கடந்த 2014-ம் ஆண்டு நடந்த மலேசிய விமானம் சூட்டிற்கும், எங்களுக்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை என்று ரஷ்ய ஜனாதிபதி புதின் தகவல் தெரிவித்துள்ளார். அந்த ஆண்டில் நிகழ்ந்த போராட்டத்துக்கு பின்னர் உக்ரைனில் இருந்து பிரிந்த கிரீமியா ரஷ்யாவுடன் இணைந்தது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பின்னர், அதே ஆண்டு ஜூலை 17ம் தேதி 298 பயணிகளுடன் சென்ற எம்எச்-17 என்ற விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதில் அனைவரும் பலியாகினர்.  இதையடுத்து, நெதர்லாந்தின் வெளிவிவகாரத்துறை அமைச்சர், ரஷ்யாவை குற்றம் சாட்டினார்.


இந்நிலையில், தற்போது இதற்கு விளக்கம் அளித்துள்ள ரஷ்ய அதிபர் புதின், கடந்த 2014-ம் ஆண்டு நடந்த மலேசிய விமானம் சூட்டிற்கும், எங்களுக்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை என்றார். 


இக்குழுவின் அறிக்கைப்படி, ரஷ்யாவின் விமான எதிர்ப்பு ஏவுகணை பிரிவிலிருந்து தான் பக்டெலர் ரக ஏவுகணை ஏவப்பட்டு விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.