டெல்லி ஜாகிர் நகர் பகுதியில் சுமார் 55 வயது ஆண் மற்றும் அவரது மனைவி இருவரும் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

டெல்லி ஜாகிர் நகர் பகுதியை சேர்ந்தவர் ஷமீம். தற்போது வேலை இன்றி ஆதரவற்ற நிலையில் தன் மனைவியுடன் வசித்து வந்தார். இந்நிலையில் இன்று காலை பூட்டப்பட்ட இவரது வீட்டினுள் இவர் தன் மனைவியுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.


இன்று காலை இத்தம்பதியரின் மகன் வீட்டிற்கு வந்தபோது, வீட்டின் கதவினை திறக்க கூறி போன் செய்கையில் யாரும் போனை எடுக்காத நிலையில் அவர் கதவினை உடைத்து உள்ளே சென்றுள்ளார்.


அப்போது வீட்டினுல் ஷமீம் மற்றும் அவரது மனைவி பினமாக இருப்பதை கண்ட அதிர்ந்துள்ளார். பின்னர் இதுகுறித்து டெல்லி காவல்துறைக்கு தகவல் அளிக்கப்ட்டுள்ளது. 


இதுகுறித்து காவல்துறை தரப்பில் தெரிவிக்கையில்... இருவரும் தற்கொலை செய்துக்கொண்டு இருக்கலாம் என சந்தேகிப்பதாகவும், எனினும் மரணம் குறித்து கண்டறிய சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.