பீகார் மாநிலத்தின் சாகர்ஸா பகுதியில் உள்ள மருத்துவமனையில் மின்சாரம் இல்லாததால் டார்ச் லைட் உதவியுடன் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பீகார் மாநிலத்தில் நிதீஷ் குமார் தலைமையிலான ஜனதா தளம் கட்சி ஆட்சி செய்து வருகிறது. இங்கு, பீகார் மாநிலத்தின் சஹார்சா எனும் பகுதியில் செயல்பட்டு வரும் சர்தார் மருத்துவமனையில், இன்று சாலை விபத்தில் சிக்கி பலத்த காயத்துடன் பெண் ஒருவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.



அப்பெண்ணுக்கு ஆபரேஷன் செய்யும் சமயத்தில் திடீரென மின்சாரம் தடைப்பட்டது. மருத்துவமனையில் ஜெனரேட்டர் வசதியில்லாத காரணத்தால் பெண் ஒருவர் டார்ச் லைட் அடிக்க மருத்துவர் அறுவை சிகிச்சை செய்யும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்தச் சம்பவம் குறித்து, சர்தார் மருத்துவமனை அதிகாரிகள் எவ்வித விளக்கங்களையும் முன்வைக்கவில்லை.


பீகார் மாநிலத்தில் தொடர்ந்து இதுபோன்ற சம்பவங்கள் நிகழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.