாக உள்ளது. 78 இடங்களில் வென்ற காங்கிரஸ், 38 தொகுதிகளில் வென்ற மஜத உடன் இணைந்து ஆட்சி அமைக்க உரிமை கோரியது. பெரும்பான்மை பலம் உள்ள தங்களை தவிர்த்து, பாஜகவை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்தால், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என்று காங்கிரஸ் ஏற்கனவே கூறியிருந்தது.


இதையொட்டி பாஜகவைச் சேர்ந்த எடியூரப்பாவை முதல்வராக பதவியேற்கும்படி, கர்நாடகா ஆளுநர் அழைப்பு விடுத்தார். 


அதையடுத்து காங்கிரஸ் மூத்த தலைவரும், வழக்கறிஞருமான அபிஷேக் மனு சிங்வி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். இதை அவசர வழக்காக விசாரித்த சுப்ரீம் கோர்ட் எடியூரப்பா பதவியேற்புக்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும் ஆதரவு எம்.எல்.ஏ.,க்களின் கடிதங்களை நாளை காலை 10 மணிக்குள் எடியூரப்பா தாக்கல் செய்ய வேண்டும் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டனர்.


இன்று காலை எடியூரப்பாவின் பதவி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிலையில் இதற்க்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கர்நாடக சட்டப்பேரவை முன்பு முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டுள்ளனர்.